முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 2.
செவ்வாய்: பூராடம்- 4.
புதன்: பூராடம்- 4.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: மூலம்- 4.
சனி: சதயம்- 2.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
(1-2-2024) மகர புதன் (பகல் 2.23).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
30-1-2024 அதிகாலை 1.44 மணிக்கு கன்னி.
1-2-2024 பகல் 2.32 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன்- செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தருவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்டநாட்களாக விரும்பிய வாய்ப்புகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் மிக மிக சாதகமாக இருப்பதால் மேற்கொண்ட நாட்களில் புதிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால் அதில் பரிபூரண வெற்றியினை அடையமுடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மையைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாயுடன் 8-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களை செல்கின்றபொழுது பொறுமை யைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். சனி 10-ல் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டி போகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக் காது. தொழில் தொடர்பான விஷயங் களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு உறவினர்கள்மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். குறிப்பாக முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்கள
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாதசாரம்:
சூரியன்: திருவோணம்- 2.
செவ்வாய்: பூராடம்- 4.
புதன்: பூராடம்- 4.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: மூலம்- 4.
சனி: சதயம்- 2.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
(1-2-2024) மகர புதன் (பகல் 2.23).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
30-1-2024 அதிகாலை 1.44 மணிக்கு கன்னி.
1-2-2024 பகல் 2.32 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன்- செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தருவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்டநாட்களாக விரும்பிய வாய்ப்புகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் மிக மிக சாதகமாக இருப்பதால் மேற்கொண்ட நாட்களில் புதிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால் அதில் பரிபூரண வெற்றியினை அடையமுடியும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மையைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாயுடன் 8-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களை செல்கின்றபொழுது பொறுமை யைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். சனி 10-ல் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டி போகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக் காது. தொழில் தொடர்பான விஷயங் களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு உறவினர்கள்மூலம் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். குறிப்பாக முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். பெண்கள் வழியில் ஆதாயங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட் களுக்கு நல்லவிலை கிடைத்து சிறப்பான லாபங்களை அடைய முடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைக்கு தற்போது முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. நெருங்கியவர்களிடம் சற்று கவனத்தோடு பழகினால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தைரியத்தோடு எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வெளியூர்மூலம் ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு தக்கவாறு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். போட்டிகள் இருந்தாலும் நீங்கள் திறமையோடு செயல்படுவீர்கள். வேலையாட்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய காலமாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் மற்றவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூல மான பலன்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலம் உங்களுக்கு உள்ள சங்கடங்கள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சுக்கிரன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். குரு பகவான் 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் குறைந்து தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய அதிகாரிகள் தற்போது இடமாறி செல்வதால் பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப் பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர் உடைய பாராட்டுதலை பெறுவீர்கள். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடந்தகால பிரச்சினைகள் குறைந்து, சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ராசியாதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் சிக்கனமாக செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை பெறலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழில் நிறுவனத்தில் இணைவதால் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் உற்சாகத்துடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி னால் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு இருந்துவந்த சங்கடங்கள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்துவழியில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் விலகி தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். கடந்தகாலங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளைத் தற்போது நிறைவேற்றமுடியும். வேலையாட்களால் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிதரும். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் முழுமையான வெற்றியைத் தரும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெண்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகளைப் பெறக்கூடிய யோகம் உண்டு. மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் நிலைமையை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். வேலைக்கு செல்பவர்கள் நீங்கள் திறமையாக செயல்பட்டாலும் உடன்வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வயது மூத்தவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியின் பாராட்டுதலை பெறுவீர்கள். ஒருசிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். கடந்தகாலங்கள் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவச் செலவுகள் எல்லாம் குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு ஒரு சாதகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக சந்திப்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரத்தில் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் சிக்கனத்தோடு செயல்படவேண்டும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடியில் இருந்தாலும் உங்களின் மனதைரியத்தால் எதையும் எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் தேவையற்ற போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்லவாய்ப்புகள் கடைசி நேரத்தில் தடைப்படும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக தூரப் பயணங்களைத் தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடியவேண்டிய செயல்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு அனுகூலத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஜென்மச்சனி நடைபெற்றாலும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் பொறுமையோடு இருப்பது, கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தாலே பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டுவிட்டு அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் பொறுமை காக்கவேண்டிய நேரமாகும். பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுக்கு மனக்குழப்பம், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நேரமாகும். ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைவதால் மனநிம்மதி ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் தற்போது கிடைத்து உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகளைக் குறைத்துக்கொள்ளமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விளங்குவதால் நீங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக அனுகூலம் தரக்கூடிய நாட்களாக இருக்கும். வியாழன் பிற்பகலுக்குப்பின், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு எதிலும் பொறுமை காப்பது நல்லது. துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.