முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 1.
செவ்வாய்: பூசம்- 3.
புதன்: பரணி- 2.
குரு: அஸ்வினி- 3.
சுக்கிரன்: புனர்பூசம்- 3.
சனி: சதயம்- 2.
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்:
வைகாசி 16 (30-5-2023) கடக சுக்கிரன் (இரவு 7.38).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
29-5-2023 காலை 8.55 மணிக்கு கன்னி.
31-5-2023 மாலை 6.30 மணிக்கு துலாம்.
2-6-2023 இரவு 12.28 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ராசியாதிபதி செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் இருப்ப தால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனு பவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களாலேயே மன அமைதிக் குறைவு ஏற்படலாம் என்பதால் உடனிருப்பவர்களிடம் பேசுகின்றபொழுது நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. பிள்ளைகள்வழியில் ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அமைப்புகள், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் மறைமுகப் போட்டிகளை சமாளித்து நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை சிறப் பாக செய்துமுடிக்க கூடிய வாய்ப்புகளும் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையக்கூடிய சூழலும் வரும் நாட்களில் உண்டு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றியினைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், விரய ஸ்தானமான 12-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றா லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும் என்பதால் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். இக்கட்டான நிலையில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப் பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாகத் தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒவ்வொரு செய-லும் நீங்கள் கவனமாக செயல்பட்டால்தான் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் இருந்தவந்த பிரச்சினைகள் விலகுமென்றாலும் பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்க வும். அசையும்- அசையா சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச் சுமை கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் உடன் வேலை செய்பவருடைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய நாட்களாக அமையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1,
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 1.
செவ்வாய்: பூசம்- 3.
புதன்: பரணி- 2.
குரு: அஸ்வினி- 3.
சுக்கிரன்: புனர்பூசம்- 3.
சனி: சதயம்- 2.
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்:
வைகாசி 16 (30-5-2023) கடக சுக்கிரன் (இரவு 7.38).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
29-5-2023 காலை 8.55 மணிக்கு கன்னி.
31-5-2023 மாலை 6.30 மணிக்கு துலாம்.
2-6-2023 இரவு 12.28 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ராசியாதிபதி செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் இருப்ப தால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனு பவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களாலேயே மன அமைதிக் குறைவு ஏற்படலாம் என்பதால் உடனிருப்பவர்களிடம் பேசுகின்றபொழுது நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, புதன் சஞ்சரிப்பதாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. பிள்ளைகள்வழியில் ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல அமைப்புகள், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் மறைமுகப் போட்டிகளை சமாளித்து நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை சிறப் பாக செய்துமுடிக்க கூடிய வாய்ப்புகளும் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையக்கூடிய சூழலும் வரும் நாட்களில் உண்டு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றியினைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், விரய ஸ்தானமான 12-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றா லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும் என்பதால் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். இக்கட்டான நிலையில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப் பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாகத் தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒவ்வொரு செய-லும் நீங்கள் கவனமாக செயல்பட்டால்தான் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் இருந்தவந்த பிரச்சினைகள் விலகுமென்றாலும் பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்க வும். அசையும்- அசையா சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச் சுமை கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் உடன் வேலை செய்பவருடைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய நாட்களாக அமையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், ராகு, குருவுடன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஒவ்வொரு செய-லும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். கடந்தகாலங்களில் இருந்துவந்த உடல் உபாதைகள் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் குறையும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட உங்கள் பொருட் களுக்கு அதிகப்படியான விலை கிடைக்கும். வேலையாட்களுடைய கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலமுண்டாகும். சட்ட ரீதியாக இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையக்கூடிய அமைப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணிக்கான சன்மானம் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள்மீதிருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகளின் ஆதரவிருப்பதால் எடுத்த வேலையை சிறப்புடன் செய்து முடிப்பீர் கள். புதிய வேலைவாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு நல்ல இடத்தி-ருந்து அழைப்பு வரும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பொருளா தாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறைந்து மன மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப் பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். உங்கள் சக்திக்கு மீறிய எதிர்பாராத செலவுகள் சில நேரங்களில் ஏற்படலாமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் காரணமாக நியாயப்படி கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு எதிர்பார்க்கா மல் ஒவ்வொரு செய-லும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் நற்பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங் கள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங் களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீங்கள் சரிவர பணிபுரிந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். பொறுமையோடு செயல் பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடைபெற்று உங்களுக்குள்ள சிக்கல்கள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தனகாரகன் குருபகவான் தன