முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 2.
செவ்வாய்: சுவாதி- 4.
புதன்: சுவாதி- 4.
குரு: பரணி- 2 (வ).
சுக்கிரன்: பூரம்- 4.
சனி: அவிட்டம்- 4 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்:
ஐப்பசி 13 (30-10-2023)
ராகு- மீனம், கேது- கன்னி (மாலை 4.40).
ஐப்பசி 17 (3-11-2023)
கன்னி- சுக்கிரன்
(அதிகாலை 5.13).
ஐப்பசி 18 (4-11-2023)
சனி வக்ர நிவர்த்தி (பகல் 1.39).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மேஷம்
30-10-2023 காலை 10.28 மணிக்கு ரிஷபம்.
1-11-2023 மாலை 4.10 மணிக்கு மிதுனம்.
4-11-2023 அதிகாலை 1.23 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 12-ஆம் வீட்டிற்கும், கேது 6-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுப்பாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது, கையிருப்பை கொண்டு செலவுசெய்வது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது உத்தமம். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்து வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களின் தனித் திறமையால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படகூடிய நேரமென்பதால் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத் தோடு செயல்பட்டால் குறித்த நேரத்தில் உங்கள் வேலையை முடிக்க முடியும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 11-ஆம் வீட்டிற்கு மாற இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இந்த வம்பு, வழக்குகள், நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். குருபகவான் 12-ல் சஞ்சரித்தாலும் வக்ர கதியில் உள்ளதால் சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஒருசிலருக்கு வீடு, மனை போன்றவற்றை வாங்குவதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அதில் அனுகூலங்கள் ஏற்படும். ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலம் சிறப்பான ஆதாயங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான ஆதாயங்களைத் தற்போது அடைவீர்கள். அரசுவழி அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை விரிவு படுத்துவதற்கான செயல்களைத் தற்போது மேற்கொண்டால் அதில் அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வினை அடைவீர் கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தின் தொடர்பானது கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, படிக்கும் மாணவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 2.
செவ்வாய்: சுவாதி- 4.
புதன்: சுவாதி- 4.
குரு: பரணி- 2 (வ).
சுக்கிரன்: பூரம்- 4.
சனி: அவிட்டம்- 4 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்:
ஐப்பசி 13 (30-10-2023)
ராகு- மீனம், கேது- கன்னி (மாலை 4.40).
ஐப்பசி 17 (3-11-2023)
கன்னி- சுக்கிரன்
(அதிகாலை 5.13).
ஐப்பசி 18 (4-11-2023)
சனி வக்ர நிவர்த்தி (பகல் 1.39).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மேஷம்
30-10-2023 காலை 10.28 மணிக்கு ரிஷபம்.
1-11-2023 மாலை 4.10 மணிக்கு மிதுனம்.
4-11-2023 அதிகாலை 1.23 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 12-ஆம் வீட்டிற்கும், கேது 6-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுப்பாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது, கையிருப்பை கொண்டு செலவுசெய்வது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது உத்தமம். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்து வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களின் தனித் திறமையால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படகூடிய நேரமென்பதால் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத் தோடு செயல்பட்டால் குறித்த நேரத்தில் உங்கள் வேலையை முடிக்க முடியும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 11-ஆம் வீட்டிற்கு மாற இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இந்த வம்பு, வழக்குகள், நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். குருபகவான் 12-ல் சஞ்சரித்தாலும் வக்ர கதியில் உள்ளதால் சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஒருசிலருக்கு வீடு, மனை போன்றவற்றை வாங்குவதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அதில் அனுகூலங்கள் ஏற்படும். ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலம் சிறப்பான ஆதாயங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான ஆதாயங்களைத் தற்போது அடைவீர்கள். அரசுவழி அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை விரிவு படுத்துவதற்கான செயல்களைத் தற்போது மேற்கொண்டால் அதில் அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வினை அடைவீர் கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தின் தொடர்பானது கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, படிக்கும் மாணவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். 11-ல் உள்ள குரு வக்ர கதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக கடுமை யான நெருக்கடி, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இடையூறுகள் ஏற்படும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்து வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் தான் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து ஏற்றத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. கூட்டாளி களை மட்டும் அனுசரித்து சென்றுவிட்டால் போட்ட முதலீட்டினை எடுத்துவிடமுடியும். வெளிநபர்களிடம் தொழிலைப்பற்றி பேசாமல் இருப்பது நல்லது. கொடுக் கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தற்போது தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய உடனிருப்பவர்களே இடையூறுகளை செய்வார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மேலதிகாரி கள் சொல்படி நடந்துகொள்வது உத்தமம். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் வரும் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்பட்டு உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். சூரியநமஸ்காரம் மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடு வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் நிதானமாக இருப்பது, குறிப்பாக தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக் கக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 9-ஆம் வீட்டிற்கும், கேது 3-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதுமூலம் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறைந்து எடுக்கும் முயற்சியில் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி வக்ரகதியிலும், 10-ல் குரு வக்ரகதியிலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கும் நெருக்கடிகளைக் குறைத்துக்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் நடக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல் பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட் கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்காத பணிகளை எல்லாம் வருகின்ற நாட்களில் முடித்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு காரணமாக அலைச்சல், உடனிருப்பவர் களிடம் சிறிது மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் உழைப்புக் கான ஆதாயங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் தற்போதைக்கு வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், செவ்வாய், புதனுடன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். குரு 1, 3, 5-ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வதால் நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். சனி 7-ல் உள்ளதாலும் வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 8-ஆம் வீட்டிற்கும், கேது 2-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பதும், குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சிறிது காலம் தள்ளிவைப்பதும் நல்லது. உடல் ரீதியான பிரச்சினைகள், அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தற்போது நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு ஒரு முதலீடாக மாறி விரைவில் நற்பலனை உங்களுக்கு ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்களுடைய வேலையையும் நீங்கள் செய்யவேண்டிய ஒரு இக்கட்டான நிலை இருந்தாலும் நிலைமையை சமாளித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்வது நல்லது. வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பாராதவகையில் இனிய மாற்றங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, பணவிஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 6-ல் உள்ள சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராகு- கேது 1, 7-க்கு மாறுதல் ஆவதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, குறித்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது. ஒருசிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது, ஒரு சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்படுவதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு குழப்பிக்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் நிதானத் தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்கள் பிரச்சினைகள் குறையும். ஞாயிறு, திங்கள் காலை நேரங்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படும் என்பதால் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஆண்டுக்கோளான குரு 7-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவில் தேவையற்ற தேக்கம், நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் பணம் கைக்கு கிடைக்காத நிலை ஏற்படும். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 6-ஆம் வீட்டிற்கும், கேது 12-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் குடும்பத்தில் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும் என்றாலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒரு சில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து ஒரு நல்லநிலையை எட்டமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருந்து நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்யமுடியும். போட்டிகள் அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் நிதானத்தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் தற்போது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை நீங்கள் அடைவீர்கள். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற மனகுழப்பங்கள், ஆரோக்கிய குறைவு கள் ஏற்படும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான நிலையினை அடைவீர்கள். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் ஒற்றுமை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், சிறப்பான உடலமைப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். கடந்தகால வம்பு, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவதும், தூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பொதுவாக எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது உத்தமம். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 5-ஆம் வீட்டிற்கும், கேது 11-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். கடந்த காலங்களிலிருந்து வந்த பொருட்தேக்கங்கள் எல்லாம் விலகிபோட்ட முதலீட்டைவிட நல்ல லாபத்தினை ஈட்டமுடியும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அதனை உங்களின் சாதூர்யமான செயல்பாடுகளால் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள்கூட கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் தேடிவரும். நீங்கள் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமானப் பலன்களை அடையமுடியும். புதன் பிற்பகல், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்தகால வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். குடும்பத்திற்கு தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவானது தக்க நேரத்தில் கிடைப்பதால் கடினமான பணியைகூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத் தின்மூலம் ராகு 4-ஆம் வீட்டிற்கும், கேது 10-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதுமூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது உடல் ஆரோக்கிய மானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அரசுவழி அதிகாரிகளுடைய உதவியானது சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக இருந்த பொருட் தேக்கங்கள் விலகி நீங்கள்போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபங்களை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகமானநிலை உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை தற்போது முழுமையாக அடைவீர்கள். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டங் கள் உண்டு. சனிக்கிழமை தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள்செய்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் அரங்கேறி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக விலகி நிம்மதி உண்டாகும். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் ராகு 3-ஆம் வீட்டிற்கும், கேது 9-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் உங்களுக்குள்ள அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். சனி 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றா லும், வெளிநபர்கள் செய்யும் செயல்களால் தேவையற்ற நிம்மதி குறைவு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களெல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறக்கூடிய யோகம் உண்டு. தொழிலுக்காக நவீன கருவிகள் வாங்கும் வாய்ப்பு, அசையா சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய யோகம் ஏற்படும். ஒரு பெரிய மனிதனுடைய ஆதரவு உங்களுக்கு கிடைப்பதால் உங்களின் நீண்டநாளைய நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் திறமைகளை வெளிக்காட்ட சாதகமான நிலை ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக ஒரு அனுகூலமான செய்தியானது உங்களுக்கு கிடைக்கும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் மிகவும் அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்பு உண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கக்கூடிய நேரமாக இருக்கும். ஒரு பெரிய இடத்து நட்புமூலம் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய யோகம், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய நீண்டநாள் விருப்பங்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் பூர்த்தியாகும். வரும் 30-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத் தின்மூலம் ராகு 2-ஆம் வீட்டிற்கும், கேது 8-ஆம் வீட்டிற்கும் மாற இருப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. தற்போது சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் சனி வக்ரகதியில் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள்கூட படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உங்களை நாடிவரும். வேலையாட்களால் சிறுசிறு இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த வீண் பழிச்சொற்கள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். ஒருசிலருக்கு வெளிமாநில தொடர்புகள்மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத் தோடு செயல்படுவது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு செயல்படுவதன்மூலம் தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்படும் நெருக்கடி களால் மனநிம்மதி குறைவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்துடன் செயல்படுவது, பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் தேவையில்லாத நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் பணி சுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். பங்காளியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்ற காரணத்தால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி அடை வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.