முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 2.
செவ்வாய்: ரோகிணி- 2.
புதன்: பூராடம்- 2.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: சதயம்- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 1.
கேது: சுவாதி- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
30-1-2023 அதிகாலை 2.45 மணிக்கு ரிஷபம்.
1-2-2023 பகல் 2.00 மணிக்கு மிதுனம்.
4-2-2023 அதிகாலை 2.30 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் மதிப்பும் மரியாதையும் மேலோங் கும். எதிலும் மதிநுட்பத் துடன் செயல்பட்டுப் பல் வேறு வெற்றிகளைக் குவிப் பீர்கள். லாப ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருந்து சகலவிதத்திலும் அனு கூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கிருந்த நெருக்கடி கள் விலகி மகிழ்ச்சியுண் டாகும். கொடுத்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்ற முடியும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிரிகள் கூட நட்புடன் பழகும் நிலை யுண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களைப் போட்டு நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். வேலை யாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணங்கள் தற்போது பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக் குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைப்பதால் எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்துமுடிக்க முடியும். நீண்டநாட்களாக புதியவேலை எதிர்பார்த்தவர்களுக்கு விரும்பிய இடத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக, சஞ்சரிப்பதால் உங்களுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் முழுமையான வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு கள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் உச்ச கேந்திரமான 10-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங் களும் உங்களைத் தேடிவரும். ராசிக்கு 6-ல் கேது, 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும் அதிர்ஷ்டமுண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்த மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியுண்டாகும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன் படுத்தி நல்ல லாபத்தை அடையும் வாய்ப்பு, புதிய ஆர்டர்களைப் பெறக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும். வெளியிடங்கள்மூலமாக நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி யளிக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எதையும் எளிதில் கையாளக்கூடிய பலம் ஏற்படும். உடன்வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, மகாவிஷ்ணு வழிபாடு நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். சக்திக்குமீறிய வீண்செலவுகள், எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அதற்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களது அமைதியைக் குறைப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங் களில் மிகவும் கவனத் தோடு செயல்படவும். உங்கள் ராசியாதிபதியான புதன் 7-லும், சுக்கிரன் 9-லும் சஞ்சரிப்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் குடும்பத் தேவைகளை சமாளிக்கும் பலமேற்படும். தொழில், வியாபாரத்தில் முக்கிய விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தால் நிலைமையை சமாளிக்கலாம். மறைமுகப் போட்டிகள், எதிர்பாராத நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொண்டு இலக்கை அடைவீர் கள். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நன்று. வெளியூர்ப் பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத் துடன் இருந்து, வீண் பேச்சைக் குறைத்தால் பிரச்சினைகளை சமாளிக்க லாம். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் சாதகமாக இருப்பதால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லா மல், அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல செய்தி கிடைக்கும். ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வயதில் மூத்தவர் களிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். போட்ட முதலீட்டை எளிதில் எடுக் கும் பலமேற்படும். வேலையாட்கள் ஒத்து ழைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் சிறப் பாக செயல்பட்டு நல்ல லாபங்களைப் பெறும் வாய்ப்புண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது தற்போதைக்கு நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வாகனங்கள் மூலமாக செலவுகள் ஏற்படலாம். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்திரன் உங்கள் ராசிக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் நிறைவேறும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, மகாலட்சுமி வழிபாடு மிகவும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர்கள். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கடந்தகாலப் பிரச்சினைகளை சமாளித்து உயர்வான நிலையை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல் படமுடியும். பணவரவுகள் சாதகமாக இருந்தாலும், குரு 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலமென்பதால், முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். உங்கள் ராசிக்கு 3, 9-ல் கேது, ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்களும், நவீன யுக்திகளைப் பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச்சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப் பவர்கள் கடினமான பணிகளைக்கூட சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். நீங்கள் விரும்பும் இடமாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, மகாவிஷ்ணு தரிசனம்மூலம் சங்கடங்கள் குறையும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகலவிதமான சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்புண்டு. வம்பு வழக்குகள் இருந்த இடம்தெரியாமல் மறையும். நண்பர்கள்மூலம் ஆதாயமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் வாங்கிய கடன்களைத் தற்போது பைசல் செய்யமுடியும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் அனைத்திலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் மேலதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் தனித்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிதரும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரனின் சிறப்பான சஞ்சாரத்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலமடையும் வாய்ப்புள்ளது. துர்க்கை வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கடந்தகால சோதனைகள் குறையும். ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. ஒருசிலருக்கு கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்குமென கூறமுடியாது. ஒவ்வொரு பணியிலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் கடினமான பிரச்சினைகளைக்கூட சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். மற்றவர்கள் செய்யவேண்டிய பணிகளைக்கூட நீங்கள் செய்யக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். பணியில் தற்போதைக்கு கவனமாக செயல்பட்டால் விரைவில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். முருக வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவு மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங் கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலம் அனுகூலம், நவீனகரமான பொருட் களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். அசையா சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன் படுத்தி நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். புதிய வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும், எதையும் சமாளித்து நல்ல நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குறிப்பாக ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து சிக்கல்களும் குறையும். கடந்தகால சோதனைகள் மறைந்து, பட்ட அவமானங்கள் குறைந்து கௌரவமான நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குத் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு உயர்வான நிலையை எட்டமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் முழுமையாக விலகி நிம்மதியுண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் பொருளாதாரரீதியாக ஏற்றம் தரக்கூடிய நாட்களாக இருக்கும். பிரத்தியங்கரா தேவி வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். சனி, குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், நேரத்திற்கு சாப்பிடுவதும் பிரச்சினைகளைக் குறைக்கும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளால் நிம்மதி குறையும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவை யற்ற கோரிக்கைகளை வைத்து நெருக்கடி களைத் தருவார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பணவரவுகள் தொழிலில் இருக்காது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு அதிகப்படியாக இருக்கும். உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைக் கூறுவார்கள். முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள், இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பிரதான கிரகங்கள் அனுகூல மற்றிருந்தாலும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உண்டாகும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களைச்செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால், தேவையற்ற நெருக்கடிகள் சில ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். உடன்பிறந்தவரிடம் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது உத்தமம். பிள்ளைகள்வகையில் அனுகூலங்களும், பூர்வீக சொத்துகளால் ஒருசில ஆதாயங்களை அடையும் யோகமும் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் நல்ல லாபங்களை அடைவீர்கள். வேலையாட்கள் சிறுசிறு பிரச்சினைகளைத் தந்தாலும் நீங்கள் முழுமூச்சுடன் செயல்பட்டு எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாள் நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைக்கப்பெற்று, உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடந்தகால சோதனைகள் விலகி நிம்மதி ஏற்படும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால், இந்நாட்களில் தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு, முருகனுக்கு அர்ச்சனைச் செய்வது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் முழுமூச்சுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் திறன் கிடைக்கும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எனவே ஆடம்பரத்தைக் குறைத் துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் பெரிய பிரச்சினைகளைக்கூட எளிதில் சமாளிக்கும் பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது மட்டுமல்லாமல் மறைமுக நெருக்கடிகள் குறையும். புதிய ஆர்டர்கள் கிடைத்து நல்ல லாபங்களை அடையும் வாய்ப்புண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும், பெரிய தொகைகளைத் தற்போதைக்கு ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டுகொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறையும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண வெற்றிகிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உக்ர தெய்வங்களை வழிபடுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.