இந்த வார ராசிபலன் 27-10-2024 முதல் 2-11-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-27-10-2024-2-11-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: சுவாதி- 1.

சந்திரன்: மகம்- 4.

செவ்வாய்: புனர்பூசம்- 4.

புதன்: விசாகம்- 2.

குரு: மிருகசீரிடம்- 1 (வ).

சுக்கிரன்: கேட்டை- 1.

சனி: சதயம்- 4 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

கிரக மாற்றம்:

29-10-2024 விருச்சிக புதன் இரவு 10.38 மணிக்கு

ss

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: சிம்மம்

28-10-2024 இரவு 10.10 மணிக்கு கன்னி.

31-10-2024 பகல் 11.15 மணிக்கு துலாம்.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல் கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் எதிர்பாராத வகையில் சில சட்ட சிக்கல் கள் ஏற்பட்டு உங்களுக்கு பொருளாதார நெருக்கடி கள் உண்டாகும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போது தவிர்ப்பது மிக மிக நல்லது. பெண்கள் வகையில் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பனிச்சுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமாகும். ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத் தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற சிக்கல்கள் உங்களைத் தேடிவரும் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வரும் நாட்களில் வளமான பலன்களை பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1, 2.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். சுக்கிரன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை அடையமுடியும். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினை களுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து பொருளாதார மேன்மைகளை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங் கள் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 31, 1, 2.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: சுவாதி- 1.

சந்திரன்: மகம்- 4.

செவ்வாய்: புனர்பூசம்- 4.

புதன்: விசாகம்- 2.

குரு: மிருகசீரிடம்- 1 (வ).

சுக்கிரன்: கேட்டை- 1.

சனி: சதயம்- 4 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

கிரக மாற்றம்:

29-10-2024 விருச்சிக புதன் இரவு 10.38 மணிக்கு

ss

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: சிம்மம்

28-10-2024 இரவு 10.10 மணிக்கு கன்னி.

31-10-2024 பகல் 11.15 மணிக்கு துலாம்.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல் கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் எதிர்பாராத வகையில் சில சட்ட சிக்கல் கள் ஏற்பட்டு உங்களுக்கு பொருளாதார நெருக்கடி கள் உண்டாகும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போது தவிர்ப்பது மிக மிக நல்லது. பெண்கள் வகையில் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பனிச்சுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமாகும். ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத் தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற சிக்கல்கள் உங்களைத் தேடிவரும் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வரும் நாட்களில் வளமான பலன்களை பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1, 2.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். சுக்கிரன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை அடையமுடியும். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினை களுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து பொருளாதார மேன்மைகளை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங் கள் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 31, 1, 2.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், 6-ல் சுக்கிரன் சஞ்சரிப் பதால் உறவினர்கள்மூலமாக தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு உள்ள பொருளாதார பிரச்சினைகள் சற்று குறைந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லநிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித் துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு சின்னசின்ன நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமை காரணமாக பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் எடுத்த வேலை யைக் குறித்து நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலமும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28.

sd

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத் திலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தா லும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரண மாக தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர் கள். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. புதன் உங்கள் ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத சில உதவிகளால் இருக்கக்கூடிய நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்ள முடியும். பூர்வீகச் சொத்து வகையில் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் சக ஊழியரிடம் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். வேலை நிமித்தமாககூட தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பதுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்ச ரிப்பதாலும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பண வரவுகள் மிகமிக சிறப்பாக இருந்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைப் பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தந்து நிம்மதி ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்கள்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் மிகமிக சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப் பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக் கூடிய நேரம் என்றாலும் தேவையற்ற நெருக்கடி கள் சில ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. கால பைரவரை வழிபாடு மேற்கொள்வது முருகருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 31, 1, 2.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித் துச்செல்வது மிகமிக நல்லது. பொதுவாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதமாகி உங்களது மன அமைதியை குறைக் கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். வண்டி, வாகனங்கள்மூலமாககூட சுபச் செலவுகள் உண்டாகும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத் தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக் கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் வேலை ஆட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக சில காரியங்களில் ஈடுபட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைக்கூட தாமதமாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர் கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். தற்போது உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் குறைத்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். அசையும், அசையா சொத்து களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எதிர் பார்த்த முன்னேற்றங்கள் தற்போது ஏற்பட்டு மன நிம்மதி உண்டாகும். அதிகாரியுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக முடிக்க முடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் களைப் பெற்று பெற்றோர் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1, 2.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். ராசியாதிபதி செவ்வாய் தற்போது 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இதுநாள்வரை இருந்த சின்ன சின்ன உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். வரும் புதன்கிழமைமுதல் புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல் படுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கூட்டாளி களை அனுசரித்துச் செல்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளை எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக் கடிகள் சற்று குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, ராகு காலத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், 10-ல் கேது சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதி பதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலையானது மிகவும் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மன அமைதி உண்டாகும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வேலையாட்கள் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டு மில்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய நேரமாகும். புதிய வாய்ப்பு தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்புவந்து மனமகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய் 8-ல் இருப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1, 2.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதை யும் அதிகரிக்கும். புதன் 10, 11-ல் சஞ்சரிப்ப தால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகவும் சமத்தியமாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூல மான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகரீதியாக நல்லவாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன் களைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவது மட்டுமில்லாமல் பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் தெம்போடும் சுறுசுறுப் போடும் செயல்படுவீர்கள். சூரியன் 9-லும், புதன் 9, 10-லும் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்பு கள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் சற்று குறைந்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்றுக் குறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் மிகை ஆகாது. அதிகாரியின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்ப தாலும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகளைப்பெற்று இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய புதன் வரும் புதன்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல் பட்டால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறை யில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் அனுகூலப் பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை

அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். பிறர் பேச்சைக் கேட்காமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் தேவை யற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் சிவன் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் ஒரு வளமான பலன்களைப் பெறமுடியும். வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30. ப்

bala011124
இதையும் படியுங்கள்
Subscribe