முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 1.
செவ்வாய்:
உத்திரட்டாதி- 1.
புதன்: ரேவதி- 2.
குரு: கிருத்திகை- 1.
சுக்கிரன்: அஸ்வினி- 2.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: ரேவதி- 2.
கேது: அஸ்தம்- 4
கிரக மாற்றம்:
சித்திரை 18 1-5-2024 ரிஷபம் குரு (பகல் 1.00).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- தனுசு.
30-4-2024 காலை 10.36 மணிக்கு மகரம்.
2-5-2024 பகல் 2.32 மணிக்கு கும்பம்.
4-5-2024 மாலை 4.38 மணிக்கு மீனம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தற்போது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் புதன்கிழமைமுதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்- ஆசிரியரின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதில் அனுகூலப் பலன்களை அடைவதற்கான யோகம் உண்டு. மேலும் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மையைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ராகு, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பொறுமையைக் கடைப்பிடித்தால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்பதால் ஒருசில நேரங்களில் ஒருசில செயல்களை நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். தேவையற்ற பயணங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் உழைப்புக்கான ஆதாயத்தை பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கேது 5-ல் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை சற்று தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் முற்பகல் காலத்தில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், செவ்வாய், ராகு சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட் கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் குறித்த நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்து நற்பெயர் எடுக்கமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர் பார்க்கக்கூடிய உதவிகளையும் உத்தரவுகளையும் வரும் நாட்களில் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கடந்த ஒரு வருடகாலமாக 10-ல் சஞ்சரித்த குருபகவான் வரும் புதன்கிழமைமுதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு வளமான பலன் களைப் பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவரிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்காது என்பதால் நீங்கள் முழு முனைப் புடன் செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய எதிர்ப்புகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த வீண் பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி மன அமைதி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையை அடையமுடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நல்லவாய்ப்புகளும், எதிர்பாராதவகையில் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். வியாழன் பிற்பகல், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தேவையில்லாத அலைச்சல், வீண் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியால் ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள்மூலமாக தேவை யில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்துச் செயல்பட்டால் அடையவேண்டிய அனுகூலங்களை அடையலாம். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நன்மை தரும். புதிய திட்டங்களை செயல்படுத்துகின்றபொழுது அனுபவம்வாய்ந்த நபர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்துவது நல்லது. ஒருசிலருக்கு புதிய எந்திரங்கள் வாங்குவதற்காக அதிக செலவுகளை செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று பக்குவத் தோடு நடந்துகொள்வது நல்லது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணிகளில் நீங்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந்தவித நெருக்கடியும் சமாளித்து உங்களுடைய தேவைகளை எளிதில் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். வரும் சனிக்கிழமை மதியத்திற்குபிறகு புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும், சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கடந்த ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 1-ஆம் தேதி புதன்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். தற்போது இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள்கூட இருந்த இடம் தெரியாமல் மறையும். நண்பர்கள் மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது சற்று பக்குவத்தோடு நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக உடல் ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு வரும் நாட்களில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து வாழக்கூடிய ஒரு உன்னத நிலை உண்டாகும். உங்களின் நீண்டநாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக குறையும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் பெண்கள்மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் கண்ணியமான வாழ்க்கையை வாழமுடியும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மையைத் தரும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என எண்ணமுடியாது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்புகள் உண்டு. அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் தேவையற்ற அவப்பெயர்களை தவிர்க்கமுடியும். இந்த வாரத்தில் வரும் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் தொழில்ரீதியாக நல்ல ஒரு உயர்வினை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். கடந்த ஒரு வருடகாலமாக 6-ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 1-ஆம் தேதிமுதல் 7-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். சனி 4-ல் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் சில இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தங்கள் செயல்களில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராதவகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். பொருளாதார நிலை மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறையும். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது வேகத்தை குறைத்துவிட்டு பொறுமையோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்க தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்ககூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர்களுக்கு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் செயல்பாடுகளுக்கு நல்ல ஒரு ஆதரவும் எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவ வழிபாட்டை மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் நடக்கும். கடந்த ஒரு வருட காலமாக 4-ல் சஞ்சரித்த குருபகவான் வரும் புதன்கிழமைமுதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நல்லவாய்ப்புகளையும் வளமான பலன்களையும் பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மனநிம்மதி குறைவு எல்லாம் விலகி மனதில் சந்தோஷம் ஏற்படும் அளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித் திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது இருக்கக்கூடிய வேலைப்பளு எல்லாம் குறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் உழைப்புக்கான தக்க சன்மானம் தற்போது கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் படிப்படியாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சற்று கவனம் செலுத்தினால் அனுகூலங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். சிவவழிபாடு செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்று வதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். நீங்கள் நல்லதாக பேசினாலும் உடனிருப்பவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் கவனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினை களை தவிர்க்கமுடியும். சில விஷயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் இக்கட்டான நேரத்தில் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் தேவையில்லாத பழிச் சொற்களை உங்கள்மீது சொல்வார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று கவனத்தோடு நடந்துகொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பழக்க வழக்கங்களில் சற்று கவனத்தோடு இருப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக இருப்பதால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். பிரித்தியங்கராதேவி வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் வரும் 1-ஆம்தேதி முதல் 3-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று யோசித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது எதிர்காலத்துக்கு நல்லது. ஒருசிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி கிடைக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். சின்ன வாய்ப்பாக இருந்தாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதோர் சூழ்நிலை இருக்கும் என்றாலும் அதிகாரியிடம் பேசுகின்போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களை நம்பாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பக்குவமாக நடந்துகொள்வதன்மூலம் பெற்றோர்- ஆசிரியருடைய ஆதரவை பெறமுடியும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நற்பலனை உங்களுக்குத் தரும்.