முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: மகம்- 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 2.

Advertisment

புதன்: ஆயில்யம்- 4 (வ).

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: உத்திரம்- 2.

சனி: பூரட்டாதி- 1 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

(26-8-2024) மிதுன செவ்வாய்

பகல் 3.25 மணிக்கு

(29-8-2024) புதன் வக்ரநிவர்த்தி அதிகாலை 2.43 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மேஷம்.

25-8-2024 இரவு 10.29

மணிக்கு ரிஷபம்.

28-8-2024 அதிகாலை 3.41 மணிக்கு மிதுனம்.

30-8-2024 பகல் 11.33 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, திங்கட்கிழமைமுதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செய-லும் பரிபூரண வெற்றி கிடைத்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல ஒரு சந்தர்ப்பம் அமையும். அதிகாரிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மேலும் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபடுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 28, 29.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். வரும் திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்களை நம்பாமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவருடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி யான நிலை ஏற்படும். முடிந்தவரை முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர் களுக்கு உடன் பழகக்கூடிய நண்பர்கள் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல வாய்ப்பு இருப்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 30, 31.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குரு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமை யோடும், நிதானத்தோடும் இருப்பது நல்லது. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகளை வரும் நாட்களில் குறைத்துக் கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 28, 29.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களின் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய்க்கிழமைமுதல் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்கள் உடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும். தொழில் தொடர்பான விஷயங் களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக் கூட நீங்கள் செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 30, 31.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 10-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உணர்ச்சிவசப் படாமல் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், திங்கட்கிழமைமுதல் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர் பாராத பண உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அவசரப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்துபோட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமை காப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் திங்கட்கிழமை முதல் செவ்வாய் 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பெயர், புகழ், அந்தஸ்த்து அதிகரிக்கக் கூடிய நேரமாகும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு வரும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். புதன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மனநிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதார நெருக்கடிகள் குறையும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய யோகமும், விரும்பிய பாடப்பிரிவை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்களுக்கு இருக்கக் கூடிய நெருக்கடிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்ககூடிய செவ்வாய் திங்கட்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன உடல் உபாதைகள்கூட விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்பை பெறக்கூடிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடும் பொறுமையோடும் இருப்பது மிகவும் நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங் கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 30, 31.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்துவகையில் ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத் தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய யோகம் உண்டு. கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக நல்ல செய்தி கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 8-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பயணங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு கள் அமையும். மாணவ -மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்படக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் சற்று கவனத் தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லமாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர் களிடம் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக தேவை யில்லாத வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள் வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் புதன், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவு கள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வரும் திங்கட்கிழமை முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக பிரச்சினை எல்லாம் தற்போது விலகி சுமூக நிலை உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக வயதுமூத்தவரிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பேச்சில் பொறுமையோடு இருப்பதன் மூலமாக வளமான பலன்களைப் பெற முடியும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய காலமாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, கால பைரவரை வழிபாடு செய்வது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் 4-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பண விஷயத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலையை புரிந்துகொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசில தேவையற்ற நிகழ்வுகள் உங்கள் மன அமைதியை குறைக்கும். எதிர்பார்க்கின்ற பொருளாதார உதவிகள் கிடைப்பதில் தாமதநிலை உண்டாகும். இரவு நேர பயணங்களை தள்ளிவைப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நேரமாகும். உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக சிறப்பாக செயல்பட்டாலும் பெற்றோர், ஆசிரியரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 30, 31.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. ராசியாதிபதி குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்பட்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக் கூடிய நேரமாகும். எதிலும் உணர்ச்சிவசப் படாமல் நிதானத்தோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27.