முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 4.

செவ்வாய்: திருவோணம்- 4.

Advertisment

புதன்: பூரட்டாதி- 1.

குரு: பரணி- 2.

சுக்கிரன்: அவிட்டம்- 1.

dd

சனி: சதயம்- 3.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

கிரக மாற்றம்:

மாசி 24 (7-3-2024) மீன புதன் (காலை 9.35).

மாசி 24 (7-3-2024) கும்ப சுக்கிரன் (பகல் 10.47).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- விருச்சிகம்.

4-3-2024 மாலை 4.21 மணிக்கு தனுசு.

6-3-2024 இரவு 8.28 மணிக்கு மகரம்.

8-3-2024 இரவு 9.20 மணிக்கு கும்பம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சூரியன்- சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பலனடைய இருக்கிறீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடிக்க முடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பெரியோர்களுடைய பாராட்டுதலைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகள்வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். இந்த வாரத்தில் வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், மனநிம்மதி குறைவு ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய யோகம் உண்டாகும். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நற்பலனைத் தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் வரும் நாட்களில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தக்க நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மாதக்கோளான சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நேரத்துக்கு சாப்பிடுவது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்டால் விரைவில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது, தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்ககூடிய நேரம் என்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது தற்போதைக்கு சிறப்பு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் நீங்கள் ஒரு புதிய முயற்சி ஈடுபட்டால் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திங்கட்கிழமை பிற்பகலுக்குப் பின்பு, செவ்வாய், புதன்கிழமைகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் இந்த வாரத்தில் 9, 10-ல் ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறும். தனக்காரகன் குருபகவான் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய சிறப்பான செயல்பாட்டால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகத்தோடு இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய யோகமும், விரும்பிய பதவி உயர்வுகளை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்துவகைகள் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு கால நேரத்தில் பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மையை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு நீங்கள் செயல்பட்டாலும் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரவுகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தேக ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்வதுமூலம் பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் ஏற்படக்கூடிய தேவையற்ற நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலை எடுக்கலாம். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய சூழ்நிலை, அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது தற்சமயத்துக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். 9-ஆம் தேதியன்று சனிக்கிழமை நீங்கள் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது, முருகப்பெருமானுக்கு அர்ச்சனைச்செய்வது நன்மையைத் தரும்.

t

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகமிக நன்றாக இருந்து சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களிடம் கோபப்படாமல் பொறுமையோடு இருப்பது, வயதில் மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கக்கூடிய அமைப்பும் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய அனுகூலங்களும் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளுடைய ஆதரவை பெறமுடியும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் பரிசுகளை வெல்லக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மையைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ஒரு ராசியில் நீண்டகாலம் தங்கும் கிரகமான சனி, சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். குறிப்பாக உங்களுக்கு இருந்து வரக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பண வரவுகள் மிகமிக தாராளமாக இருந்து அனைத்து தேவையிலும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இருந்த மன கவலைகள் எல்லாம் குறையும். போட்டி, பொறாமைகள் குறைந்து தொழில்ரீதியாக நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு தற்போது சற்று குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். செவ்வாய் 5-லும், ராகு 7-லும் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள்மீது பழிச் சொற்களை சொன்னா லும் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் யாரும் உங்களை ஒன்னும் பண்ணமுடியாது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்துவிட்டு படிப்பில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீண்டநாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்களைத் தற்போது செயல்படுத்த முயற்சித்தால் எளிதில் வெற்றி கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை யன்று மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, சரபேஸ்வரர் வழிபாடு செய்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் இந்த வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி உண்டாகும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், உங்கள் உழைப்புக்கான ஊதியங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை எல்லாம் தற்போது குறைவதால் பணியில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் உயர் படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பணவரவுகள் சிறப்பாக இருந்து வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இந்த வாரத்தில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, விநாயகப் பெருமானுக்கு சூரத்தேங்காய் உடைப்பது நன்மையைத் தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒரு காரியத்தை நீங்கள் சுலபமாக முடித்துவிடலாம் என்று நினைப்பீர்கள் ஆனால் அது தாமதமாகி உங்கள் மன அமைதியைக் குறைக்கும். குருபகவான் தற்போது 6-ல் இருப்பதால் பண விஷயத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்க்கிற உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காத காரணத்தால் அன்றாட செலவுகளை கையாள்வதற்குகூட நெருக்கடியான நிலை ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். தொழில் நிறுவனத்தில் எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதுமட்டுமின்றி உடன் இருப்பவர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச் சொற்களை சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை பொழுதுபோக்குகளை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். வியாழக்கிழமை களில் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது, பிரத்தியங்கராதேவி வழிபாடு மேற்கொள்வதும் நன்மையைத் தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்கள் வரும் நாட்களில் கிடைக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் வரும் நாட்களில் கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 3-ஆம் வீட்டில் இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். கடினமான செயல்களைகூட உங்கள் தனித்திறமையால் மிகச் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் கள நிலவரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்களை தீட்டி அதில் லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி ஒரு நல்ல நிலையினை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் பெரியோர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் வெளி நபர்களால் அனுகூலமான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபமேற்றுவதன்மூலம் நன்மையை அடைய முடியும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். ராகு 3-ல் இருப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பலனை அடையமுடியாது என்பதால் எதிலும் முன்னெச் சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. போட்டி, பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். கூட்டாளிகளை ஆலோசித்து செயல்பட்டால் அவர்களின் உதவியால் ஒருசில பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை பேச்சைக் கேட்காமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத் தோடு இருக்கவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. பிரதான கிரகங்கள் அனுகூலமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச்சேர்க்கைகள் கிடைத்து அதன்மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சற்று குறைத்துக்கொள்ளமுடியும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத பிரச்சினைகள் மேலோங்கி குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார்- உறவினர் களிடம் வீண் பேச்சை குறைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனுகூலங்கள் தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது பழிச் சொற்களை சொல்வார்கள். குறிப்பாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனத்தை செலுத்துவது, முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால்தான் நல்ல மதிப்பெண்களைப்பெற முடியும். ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் மிகவும் நிதானத்தோடு இருக்க வேண்டும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக இருப்ப தால் திடீரென்று பண உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசி அதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக அமையபெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் ஏற்படும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து கௌரவமான நிலையினை அடைவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சில நேரங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் அடையமுடியும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமைவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒருசில நேரங்களில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி உண்டாகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது நற்பலனைத் தரும்.