இந்த வார ராசிபலன் 3-12-2023 முதல் 9-12-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-3-12-2023-9-12-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அனுஷம்- 4.

செவ்வாய்: அனுஷம்- 3.

புதன்: மூலம்- 3.

குரு: அஸ்வினி- 4 (வ).

சுக்கிரன்: சித்திரை- 4.

சனி: சதயம்- 1.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

ff

கிரக மாற்றம்: இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கடகம்

3-12-2023 இரவு 9.35 மணிக்கு சிம்மம்.

6-12-2023 காலை 10.20 மணிக்கு கன்னி.

8-12-2023 இரவு 9.53 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது பலமும், வலிமையும்கூடக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். புதன் 9லில் இருப்பதால் பொருளாதாரநிலை தாராளமாக அமையப்பெற்று சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, கடந்தகால கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மனநிம்மதி ஏற்படும் நிலை உண்டு. நீண்டநாட்களாக தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் வரும் நாட்களில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள்மூலம் ஒரு அனுகூலமான செய்தியானது உங்களுக்கு கிடைக்கும். மாதக்கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது, வயது மூத்தவர் களிடம் வீண்வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபங்களை அடைய முடியும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த நீண்டநாளைய பொருளாதார நெருக்கடி எல்லாவற்றையும் வரும் நாட்களில் சரி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்கள் ஒரு உயர்வான நிலை யினை அடையும் யோகமும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகளும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலமான பலன்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். முருக வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நன்று.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு 12-ல் சஞ்சரித் தாலும் வக்ரகதியில் உள்ளதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் இழப்புகளை குறைக்க முடியும். உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி யாகும். பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வண்டி, வாகனங்கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கேது 5-ல் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பணிநிமித்தமாக ஒருசிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகரீதியாக ஏற்படும் அலைச்சல் காரணமாக உங்களின் ஓய்வுநேரம் குறையும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

மாத கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் உங்களின் செல்வம், செல

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அனுஷம்- 4.

செவ்வாய்: அனுஷம்- 3.

புதன்: மூலம்- 3.

குரு: அஸ்வினி- 4 (வ).

சுக்கிரன்: சித்திரை- 4.

சனி: சதயம்- 1.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

ff

கிரக மாற்றம்: இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கடகம்

3-12-2023 இரவு 9.35 மணிக்கு சிம்மம்.

6-12-2023 காலை 10.20 மணிக்கு கன்னி.

8-12-2023 இரவு 9.53 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது பலமும், வலிமையும்கூடக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். புதன் 9லில் இருப்பதால் பொருளாதாரநிலை தாராளமாக அமையப்பெற்று சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, கடந்தகால கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மனநிம்மதி ஏற்படும் நிலை உண்டு. நீண்டநாட்களாக தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் வரும் நாட்களில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள்மூலம் ஒரு அனுகூலமான செய்தியானது உங்களுக்கு கிடைக்கும். மாதக்கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது, வயது மூத்தவர் களிடம் வீண்வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபங்களை அடைய முடியும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த நீண்டநாளைய பொருளாதார நெருக்கடி எல்லாவற்றையும் வரும் நாட்களில் சரி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்கள் ஒரு உயர்வான நிலை யினை அடையும் யோகமும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகளும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலமான பலன்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். முருக வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நன்று.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு 12-ல் சஞ்சரித் தாலும் வக்ரகதியில் உள்ளதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் இழப்புகளை குறைக்க முடியும். உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி யாகும். பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வண்டி, வாகனங்கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கேது 5-ல் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பணிநிமித்தமாக ஒருசிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகரீதியாக ஏற்படும் அலைச்சல் காரணமாக உங்களின் ஓய்வுநேரம் குறையும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

மாத கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புண்டு. குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் அரங்கேறி மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் கடந்தகால மனக்கசப்புகள் எல்லாம் விலகி மனநிம்மதி உண்டாகும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரித்து உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். சமுதாயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் போட்டிகள் எல்லாம் குறைந்து நீங்கள் அடைய நினைத்த இலக்கை அடைவீர்கள். தொழில் முன்னேற்றத் திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லநிலையை அடைவீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்து முடிக்கமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று எதிர்பாராத லாபங்களை அடைவீர்கள். சுப செய்திகள் தேடிவரும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் மன தைரியத்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் மனைவி, பிள்ளைகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் குரு வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து எந்தவித நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வதும், பயணங்களில் கவனமாக இருப்பதும் நல்லது. எளிதில்முடிய வேண்டிய காரியங்கள்கூட தாமதமாகக்கூடிய நிலையும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சரியில்லாத காரணத்தால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவீர்கள். பெரிய முதலீடுகொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். பிறர் சொல்வதை கேட்காமல் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் வரும் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மேல் குறிப்பிட்ட நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது மிகவும் நல்லது.

