முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 2.
செவ்வாய்: அனுஷம்- 2.
புதன்: கேட்டை- 4.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: சித்திரை- 1.
சனி: சதயம்- 1.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்:
கார்த்திகை 11 (27-11-2023) தனுசு
புதன் (அதிகாலை (5.53).
கார்த்திகை 14 (30-11-2023) துலா சுக்கிரன்
(அதிகாலை (1.04).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மேஷம்
26-11-2023 இரவு 7.55 மணிக்கு ரிஷபம்.
29-11-2023 அதிகாலை 1.40 மணிக்கு மிதுனம்.
1-12-2023 காலை 10.12 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சுக்கிரன், கேது, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதிலும் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடையும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு வரும் திங்கட்கிழமைமுதல் 9-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களின் கடந்தகால சோதனைகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைபிடிப்பதும் சட்ட விதிக்குட்பட்டு நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடியப் பலம் ஏற்படும். தொழில்ரீதியாக உங்களுக்கு உள்ள தேக்கநிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அனுபவமுள்ள பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் உங்கள் தொழிலிலுள்ள தீர்க்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் சற்று குறையும் என்றாலும் உங்கள் பணியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கான நாட்களாக இருக்கும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிவவழிபாடு மேற்கொள்வது, முருகரை தரிசிப்பது நற்பலனை ஏற்படுத்தும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். நீங்கள் நல்லதாக பேசி னாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல் படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகி மன அமைதியை குறைக் கும். அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படலாம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலம் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தொழில் நிறுவனத்திலுள்ள கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக செலவுசெய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பணியும் இணைத்து செய்யவேண்டிய நிலை ஏற்படும். உங்கள் பணியில் நீங்கள் சரியாக பணிபுரிந்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஊக்கத் தொகைகள் தடைப்படும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வரும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 2.
செவ்வாய்: அனுஷம்- 2.
புதன்: கேட்டை- 4.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: சித்திரை- 1.
சனி: சதயம்- 1.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்:
கார்த்திகை 11 (27-11-2023) தனுசு
புதன் (அதிகாலை (5.53).
கார்த்திகை 14 (30-11-2023) துலா சுக்கிரன்
(அதிகாலை (1.04).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மேஷம்
26-11-2023 இரவு 7.55 மணிக்கு ரிஷபம்.
29-11-2023 அதிகாலை 1.40 மணிக்கு மிதுனம்.
1-12-2023 காலை 10.12 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சுக்கிரன், கேது, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதிலும் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றங்களை அடையும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு வரும் திங்கட்கிழமைமுதல் 9-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களின் கடந்தகால சோதனைகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைபிடிப்பதும் சட்ட விதிக்குட்பட்டு நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடியப் பலம் ஏற்படும். தொழில்ரீதியாக உங்களுக்கு உள்ள தேக்கநிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அனுபவமுள்ள பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் உங்கள் தொழிலிலுள்ள தீர்க்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் சற்று குறையும் என்றாலும் உங்கள் பணியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கான நாட்களாக இருக்கும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிவவழிபாடு மேற்கொள்வது, முருகரை தரிசிப்பது நற்பலனை ஏற்படுத்தும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். நீங்கள் நல்லதாக பேசி னாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல் படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகி மன அமைதியை குறைக் கும். அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படலாம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலம் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தொழில் நிறுவனத்திலுள்ள கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக செலவுசெய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பணியும் இணைத்து செய்யவேண்டிய நிலை ஏற்படும். உங்கள் பணியில் நீங்கள் சரியாக பணிபுரிந்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஊக்கத் தொகைகள் தடைப்படும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வரும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு சிறப் பான ஆதரவுகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது பெயர், புகழ், மரியாதை மேலோங்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த சிறுசிறு உடல்பாதிப்புகள்கூட விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால வீண்செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் மணவயதை அடைந்த மங்கையர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகம் உண்டு. உங்களிடம் வேலை செய்யும் வேலையாட்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக செயல்படுவதால் வெளியாட்களால் ஏற்படும் இடஞ்சல்களை எளிதில் எதிர்கொள்ளமுடியும். ஏற்றுமதி- இறக்குமதிமூலம் மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்தப்பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பது மட்டுமில்லாமல் தகுந்த சன்மானத்தை பெரும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரும் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மேலும் வளமான பலன்களை பெற மகாவிஷ்ணுவை வழிபடுவது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். மாதக்கோளான சூரியன், செவ்வாய் 5--ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறும் யோகமுண்டு. சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களுக்கு வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங் கள் கிடைக்கும். ஆடம்பரச் செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. குரு வக்ரகதியில் சஞ்சரிப் பதால் தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்கும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால நேரம் பார்க்கா மல் தொழிலில் நீங்கள் கவனத் தோடு செயல்பட்டால் ஒரு நல்ல நிலையினை அடைய முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு, எதிலும் முழு ஈடுபாட் டோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கான சன்மானம் தற்போது கிடைக்காவிட்டாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலைப்பளு காரணமாக உங்களுக்கு ஓய்வுநேரம் குறையும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் அடைவதுடன் ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வெங்கடா சலபதியை தரிசிப்பது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். ஆண்டுக்கோளான குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவில் கடுமையான நெருக்கடி, உங்கள் சக்திக்கு மீறி வீண் செலவுகள் ஏற்படும். சனி 7-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வீட்டில் உள்ளவர்களை அனுசரித் துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக் கியத்திற்கும் சற்று முக்கியத் துவம் தருவது நல்லது. உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்ப தால் ஒரு சில எதிர்பாராத உதவி கள் கிடைத்து எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க சிரமப் பட நேரிடும். