இந்த வார ராசிபலன் 26-3-2023 முதல் 1-4-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-26-3-2023-1-4-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,

இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 4.

புதன்: ரேவதி- 1.

குரு: ரேவதி- 3.

rasipalan

சுக்கிரன்: பரணி- 2.

சனி: சதயம்- 1.

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

பங்குனி 17 (31-3-2023) மேஷ புதன் (பகல் 2.55).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

28-3-2023 அதிகாலை 4.25 மணிக்கு மிதுனம்.

30-3-2023 மாலை 4.15 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகலவிதத்தி லும் வளமான பலன்களைப் பெறுவீர் கள். ராசியாதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்ததை நிறைவேற்றும் யோகம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்துவந்த வீண் பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை அதிகரிக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன், குரு சேர்க்கைபெற்று 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை எட்டும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்து நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். அரசு அதிகாரியிடம் பேசும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பார்கள். பல்வேறு காரியங் களை எளிதில் செய்து முடிக்கும் வாய்ப்புண்டாகும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை, 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம், 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதிகளான சூரியன், புதன் இணைந்து லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால், தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான லாபங்களை அடையமுடியும். வேலையாட் களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும். விரும்பிய இட மாற்றங்களைப் பெற்று குடும்பத்துடன் இணையும் வாய்ப்புகள் உண்டாகும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்று வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம், 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம், 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராச

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,

இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 4.

புதன்: ரேவதி- 1.

குரு: ரேவதி- 3.

rasipalan

சுக்கிரன்: பரணி- 2.

சனி: சதயம்- 1.

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

பங்குனி 17 (31-3-2023) மேஷ புதன் (பகல் 2.55).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

28-3-2023 அதிகாலை 4.25 மணிக்கு மிதுனம்.

30-3-2023 மாலை 4.15 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகலவிதத்தி லும் வளமான பலன்களைப் பெறுவீர் கள். ராசியாதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும், சனி 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்ததை நிறைவேற்றும் யோகம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்துவந்த வீண் பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை அதிகரிக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன், குரு சேர்க்கைபெற்று 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை எட்டும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்து நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். அரசு அதிகாரியிடம் பேசும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பார்கள். பல்வேறு காரியங் களை எளிதில் செய்து முடிக்கும் வாய்ப்புண்டாகும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை, 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம், 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதிகளான சூரியன், புதன் இணைந்து லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். ஒரு பெரிய மனிதனின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால், தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான லாபங்களை அடையமுடியும். வேலையாட் களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும். விரும்பிய இட மாற்றங்களைப் பெற்று குடும்பத்துடன் இணையும் வாய்ப்புகள் உண்டாகும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்று வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம், 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம், 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். சனிபகவான் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய யோகம் ஏற்படும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. நிதானத்தோடு செயல்பட்டால் கடினமான பணிகளைக்கூட எளிதில் முடிக்கமுடியும். 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால், தொழில், வியாபாரத் தில் நல்ல வாய்ப்புகள், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நெருங்கியவரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். பெரிய மனிதர்களின் உதவியால் உங்களுக்கிருக்கும் சிக்கல்கள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பணப்பரிமாற்ற விஷயங் களில் நிதானத்தோடு செயல்பட்டால் இழப்பு களைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் பணியில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கலாம். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 2-ஆமதிபதி சூரியன் தனது நட்பு கிரக மான குரு சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் தாராள தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டாகும். ராசிக்கு 8-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவது, தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. குறிப்பாக உடன் பிறந்தவரிடம் வாக்குவாதங் களைத் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான செய்தியைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், கௌரவமான பதவியை அடையும் யோகமும் உண்டு. வெளியூர், வெளிமாநிலமூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து நிம்மதி ஏற்படும். வேலையாட்கள் சில நேரங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செயலிலும் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் சூழ்நிலை ஏற்படும். இந்த வாரத்தில் சந்திரன் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

