முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சுவாதி- 4.
சந்திரன்: அனுஷம்- 1.
செவ்வாய்: பூசம்- 1.
புதன்: அனுஷம்- 1.
குரு: மிருகசீரிடம்- 1 (வ).
சுக்கிரன்: கேட்டை- 3.
சனி: சதயம்- 4 (வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்:
7-11-2024 தனுசு சுக்கிரன் அதிகாலை 3.31 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
5-11-2024 காலை 9.45 மணிக்கு தனுசு.
7-11-2024 மாலை 5.53 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 4-ல், சூரியன் 7-ல், புதன் 8-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகக்கூடிய நேரம் ஆகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களது கையிருப்பு குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். சில நேரங்களில் வேலையாட்கள் உதவியை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக தலையிட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஒருசிலருக்கு பணிநிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும். பிறரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவை யற்ற நட்புகளைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலம் உங்களுக்கு உள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நேரமாகும். எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல் பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றக் கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு உள்ள வேலைப்பளு குறையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் கள்மூலமாக தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத் தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் ஒருசில எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்பத்தில் ஒருசில சாதகப் பலன்கள் ஏற்படக் கூடிய நேரமாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டா லும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கை யுடன் செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்க முடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர் கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. அதிக வேலைப்பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித் துச் செல்வதன் மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப் பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்ப்ப வர்களுக்கு விரைவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உங்களது முன்னேற்றத்திற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பேச்சில் பொறுமையோடு இருந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 8, 9.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய நேரம் ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கக்கூடிய அமைப்பு, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். நவீனகரமான பொருட்களை தொழில் முன்னேற்றத்திற்காக வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். மற்றவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் கால நேரம் பார்க்காமல் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், வரும் புதன்கிழமைமுதல் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் கோபத்தை குறைத்துக்கொள்வது உத்தமம். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது பேச்சுத் திறமை காரணமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய அமைப்பு, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். அரசு வழியை நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களால் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைவதால் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன்மூலம் உங்கள் பணிகளில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் பிறர் பேச்சைக்கேட்டு ஏமாறாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத் தில் கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரன் 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் அனுகூலம், பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியினை அடையக்கூடிய நேரம் என்றாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்படக்கூடிய நேரம் என்றாலும் அதிகாரியிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது தற்போதைக்கு உத்தமம். மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமென்றாலும் நண்பர்களிடம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, கால பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 8, 9.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி குரு தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் மனம் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. புதன்கிழமைமுதல் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்ப தால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியா பாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர் பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அதிக வேலை பளு காரண மாக அலைச்சல், உடல் அசதி உண்டாகும். பெண்கள் வழியில் ஒருசில அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் களைப் பெறக்கூடிய நேரமாகும். முருக வழி பாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்த வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன் களைப் பெறுவீர்கள். ஒருசில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கின்ற நல்ல மாற்றங்கள் தற்போது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவி யர்கள் பெற்றோர்களிடம் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது ஏற்றத்தைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 8, 9.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் புதன், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்ப தால் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்களின் குடும்ப தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நீங்கள் வாங்கிய கடன் களை குறைத்துக் கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அரசுவழி உதவி களைப் பெறக்கூடிய நேரமாகும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் எதிலும் நிம்மதியுடன் செயல் படமுடியும். பூர்வீகச் சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினை எல்லாம் தற்போது தீர்ந்து மனநிம்மதி ஏற்படும். ஒரு பெரிய மனிதர் களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட் களாக தீர்க்கமுடியாமல் இருந்த ஒரு பிரச் சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கக்முடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய நேரமாகும். தேக ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமா கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6, 7.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது தற்போதைக்கு நல்லது. குறிப்பாக உறவினர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங் களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 8, 9.