ஸ்தானாதிபதியான புதன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப் பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல இடத்தி-ருந்து வரன் அமைந்து நிம்மதி உண்டாகும். மற்றவர் களுக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றமுடியும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய அமைப்புகள் உண்டு. தொழில், வியாபாரத் தில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். நீண்டநாட்களாக உங்களுக் குள்ள கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். திறமை வாழ்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் நிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாம-ருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கூட்டாளியிடம் பேசுகின்றபொழுது சிந்தித்துப் பேசுவது வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், பிறரால் முடிக்கமுடியாத பணிகளை நீங்கள் செய்து நல்லபெயர் எடுக்கக்கூடிய யோகங்களும் வரும் நாட்களில் உண்டு. நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சிறப்பான அமைப்பென்பதால் சகல சௌபாக்கியங் களையும் அடையும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், பெண்கள்வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலையாட்கள் உங்களுக்கு மிகமிக ஆதரவாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெ-வரி செய்யமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை வரும் நாட்களில் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த வீண் வம்பு வழக்குகள் தற்போது குறைந்து நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் வரும் நாட்களில் கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும் நாட்களாக இருக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9, 10-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியை குரு பார்ப்பதாலும் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். எந்தவொரு செய-லும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தன வரவுகள் ஏற்படும். செவ்வாய் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் விலகி ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். கடந்த காலங்களில் இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் தற்போது குறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசிக்கு தன லாபாதிபதியான குரு, புதன் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. சனி 4-லும், சூரியன் 7-லும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடியவேண்டிய செயல்கள் தாமதமாகக்கூடிய நிலை, நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். வாகனங் கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. தொழில், வியாபாரத் தில் ஒவ்வொரு செய-லும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காது. வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். போட்ட முதலை எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எந்த ஒரு வேலையிலும் நீங்களே முன்நின்று செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளக்கூடிய மனவ-மை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமல்லாமல் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழல் உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் வளமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு- புதன் சேர்க்கைப்பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடிவரும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் கடந்தகால கடன்களை படிப்படியாக பைசல் செய்யமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் கைகூடும். சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறக்கப் போகிறது. தொழிலை மேம்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிதரும். புதிய கிளைகளை நிறுவமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பும், சம்பள உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக குறைந்து பணியில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்ப தால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் தற்போது குறையும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதாலும், 4-ல் ராகு, குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு உறவினரிடம் மனஸ்தாபம் உண்டாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்பட்டு உங்களுடைய சேமிப்புகள் குறையும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தடங்கல்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் மனநிம்மதி குறையும். உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பணியும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் வீண்வாக்குவாதங்கள் உண்டாகும் நேரமென்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங் களில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு பார்வை 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, திருமண சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைத்து அதன் மூலம் உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து கடந்தகால பிரச்சினைகள் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில் தொடர்பான தகவல்களை வெளிநபர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வேலையாட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ஒவ்வொரு செய-லும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடன் வேலை செய்பவர்கள் சிறுசிறு நெருக்கடிகளைத் தந்தாலும் நீங்கள் அனைத்தையும் சமாளித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு அனுகூலமான நாட்களாக இருக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குரு 2-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் மிகவும் சாமர்த்தியமாக சில முடிவுகளை எடுத்து வளமான பலன்களைப் பெறக் கூடிய யோகங்கள் வருகின்ற நாட்களில் உண்டு. சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாம-ருந்த பிரச்சினைகள் தீரக்கூடிய அமைப்பும், உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும் வரும் நாட்களில் உண்டு. பெண்கள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலை, உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அமைப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில்ரீதியாக நீங்கள் எதிர்பார்த்ததைவிட அனுகூலமான நிலையும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் இவ்வாரத்தில் ஏற்படும். உங்களுக்கு இருந்த சட்டரீதியான சிக்கல்களுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் நிறுவனத் திற்கு நவீன கருவிகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வெளியூர் பயணங்களும் அதன்மூலம் பொருளாதார ஆதாயங்களும் கிடைக்கும். படித்துமுடித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவனத்தி-ருந்து அழைப்புவரும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்குவழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது மிகவும் நல்லது.