முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மூலம்- 3.
செவ்வாய்: ரோகிணி- 2 (வ).
புதன்: உத்திராடம்- 1.
குரு: உத்திரட்டாதி- 1.
சுக்கிரன்: பூராடம்- 4.
சனி: அவிட்டம்- 2.
ராகு: பரணி- 1.
கேது: சுவாதி- 3.
கிரக மாற்றம்:
மார்கழி 13 (28-12-2022) மகர புதன் (அதிகாலை 5.04).
மார்கழி 14 (29-12-2022) மகர சுக்கிரன் (மாலை 4.03).
மார்கழி 14 (29-12-2022) புதன் வக்ர ஆரம்பம் (பகல் 3.01).
மார்கழி 15 (30-12-2022) தனுசு புதன் (இரவு 12.06).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
27-12-2022 அதிகாலை 3.30 மணிக்கு கும்பம்.
29-12-2022 அதிகாலை 5.55 மணிக்கு மீனம்.
31-12-2022 பகல் 11.47 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். 2-ல் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது, முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி யிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவு கள் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை கலந்தாலோ சித்து செயல்பட்டால் மேலும் வளமான பலன்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஒருசிலருக்கு தேவையற்ற வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் முழுமையான வெற்றி கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குறிப்பாக முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு உணர்ச்சிவசப்படாமல் செயல் பட்டால்தான் நெருக்கடி களைத் தவிர்க்க முடியும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் குரு சஞ்சரிப் பதால் பண வரவுக்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி நிம்மதி ஏற்படும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்கள்மூலமாக அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணி களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பு கள் ஏற்படும். உடம்பு பாதிப்பு கள் ஓரளவுக்கு விலகி தெம்போடு செயல்படுவீர்கள். வெளியூர் செல்லும் வாய்ப்பு களும் அதன்மூலம் பொருளா தார அனுகூலங்களும் உண்டா கும். 29-ஆம் தேதிமுதல் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் மேலும் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சிவ தரிசனம், மகாவிஷ்ணு வழிபாடு நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். சக்திக்குமீறிய வீண்செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நன்று. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு செயல்படவேண்டும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே கடைசி நேரத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு கள் கடைசி நேரத்தில் தட்டிப் போகும். வேலையாட் கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் கையாண்டு தக்க வைத்துக்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு அதிகப்படியான பணிச்சுமையால் ஓய்வுநேரம் குறையும். மற்றவர்கள் பணி யையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். இரவுப் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. பங்காளியிடம் பேச்சில் நிதானம் தேவை. வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிவ வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களைச்செய்வது நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப் பது அற்புதமான அமைப் பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். 29-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வு கள் குடும்பத்தில் கை கூடும். குரு பாக்கிய ஸ்தானத்திலும், செவ் வாய் லாப ஸ்தானத் திலும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராள மாக இருந்து நீங்கள் வாங்கிய கடன்களை எளிதில் பைசல் செய்ய முடியும். வம்பு, வழக்கு களெல்லாம் முடிவுக்கு வருவது மட்டுமல்லாமல் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவு களைப் பெறமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்ப தால் நெருக்கடிகள் சற்று குறையும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்பு எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். அதிகாரியுடனான கருத்து வேறுபாடுகள் விலகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்று வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர் கள். எதிலும் தைரியத் தோடு செயல்படும் வலிமை ஏற்படும். பண வரவுகள் தேவைக்கேற்றவாறு இருந்து குடும் பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். கொடுக் கல்- வாங்கல்ரீதியாக அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்ப தால் இருக்குமிடத்தில் உங்களது பெயர், புகழ், அந்தஸ்து மேலோங்கும் காலமாகும். பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக முடிவுக்கு வராத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வுகிடைக்கும். உடல்ரீதியான பாதிப்பு கள் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். போட்டிகள் இருந்தாலும் இலக்கை அடைய முடியும். சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்ப தால் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரியினுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. பிறர் சொல்வதைக் கேட்காமல் எந்த செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல் படுவது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்று.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
குருபகவான் 7-ல் வலுவாக சஞ்சரிப்ப தாலும் ராசியாதிபதி புதன், 2, 9-ஆம் அதிபதி யான சுக்கிரன் உங்கள் ராசிக்கு இந்த வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் கடந்தகால சோதனைகள் விலகி ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு கள் ஏற்படும். வாகனங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். வீண் பேச்சைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் மிகவும் அனுகூல மான பலன்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றி யைத் தந்து குடும்பத்தில் நிம்மதியேற்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவதன்மூலம் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக தேவை யற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும். ராசிக்கு 4-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். பணப் பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு இருப்பது, மற்றவர் களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சாதாரண விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால்தான் இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். வேலையாட்களால் நெருக்கடிகள் ஏற்படும். ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் பணியில் சிறப் பாக செயல்பட முடியாது. வீண் பழிச்சொற் களுக்கு ஆளாக நேரிடும். வாகனங்களில் பொறுமையோடு செல்வது, வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர் பாராத பண உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )
ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பிரச்சினை, பேச்சால் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், எதிலும் நிதானத்தோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பதன்மூலம் நெருக்கடிகள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளா தார நிலையானது மிகமிக சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்புண்டு. பிள்ளைகள்வழியில் அனுகூலங் கள், அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பேற்படும். தொழில், வியாபாரத்தில் சிறப் பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல், சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்களை ஈட்டமுடியும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் பல்வேறு காரியங்களை எளிதில் சாதித்துக்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர் கள். அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, ஒவ்வொரு செயலிலும் பொறுமை யோடு செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத் தில் மகிழ்ச்சி உண்டாகும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் பணவரவு சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியடைவீர்கள். சிவன் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு சிறப்பு.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனத்தோடு இருந்தால் ஆரோக்கிய பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும். ராசியாதிபதி குருபகவான் 4-ல் சஞ்சரிப்ப தால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்பட்டால் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது உத்தமம். ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் சில நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், நீங்கள் எடுத்த பணியில் உறுதியோடு இருந்து சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் ராசிக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சிவ வழிபாடு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களது மன அமைதியைக் குறைப்பார்கள். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வீண் செலவுகளைக் குறைப்பதன்மூலம் கடன் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனையடைய நெருங்கியவர்களே இடைஞ்சல்களை ஏற்படுத்துவார்கள். மறைமுக எதிர்ப்புகளால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். அரசு அதிகாரியிடம் மிகவும் கவனத் தோடு பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் அதிகாரி களின் அழுத்தத்தால் பணியில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு இடையூறுகள் ஏற்படும். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பொறுமையோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்களை அடையமுடியும். இந்த வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சூரியன் லாப ஸ்தானத்தில், குரு வீட்டிலிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவு மிக நன்றாக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். எடுக்கும் முயற்சிக்கு நல்ல ஆதரவுகள் கிடைத்து பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். சொத்து தொடர்பாக இருந்த வழக்குகளில் தற்போது ஒரு நல்லமுடிவு கிடைக்கும். திருமண வயதடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பெண்கள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். அரசாங்கவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைத்து தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக் கெல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி யடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். முருக வழிபாடு, சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வது பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக் கூடிய காலமாகும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 10, 11-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீண் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். நீண்டநாட்களாக எண்ணிய காரியங்களைத் தற்போது செயல்படுத்த முயற்சித்தால் அதில் வெற்றி கிடைக்கும். ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியுண்டாகும். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்து நல்ல பெயரெடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்தகால நெருக்கடிகள் விலகி அமைதி யுடன் பணிபுரியமுடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு இருப்பதால் பணியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் முடித்துவிடுவீர்கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது நன்மை தரும்.