முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 3.
செவ்வாய்: மிருகசீரிடம்- 1 (வ).
புதன்: கேட்டை- 2.
குரு: உத்திரட்டாதி- 1.
சுக்கிரன்: கேட்டை- 1.
சனி: அவிட்டம்- 1.
ராகு: பரணி- 2.
கேது: சுவாதி- 4.
கிரக மாற்றம்:
கார்த்திகை 17 (3-12-2022) தனுசு
புதன் (காலை 6.47).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
27-11-2022 மாலை 6.05 மணிக்கு மகரம்.
29-11-2022 இரவு 7.50 மணிக்கு கும்பம்.
1-12-2022 இரவு 11.47 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால், எதிலும் சிந்தித்து செயல்படுவது, பேச்சில் பொறுமை யோடு இருப்பது பிரச்சினைகளைக் குறைக்க உதவும். சூரியன், சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பதாலும், விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பணப்பரிமாற்ற விஷயங்களில் யோசித்து செயல்படவேண்டும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் சில இடைத்தரகர்களின் செயல் களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக் காது. எந்தவொரு விஷயத்திலும் நீங்களே முன்னின்று செயல்பட்டால் மட்டுமே எடுத்த வேலைகளைக் குறித்த நேரத் தில் செய்துமுடிக்க முடியும். தேவையற்ற வம்பு, வழக்குகள் ஏற்படும் நேரமென்ப தால் பொறுமையோடு இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தி யாகும். சிவன் தலங் களுக்குச் சென்று வருவது, அஷ்ட லட்சுமி வழிபாடு கெடுதியைக் குறைக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதனுடன் இணைந்து 7-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும் யோகமுண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாம் தற்போது தீர்ந்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலமேற்படும். உடல் ஆரோக் கியம் சிறப் பாக இருந்து எதிலும் சுறு சுறுப்பாக செயல்படு வீர்கள். தொழில், வியாபாரத் தில் மற்றவர் கள் பார்த்து ஆச்சரியப் படும் அளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். நல்ல லாபம் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும், அரசு உத்தரவுகளும் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மன நிம்மதியும், எதிர்பார்த்த உயர்வுகளும் கிட்டும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சியுண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான பணவரவுகள் ஏற்பட்டு நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். முருக வழிபாடு, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு எந்த பிரச்சினையும் எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். விடா முயற்சியுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 10-ல் குரு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். பணப் பரிமாற்ற விஷயத்தில் மிகவும் யோசித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதன்மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அஷ்டமச்சனி நடப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தவிர்ப் பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் வேலையாட் கள் சரிவர ஒத்துழைக்கா விட்டாலும் உங்களின் தனித் திறமையால் எடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வெளிநபர்களிடம் தொழில் விஷயங்களைப் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலமுண்டாகும். வாகனங்கள்மூலமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெற்று மகிழ்ச்சியேற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் குரு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரநிலை சிறப் பாக இருந்து உங்களின் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். சுக்கிரன், புதன் 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உற்றார்- உறவினருடைய ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் அவர்கள்மூலம் ஒருசில அனுகூலப் பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர் கள். தொழில் விருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அதன்மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைத்து மகிழ்ச்சியேற்படும். வேலைப்பளு குறைவதால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு மிகத் திருப்திகரமாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிக்கக்கூடிய பலமுண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நவீன பொருட்களை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச்செய்வது, துர்க்கை வழிபாடு மிகவும் உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் 4-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். சனி 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கிருந்த மறைமுகப் பிரச்சினைகள் முழுமையாக மறைந்து நிம்மதியும், பூரிப்பும் உண்டாகும். சிறப்பான பணவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாகக் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 10-ல் இருப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப் படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு தற்போது அனுகூலமான பலன்களை அடையும் யோகமுண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பேற்படும். உத்தியோகரீதியாக பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், வீண் பழிச்சொற்கள் விலகி நல்லபெயர் எடுக்கும் வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதில் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, பயணங் களில் கவனமாக இருப்பது நல்லது. வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