tt

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவுகள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக்குறைவு, நெருங்கிய உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேற்றுமை ஏற்படும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. குரு ஜென்ம ராசி, 3, 5 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பாராதவகையில் உதவிகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையிருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் போட்டி, பொறாமைகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது. பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருந்தாலும் உழைப்பிற்கான பலனை விரைவில் அடைவீர்கள். வரும் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலமான பலன்களை அடையமுடியும். நீங்கள் இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களின் உதவியால் மனநிம்மதி பெறுவீர்கள். மாதக்கோளான சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவது மட்டுமில்லாமல் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் விலகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும். குரு 8-ல் இருப்பதால் ஆடம்பரச்செலவுகளை மட்டும் குறைத்துக்கொள்வது நல்லது. ராசி அதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப் பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீங்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறமுடியும். வரும் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடு வது போன்ற அனுகூலப்பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அன்றாட தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். நீங்கள் வாங்கிய கடன்களை அடைக்கும் அளவிற்கு பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களுக்கு இருந்த சின்னசின்ன உடம்பு பாதிப்புகள் எல்லாம் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சூரியன், செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரும் நாட்களில் ஏற்படலாம் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை எட்டும் வாய்ப்பு உண்டு. உங்களின் கடின உழைப்பால் நல்ல லாபத்தை பெற்று மனநிம்மதி அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தற்போதைக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் ஒரு உயர்வான நிலையை எட்டமுடியும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பாராத அனுகூலங்களை பெறும் வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கி தருவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண்வாக்குவாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சனி 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறு, பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் நிதானத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஒருசில பண உதவிகள் கிடைத்தாலும் உங்கள் சக்திக்கு மீறி வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத இடையூறுகள், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். வேலையாட்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் சொல்லும் பழிச்சொற்களால் மேலதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகம் உண்டு. குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது நன்று.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சிறப்பான பொருளாதாரநிலை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய யோகம் உண்டு. முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும் கௌரவப் பதவிகளும் உங்களை தேடிவரும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, இரவு பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முழுமையாக மறைந்து மன நிம்மதியுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். சில நபர்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் முழுமையாக விலகி தொழிலில் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது, சூழ்நிலைக்கு தக்கவாறு நீங்களே தொழிலில் நேரடியாக இருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படும் நேரம் என்பதால் மனநிம்மதியுடன் எதிலும் செயல்படுவீர்கள். அதிகாரியிடம் பேசுகின்றபோது மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பும் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. ஞாயிற்றுகிழமையன்று தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவுகள் ஏற்படும். சிவஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் எளிதில் நிறைவேறும். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய உள்ளீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிட்டும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலைப்பளு எல்லாம் வரும் நாட்களில் குறையும். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்கள் மீது இருந்த வீண்பழி சொற்கள் எல்லாம் முழுமையாக விலகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதாலும், 12-ல் புதன் சஞ்சரிப்பதாலும் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுகொடுத்து செல்வது நல்லது. வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். வரும் திங்கள், செவ்வாய், புதன் முற்பகல் நேரங்களில் வீண் குழப்பமும், தேவையற்ற பிரச்சினைகளும் அதிகரிக்கும். சனிக்கிழமையன்று விரதமிருந்து சனிபகவானுக்கு அர்ச்சனைசெய்வது, எள் தீபமேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணுவை வழிபடுவது கெடுதிகளை குறைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஏழரைச்சனி நடப்பதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரக்கூடிய உங்களுக்கு இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு 10-ல் மாத கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 9-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்லமுன்னேற்றத்தை அடையமுடியும். உங்களுக்குள்ள மறைமுகப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் உதவியால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். அசையாச் சொத்துவகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் காலநேரம் பார்க்காமல் குறிப்பாக வேலையாட்களை எதிர்ப்பார்க்காமல் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் நல்ல லாபத்தை எட்டமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிகவும் நன்றாக இருக்கும். வேலைப்பளு காரணமாக மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்தாலும் அதற்கான சன்மானத்தை அடையமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராதவகையில் பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களின் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைசெய்வது, தட்சிணா மூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிக மாக தவிர்ப்பது நல்லது. சூரியன், செவ்வாய் 9-ல் இருப்பதால் பங்காளி வகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு தக்கவாறு பொறுமையாக நடந்துகொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளைத் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டால் குரு வக்ரநிவர்த்திக்கு (31-12-2023) பிறகு உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. புதன் 10-ல் இருப்பதால் ஒருசில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் மனநிம்மதி குறைவுகள், ஓய்வு இல்லாத நிலை ஏற்படும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் விரைவில் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும். சனிக்கிழமை உங்கள் மன நிம்மதி குறையும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது, துர்க்கைக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

bala081223
இதையும் படியுங்கள்
Subscribe