முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரம்- 1.

செவ்வாய்: உத்திரம்- 4.

Advertisment

புதன்: பூரம்- 3.

குரு: பரணி- 3.

சுக்கிரன்: ஆயில்யம்- 1 (வ).

சனி: சதயம்- 1 (வ).

dd

ராகு: அஸ்வினி- 1.

கேது: சித்திரை- 3.

கிரக மாற்றம்:

ஆவணி 18 (4-9-2023) மேஷ குரு வக்ர ஆரம்பம் (இரவு 7.31).

ஆவணி 18 (4-9-2023) சுக்கிரன் வக்ரநிவர்த்தி (காலை 6.45).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மீனம்

3-9-2023 காலை 10.38 மணிக்கு மேஷம்.

5-9-2023 மாலை 3.00 மணிக்கு ரிஷபம்.

7-9-2023 இரவு 11.13 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் நன்றாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வெளிபொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றமுடியும். புதிய யுத்திகளை பயன்படுத்தி ஏற்படும் மறைமுக பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதி யுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒருசிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் யோகமும் உள்ளது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சூரியன், பஞ்சம ஸ்தானமான 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைப்பளு அதிகரித்து உங்களது ஓய்வு நேரம் குறையும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குருபகவான் திங்கட்கிழமைமுதல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பொருளாதாரப் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து படிப்படியான வளர்ச்சியினை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகமிக உத்தமம். சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் பரிபூரண வெற்றியைத் தந்து மனமகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தற்போதைக்கு அவசரப்பட்டு மற்றவர் களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பிறரால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் ஒருசில இடையூறுகள் இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் சமாளிப்பீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பெண்கள்வகையில் வழியில் வீண்செலவுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கு வழிவக்கக் கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

tt

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சூரியன் சேர்க்கைப்பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் இருப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பெண்கள்வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர் கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த ஒரு பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் தற்சமயம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம்கூட படிப்படியாக குறையும். முக்கிய முடிவுகள் எடுக்கின்றபொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த வீண் மருத்துவச்செலவுகள் குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமானநிலை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு மற்றவர்கள் ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறமுடியும். குரு, சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், கடந்த கால நெருக்கடிகள் விலகி லாபங்கள் அடையக்கூடிய அமைப்பு ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகநிலை ஏற்படும். வங்கிமூலம் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே பேச்சில் சற்று பொறுமையோடு இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சூரியன் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய பலமும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலமும் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உடன் இருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகமிக நல்லது. நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடி களை உண்டாக்கக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படவேண்டும். திங்கட்கிழமை முதல் 9-ல் உள்ள குரு வக்ரகதியில் சந்திப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். அரசு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்களை சற்று அனுசரித்து செல்வது மிக மிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தையும் எடுத்த பணியையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் பணியில் சிறப்பாக செயல்படமுடியும். உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துகொள்வது, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் உங்களுக்கு தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் இருக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 8-ல் ராகு சஞ்சரிப்ப தாலும் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பண பற்றாக்குறை ஏற்பட்டாலும் உங்களுடைய தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள் என்றாலும் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகப்படியாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் வேலையாட்களை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகமிக நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் மன நிம்மதி இருக்காது. சக ஊழியரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும், லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதும் நன்மை தரும்.

rr

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும், லாபஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப் பாக இருந்து அனைத்து தேவை களும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வருகின்ற நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்துவந்த பணியெல்லாம்கூட தற்போது முடித்துவிட முடியும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் எதிலும் செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு அனுகூலமும் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகமும் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்புவரும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் மறக்கமுடியாத நாட்களாக இருக்கும். செவ்வாய் மாலை, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்று வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங் களையும் நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்துவந்த தேக்க நிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் தீர்க்கமுடியாத பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய பாராட்டுதலை பெறமுடியும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை பெறக்கூடிய யோகங்கள் உங்களுக்கு உண்டு. வெள்ளி, சனிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், மன நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகமிக நல்லது. பைரவர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதுமூலம் கெடுதிகள் குறையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய யோகங்கள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார தேவைகள் குறித்த நேரத்தில் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் வருகின்ற நாட்களில் நடக்கும். சட்ட ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது படிப்படியாக விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். சர்ப கிரகமான கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத் தில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். பங்காளியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு நடந்துகொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பதும், உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவதும் நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் மிகச் சிறப்பான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. அலைச்சல் காரணமாக மன அமைதி குறைவு உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் குரு வரும் திங்கட்கிழமைமுதல் வக்ரம் பெற இருப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் சற்றுக்குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை குறைத்துக்கொள்ளமுடியும். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று நிதானத்தோடு நீங்கள் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்கள் சொல்ல வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்குவழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்ப தாலும் உங்களுக்கு இருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பு களை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை எட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டா கும். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால் வீண் சிக்கல்களை குறைக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் அதிகாரியிடம் வீண்வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் சந்திரன் அணுகூலமாக சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியும். முருகவழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது நன்மையை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண ரோகஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பு என்பதால் பல்வேறு அணுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் ஒருசில அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி- செய்து கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளிநபர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக குறைந்து ஒரு சுமூகமான நிலை உண்டாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பதும், உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல் படுவதும் நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் மிகவும் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகருக்கு சூரத் தேங்காய் உடைப்பது நன்மையை தரும்.