சூரியன் தனது நட்பு வீட்டில் 3-ல் வலுவாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு சகலவிதத்திலும் ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு பொருளாதார அனுகூலத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தேடித்தரும். பிள்ளைகள்வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் கடந்தகாலங்களில் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகி அனுகூலமான பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் எளிதில் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், நவீன யுக்திகளைப் பயன்படுத்தித் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த வேலைகளை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக புதுப்புது ஆர்டர்கள் கிடைப்பதற்கான யோகமுண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு, துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். வீண் பேச்சைக் குறைப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, எதிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. இதுமட்டுமல்லாமல் தற்போது 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன்மூலம் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும்பொழுது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மற்றவர்களின் தலையீட்டால் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். சந்தைநிலை சற்று சாதகமற்றிருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. போட்டிகள் அதிகரிப்பதால் மன நிம்மதி குறையும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, அதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் ராசிக்கு சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து சங்கடங்கள் குறையும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தருவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிரதான கிரகங்களான குரு, சனி- குறிப்பாக குரு 5-ல், சனி 3-ல் சஞ்சரிப்பது மிகவும் சாதகமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். நீண்டநாட்களாகத் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியடைவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். தேவைகள் யாவும் உடனுக்குடன் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமேற்படும். அசையும்- அசையா சொத்துகள்மூலமும் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நிலம் வாங்கும் வாய்ப்புண்டாகும். சட்டரீதியான சிக்கல்கள் தற்போது குறைந்து மகிழ்ச்சியேற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களையடைவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதமிருப்பது மேலும் வளமான பலன்களை ஏற்படுத்தும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். வரவுக்குமீறிய செலவுகள், வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருக்கவேண்டும். சனி 2-ல் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். வீண் செலவுகளால் கடன்கள்கூட ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் கவனத் தோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங் கள் கிடைக்கும். பெரிய முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்சமயத்திற்குத் தவிர்ப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்கள் பொறுமையோடு இருப்பது, பிறர் பேச்சைக்கேட்டு இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிடாமல் தக்கவைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும். அஷ்டலஷ்மி வழிபாடு, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பது உங்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் சூரியன், சுக்கிரன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத அனுகூலங்களை அடையமுடியும். நெருங்கியவர்களின் உதவியால் நெருக்கடிகள் குறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்களின் தனித்திறமையால் இலக்கை அடைவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைத்து போட்ட முதலீட்டை எடுப்பதற்கான வாய்ப்புகளுண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சரியாக இல்லாவிட்டாலும் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பணவரவுகள் மிக நன்றாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு கேந்திர, திரிகோணாதி பதியான சுக்கிரன், புதன் இணைந்து 10-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். சூரியன் 10-ல் இருப்பதால் கௌரவப் பதவிகள் தேடிவரும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். குருபகவான் 2-ல், ராகு 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் உங்களின் கடன் பிரச்சினைகள் குறையும். கடந்தகால நெருக்கடிகள் குறைவதால் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புண்டாகும். அரசுவழி அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்டநாளைய கனவுகள் நிறைவேறி நிம்மதி ஏற்படும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, விநாயகரை வழிபடுவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப் பாக இருப்பது மட்டுமல்லாமல் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய உன்னதமான நிலை உண்டாகும். செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொண்டு வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைக்கூடும். உற்றார்- உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற் றம் உண்டு. உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலைகிடைத்து வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையிலிருந்த நெருக்கடிகள் குறைந்து பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய நிலையும், மன நிம்மதியும் உண்டாகும். ஒருசிலருக்கு பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைத்து தங்களது வாழ்க் கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். ராகு 2-ல் இருப்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டால் மேலும் வளமான பலன்களை அடையமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, துர்க்கைக்கு தீபமேற்றுவது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது கெடுதியைக் குறைக்கும்.