முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 1.
செவ்வாய்: திருவாதிரை- 4.
புதன்: அஸ்தம்- 1.
குரு: மிருகசீரிடம்- 2.
சுக்கிரன்: சுவாதி- 2.
சனி: பூரட்டாதி- 1(வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்
1-10-2024 மாலை 4.02 மணிக்கு கன்னி.
4-10-2024 அதிகாலை 5.05 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்ககூடிய அமைப்பும், தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. உடன்பிறந்தவர்கள்மூலமாக ஆதாயம் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப் பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதன் 5-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் திறமை யோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சற்று ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். பெண்கள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையக்கூடிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நபர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 1.
செவ்வாய்: திருவாதிரை- 4.
புதன்: அஸ்தம்- 1.
குரு: மிருகசீரிடம்- 2.
சுக்கிரன்: சுவாதி- 2.
சனி: பூரட்டாதி- 1(வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்
1-10-2024 மாலை 4.02 மணிக்கு கன்னி.
4-10-2024 அதிகாலை 5.05 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்ககூடிய அமைப்பும், தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. உடன்பிறந்தவர்கள்மூலமாக ஆதாயம் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப் பாக செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதன் 5-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் திறமை யோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சற்று ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். பெண்கள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையக்கூடிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நபர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சாதகமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசிலருக்கு உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, சில நேரங்களில் எந்த ஒரு காரியத்திலும் வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக இருந்து செயல்படுவதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து போட்ட முதலை எடுக்கக்கூடிய ஒரு அமைப்பை தரும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். நீங்கள் மேற்கொள்ளக் கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலம் ஏற்றங்களை பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி யிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒருசில நேரங்களில் சிறுசிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு நேரப் பயணங்களை முடிந்தவரை தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனபடுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன்பணிபுரிபவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற இடையூறுகள் காரணமாக படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 4, 5.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களுடைய தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் புதிய திட்டங்களை தீட்டி வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஒரு நிலையும் உண்டாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய ஒரு பலம் உங்களுக்கு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்த ஒருசிலருக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய யோகம் வரும் நாட்களில் இருக்கிறது. வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். பணவிஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஒருசில ஆதாயங்களை பெறுவீர்கள். குரு 8-ல் மறைந்திருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட புதிய முயற்சிகளைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக நிலைமையை சமாளித்து ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளிகள்வகையில் தேவையில்லாத மனஸ்தாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலையும் அதன்காரணமாக குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் உங்கள் உடனிருப்பவர்கள் உங்களை மாற்று பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 4, 5.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தாராள தன வரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து சுமூக நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், தொழில் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை செய்யக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு வேலைப்பளு சற்றுக்குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைவதால் மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்று குறையும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண்செலவுகளை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றா லும் மற்றவர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பதன்மூலம் படிப்பில் சிறந்து விளங்கமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறக் கூடிய நேரமாகும். சுக்கிரன் 10-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள்போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழிலில் உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நீங்கள் நிம்மதியுடன் தொழில்புரியக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் அமையும். கடந்த காலங்களில் உங்களுக்கு அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது முழுமையாக குறைந்து பணியில் நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, வெங்கடேச பெருமாளை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரம் ஆகும். நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. குருபகவான் 4-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக தடைப்படும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள், அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் ராகு, 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங் கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்போதைக்கு தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டும். முடிந்தவரை கூட்டாளியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் உங்களுடைய கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, முடிந்தவரை உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது தற்போதைக்கு உத்தமம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பழிச்சொல்லை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.