dd

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப்பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் தேவை யற்ற நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனையடைய இடையூறு கள் ஏற்படும். சனி 7-ல் சஞ்சரிப் பதால் கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனும், லாப ஸ்தானத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர் பாராத உதவிகள் கிடைப்ப தால் நிலைமையை சமாளிக்க முடியும். பொதுவாக அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிக மாகத் தவிர்ப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவற விடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் சிறப்பு. வெளி நபரிடம் வீண் பேச்சைத் தவிர்த்தாலே தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருக்கவும். நீங்கள் எவ்வளவுதான் சரியாகப் பணி புரிந்தாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்வார்கள். அதிக எதிர்பார்ப்பின்றி தற்போது பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது, தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப் பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எதில் ஈடுபட்டாலும் அதிலொரு ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வார முற்பாதியில் புதன் 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். நல்ல நட்புகள் கிடைத்து அதன்மூலம் நீண்டநாட்களாக இருந்த பிரச் சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்த காலங் களில் இருந்துவந்த வேலைப்பளு தற்போது குறையும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு எதிர்பார்த்ததைவிட உயர்வான இடத்திலிருந்து அழைப்புவரும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுவரக்கூடிய வாய்ப்புண்டாகும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்ப தாலும், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எவ்வளவு கடினமான நெருக்கடியில் இருந்தாலும் அதனை சமாளிக்கும் பலமுண்டாகும். குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப் பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நெருங்கியவர்களா லேயே சில இடையூறுகளை சந்திப்பீர்கள் என்பதால், குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிராமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படும் நேரமென்பதால் ஒவ்வொரு செய-லும் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட் கள் ஒத்துழைப்பு சாதகமாக இருந்தாலும், ஒருசிலரின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள், லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதன் காரணமாக நிம்மதிக் குறைவுண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனைசெய்வது, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது நன்று.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 5-ல் குருபகவான் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்டமுடியும். இந்த வாரத்தில் 4-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும் நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. பொதுவாக தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகமிக நல்லது. ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களை அடைவீர்கள். மறைமுக போட்டிகள் விலகி அனுகூலமான பலன்களை அடையும் அதிர்ஷ்டமுண்டு. வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடன்வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எதையும் சமாளிக்கமுடியும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் நிலையுண்டாகும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படும் பலமுண்டாகும். பொருளாதாரநிலை தேவைக்கேற்ப இருந்து நிம்மதியுண்டாகும். நீண்டநாட்களாக உங்களுக்குள்ள கடன்களைத் தற்போது பைசல் செய்வீர்கள். தொழில் முன்னேற்றத் திற்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசுவழியில் இருந்த சட்டச் சிக்கல்கள் மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். இந்த வாரத்தில் புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவரிடம் பேசும்பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும், உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். பூர்வீக சொத்துரீதியான வம்பு, வழக்குகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஏழரைச்சனி நடப்பதாலும், 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் வெளியே சொல்லமுடியாத கடுமையான நெருக்கடிகளைத் தற்போது எதிர்கொண்டு வருகிறீர்கள். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் உங்களுக்கு இந்த வாரத்தில் 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு இருந்துவந்த இடையூறுகள் விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் தந்த நெருக்கடிகள் தற்போது குறைந்து நிம்மதியுண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் நிலைமையை சமாளித்து போட்ட முதலை எடுப்பீர்கள். உத்தியோகரீதியாக வீண் பேச்சைக் குறைத்துவிட்டு உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் நல்லபெயர் எடுக்கமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால கஷ்டங்கள் குறையும். உடன்வேலை செய்பவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலையிருக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் பண வரவுகள் சிறப் பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களைப் பெற்று உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன் 2-லும், 5-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உற்றார்- உறவினர் களை அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். ஜென்மச்சனி நடப்பதால் தேக ஆரோக்கியத் திற்கு முக்கியத்துவம் தருவது, சிறு பாதிப் பென்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை நழுவ விட்டுவிடாதீர்கள். தற்போதைக்கு பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்று.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சூரியன், குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக ஏற்படும் நெருக்கடிகளால் உங்கள் கையிருப்பு குறையும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதாலும், ராசிக்கு 2-ல் ராகு இருப்பதாலும் எதிலும் சற்று பொறுமை யோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். சிலரது செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் செலவுகளும் உண்டாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்ரீதியாக மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர் பாராதவகையில் வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

bala310323
இதையும் படியுங்கள்
Subscribe