முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 2.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: சதயம்- 1.
குரு: பரணி- 1.
சுக்கிரன்: திருவோணம்- 2.
சனி: சதயம்- 3.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
26-2-2024 காôலை 8.11 மணிக்கு கன்னி.
28-2-2024 இரவு 9.00 மணிக்கு துலாம்.
2-3-2024 காலை 8.17 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்றுடன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகத் திருப்தி கரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். மனைவி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியா பாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை அடைவீர்கள். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டு மில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உயர்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு சிறப்பான ஆதரவுகள் கிடைக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமையன்று தேவையற்ற குழப்பங்கள், மன நிம்மதிக் குறைவு ஏற்படும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களின் குடும்பத் தேவைகள் தக்க நேரத்தில் பூர்த்தியாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- தன, பஞ்சமாதிபதி புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் இருப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் விரைய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, பிறருக்கு ஜாமின் தருவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒவ்வொரு பணியிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. பணிநிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுடைய வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியன், சனி சேர்க்கைப்பெ
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 2.
செவ்வாய்: திருவோணம்- 2.
புதன்: சதயம்- 1.
குரு: பரணி- 1.
சுக்கிரன்: திருவோணம்- 2.
சனி: சதயம்- 3.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
26-2-2024 காôலை 8.11 மணிக்கு கன்னி.
28-2-2024 இரவு 9.00 மணிக்கு துலாம்.
2-3-2024 காலை 8.17 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம்பெற்றுடன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகத் திருப்தி கரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். மனைவி, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியா பாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை அடைவீர்கள். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டு மில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உயர்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு சிறப்பான ஆதரவுகள் கிடைக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமையன்று தேவையற்ற குழப்பங்கள், மன நிம்மதிக் குறைவு ஏற்படும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களின் குடும்பத் தேவைகள் தக்க நேரத்தில் பூர்த்தியாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- தன, பஞ்சமாதிபதி புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் இருப்பதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் விரைய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, பிறருக்கு ஜாமின் தருவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒவ்வொரு பணியிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. பணிநிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுடைய வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியன், சனி சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு லாப ஸ்தானத் தில் அமையப்பெற்று 3, 5, 7-ஆகிய ஸ்தானங் களைப் பார்ப்பதால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, குடும்பத் தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபோது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறுவீர்கள்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே கடைசி நேரத்தில் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுக்கிரன் 7-லும், ராகு 9-லும் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடி களை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலுக்கு எந்த விதத்திலும் பங்கமில்லாமல் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது, தொழில்ரீதியான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருப்பதால் உடல் அசதி, ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் விரைவில் ஒரு நல்லநிலையை எட்டமுடியும். ஒருசிலருக்கு மனைவி, பிள்ளைகள்வழியில் தேவையற்ற வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. மாணவ- மாணவியர்கள் வீண் பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெறும். மேலும் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
குரு பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சாதகமாக இருப்பதால் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட் களை வாங்கிதரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன்- சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் எடுத்த ஆடர்களை சிறப்பாக செய்து முடிக்கமுடியும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து பணியில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். சக ஊழியர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று படிக்கும் பள்ளி- கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மையைத் தரும்
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை
1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல்பட்டு சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள்மூலமாக குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகளால் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் ஒருசில செயல்களில் சற்று பக்குவத்தோடு நடந்துக்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். பூர்வீகச் சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு வாய்ப்பு, உயர்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிபெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பதும் ஆடம்பரச்செலவுகளை குறைத்துக்கொள்வதும் நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வரும் நாட்களில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் அமையப்பெற்று புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. சர்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதாலும், ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த போட்டிகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன் வேலை செய்பவர்கள் ஏதாவது இடையூறுகள் செய்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கடந்த காலங்களில் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீடு, மனை போன்ற அசையா சொத்துகளை வாங்குவது, வெளியூர் பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றில் அனுகூலப்பலன் உண்டாகும். முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, லட்சுமிநரசிம்மரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். குருபகவான் 6-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ஆம் வீட்டில் மாதக் கோளான சூரியன்- சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் அவர்கள்மூலமாக சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக சக ஊழியர் களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கால பைரவரை வழிபாடு செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் அமைந்து ஜென்ம ராசியை பார்வை செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமைவதுடன் உங்களின் வாழ்க்கைத்தரமும் உயரும். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி சேர்க்கைப்பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக உங்களுக்கு தடைப்பட்டு வந்த ஒரு காரியம் தற்போது கைகூடி வெற்றிபெற்று மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோஷம், நவீன பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிகச்சிறப்பான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய எண்ணங்களை செயல்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை கிடைக்கப்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் செய்த காரியத்திற்கான சன்மானங்கள் தற்போது கிடைத்து உங்களின் பொருளாதார நெருக்கடிகள் குறையும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான நாட்களாக உங்களுக்கு இருக்கும். புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற அனுகூலப்பலன் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் சரபேஸ்வரருக்கு அர்ச்சனை செய்வது நன்மையைத் தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரம் ஆகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை பாதிக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில் நெருங்கிய உறவினர்கள்மூலமாக பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நீங்கள்போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரம் ஆகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகளும் சிறப்பான பணவரவும் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை அன்று சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மையைத் தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. குறிப்பாக சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலம் அவர்களின் உதவியால் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக மன நிம்மதி குறைவுகள், அதன்காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் உங்களுக்கு இருந்தாலும் தற்போதைக்கு பொறுமை காப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வீண் நட்புகளைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக இருப்பதால் சிக்கல்களை சமாளித்து ஏற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் உங்கள் பேச்சில் பொறுமையும், செயல்களில் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் சாதகமான அமைப்பு என்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக ஒரு அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் விலகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். சூரியன், சனி 12-ல் சஞ்சரிப்பதால் ஒருசிலருக்கு தேவையில்லாத தூரப்பயணமும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் எடுத்தக் காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். பணி தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராதச் செலவுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மையைத் தரும்.