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் நியாயப்படி கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட உங்களுக்கு கிடைக்காமல் தட்டிப்போகும். வேலையாட்கள் சற்று ஆறுத லாக செயல்படுவதால் தற்போது உள்ள நிலையினை தக்க வைத்துக் கொள்ளமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். இருக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் தக்கவைத்துக் கொள்வதும், பிறர் சொல்வதைக்கேட்டு வீண் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் எதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதும் தற்சமயத்துக்கு நல்லது. வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந்தவித நெருக்கடியும் சமாளித்து உங்களுடைய அன்றாட தேவைகளை எளிதில் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். மகாவிஷ்ணுவை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங் களை பெறுவதால் உங்களின் நீண்ட நாளைய பிரச்சினை கள் எல்லாம் முடிவுக்கு வரும். கணவன்- மனைவி யிடையே மகிழ்ச்சி ஏற்படக்கூடிய இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். வரும் திங்கள் முதல் புதன் 4-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை சாதிக்கமுடியும். வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்கநேரத்தில் கிடைப்பதால் தொழிலை எளிதில் விரிவாக்கம் செய்யமுடியும். திறமைவாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழிலில் இணைவதால் இருக்கக்கூடிய சின்ன சின்ன மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். புதிய திட்டங்களை போட்டு அதில் வெற்றி காண்பீர்கள். நவீன இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு சூழ்நிலை சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைவது மட்டுமில்லாமல் உங்கள் பேச்சுக்கு பணி செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வீண் மருத்துவச்செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றி கிடைப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு நிம்மதி குறையும். துர்க்கையம்மனை தரிசிப்பது, நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் கஷ்டங்கள் குறையும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஆண்டுக்கோளான குருபகவான் 7-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. நம்பிக்கைக்குரிய நபர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவு களால் மனநிம்மதி குறையும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நிலவினாலும் ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். வேலை யாட்கள்மூலம் வீண்நெருக்கடிகள் ஏற்படும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கைநழுவிப் போகும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். மேலதிகாரிகள் சொல்லும் சொற்களை கேட்டு நடந்து கொண்டால் எந்தவித நெருக்கடியையும் சமாளித்துவிடலாம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். திங்கள், செவ்வாய்கிழமைகளில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவனை தரிசிப்பதன் மூலமாக வளமான பலன்களை எட்டமுடியும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
தனகாரகன் குரு 6-ல் வக்ரகதியில் இருப்ப தாலும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் ஏற்படும். நீண்டநாட்களாக உங்களுக்குள்ள வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியரீதியாக அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில்ரீதியாக படிப்படியான வளர்ச்சியைப்பெற்று ஒரு கௌரவ நிலையினை எட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் உதவியால் ஒரு சிறப்பான ஆதாயத்தை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு மிகவும் நன்றாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உங்கள்மீது இருந்த வீண்பழிச் சொற்கள் எல்லாம் விலகி நல்லபெயர் எடுக்கக்கூடிய யோகம் உண்டு. நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும்கூட தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். புதன், வியாழக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சலால் நிம்மதிக்குறைவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடந்தகால வம்பு, வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக மறையும். நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் பண்பை புரிந்துகொண்டு நட்போடு பழகுவார்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தைரியத்துடன் செயல்பட்டு அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைத்து உங்களின் அனைத்துவிதமான பொருளாதார நெருக்கடிகளும் விலகி நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுமூலம் நல்லசெய்தி கிடைக்கும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை, வீண் குழப்பங்கள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உக்ர தெய்வங்களை வழிபடுவதன்மூலம் உங்கள் கஷ்டங்கள் விலகும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பல இன்னல்களை எதிர்கொண்டு வரும் உங்களுக்கு இவ்வாரத்தில் 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம்கூட விலகி சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர் பாராத அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். ராகு 3-ல் உள்ளதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் களை அடையமுடியும். உங்களுக்கு நிலவிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் சற்று மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சகஜ நிலை உண்டாகும். வேலையாட்கள் வழியில் ஒருசில ஆதாயங்களை பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் விரும்பிய இடமாற்றத்தை பெறமுடியும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருந்து மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் ஏற்றங்களை அடையமுடியும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் எதிர்பாராத வகையில் திடீர் பணவரவுகள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வரும் திங்கள் முதல் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் அசையா சொத்துவகையில் அணுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பதால் கடந்தகாலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். குரு வக்ரகதியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் கைகூடும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற கூடிய பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த தொழில்ரீதியான வழக்குகள் எல்லாம்கூட தற்போது முடிவுக்கு வந்து மன நிம்மதி அடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடிவரும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில்முடித்து விடுவீர்கள். இட மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு சாதகமான இடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் செய்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதியுடன் பணியாற்றுவீர்கள். வரும் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய வாய்ப்புகள், எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் ராகு, ராசியாதிபதி குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. சனி 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் மற்றவர்கள் குறை கண்டுபிடிப்பார்கள். கேது 7-ல் சஞ்சரிப்பதால் ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட வீட்டில் வீண்வாக்குவாதங்கள் ஏற்படும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பேசாமல் இருப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, நீண்டநாள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்கள் சற்று ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. சூரியன், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீடு எடுக்க உடனிருப்பவர்களே இடையூறு களாக இருப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தற்போதைக்கு அதிக முதலீடுகள்கொண்ட செயல் களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அரசுவழியில் எதிர் பார்க்கக்கூடிய உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். முடிந்தவரை வேலையாட்களை அனுசரித்துச்செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை மேலதிகாரியிடம் பேச்சைக் குறைப்பது உத்தமம். காலநேரம் பார்க்காமல் தற்போதைக்கு நீங்கள் கவனத் துடன் நடந்துகொண்டால் விரைவில் ஒரு உயர்வான நிலையை எட்டமுடியும். வரும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் பொருளாதார அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நல்லது.