முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரம்- 3.

செவ்வாய்: சித்திரை- 1.

Advertisment

புதன்: பூரம்- 2.

குரு: பரணி- 3 (வ).

சுக்கிரன்: ஆயில்யம்- 3.

t

சனி: சதயம்- 1 (வ).

ராகு: அஸ்வினி- 1.

கேது: சித்திரை- 3.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- தனுசு

24-9-2023 இரவு 7.18 மணிக்கு மகரம்.

26-9-2023 இரவு 8.28 மணிக்கு கும்பம்.

28-9-2023 இரவு 8.28 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், 5-ல் புதன், 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்களுக்கு இருந்துவந்த எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்களை பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்த மன குழப்பங்கள் தற்போது விலகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்குவழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் உங்களுக்கு உள்ள சங்கடங்கள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதாலும், கேந்திர ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை நீங்கள் அடைவீர்கள். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல விதமான தேவைகளும் குறித்த நேரத்தில் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சனி வக்ரகதியில் இருப்ப தால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைப்ப தால் உங்களுக்கு இருந்த மன கவலைகள் விலகும். சட்டரீதியாக உள்ள சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பலனடைய உள்ளீர்கள். உங்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலையும், தேவையற்ற மன குழப்பங்களும் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் வாய்ப்பு களும் அசையா சொத்துகள்வகையில் அனுகூலங் களும் ஏற்படக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்ம னுக்கு தீபமேற்றுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகி தேவையற்ற அலைச்சலை எதிர்கொள்வீர்கள். வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படலாம். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடன் பிறந்தவரிடம் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தனகாரகன் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் குறித்த நேரத்தில் நிறைவேற இடையூறுகள் ஏற்படும். சூரியன், புதன் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். வெளிநபர்களுடைய உதவி உங்களுக்கு தக்கநேரத்தில் கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதிய யுத்திகளை பயன்படுத்தி அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சிக்கலான நேரத்தில் மிகச் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வீண் குழப்பங்கள், உங்கள் செயல்களுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் மாதக்கோளான சூரியன் உங்கள் ராசிக்கு யோக காரகனான செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று உங்களை நாடிவரும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையநேரிடும். வேலையாட்கள் உங்கள் சொல்படி கேட்பதால் பெரிய ஆர்டர்களை எடுத்து உங்களுடைய வாடிக்கையாளர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். உங்களது பேச்சுத் திறமையால் தேவையற்ற நெருக்கடிகளை எளிதில் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய ஒரு அமைப்பும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலமும் ஏற்படும். ஒருசிலருக்கு பிள்ளைகள்வழியில் சின்ன சின்ன மனகவலைகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதன், வியாழக்கிழமைகளில் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவது என்றாலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தள்ளிவைக்கவும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியதி பதி சூரியன், செவ்வாயுடன் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு விஷ யத்திலும் யோசித்துப் பேச வேண்டிய நேரமாகும். உங்களது முன் கோபத்தை குறைத்துக்கொண்டு மிகவும் நிதானத்தோடு இருந்தால் தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் இருந்தாலும் உரிய நேரத்தில் தக்க பண உதவிகள் கிடைத்து உங்களது குடும்பத் தேவைகள் குறித்த நேரத்தில் பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் உறவினர்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவதன்மூலம் நீங்கள்போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலையை எதிர்பார்த்தவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை எட்டமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் அதில் மிகவும் சாதகமான பலன்களை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. வெள்ளி, சனிக்கிழமைகளில் தேவையற்ற குழப்பங்களால் உங்களது மன அமைதி குறையும். இந்த வாரத்தில் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் தனவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் தேவையற்ற பேச்சை குறைத்துவிட்டு உங்களுடைய பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு மிக உயரிய நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டு. உடனிருக்கக்கூடிய பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள். கூட்டாளியினுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்ல பெயர் எடுக்க முடியும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடக்கும். துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் எதிலும் திறமையாக செயல்பட்டு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பேச்சு திறமையால் உங்களுக்கு உள்ள வீண் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறிதளவு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தால் வீண் இழப்புகளை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் பராமரிப்பு செலவுகள் சற்று அதிகப்படியாக இருப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையும். அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது தேவையற்ற பேச்சை குறைத்துவிட்டு தொழில் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைந்து மன அமைதி ஏற்படும். பங்காளியிடம் சற்று கவனத்தோடு இருப்பது, வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிசயத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான வம்பு, வழக்கு போன்றவைகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து மன மகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நற்பலனை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய், மாதக்கோளான சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத் தில் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் அரங்கேறும். அசையும்- அசையா சொத்துகளில் நீங்கள் முதலீடு செய்யவேண்டும் என்ற உங்களது நீண்டநாளைய ஆசைகள் தற்போது நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த தேவையற்ற கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழல் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்ததைவிட உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அதிகப்படியான லாபங்களை ஈட்டுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது நிறைவேறி நிம்மதி ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு சுலபமாக முடிக்கக்கூடிய பலமும் உண்டாகும். சிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்தால் பண வரவுகள் மிகமிக சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டு. வெளிநபர்கள்மூலம் இனிய செய்திகள் உங்களை தேடிவரும். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் பரிவர்த்தனைபெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் போட்டியாளர்களை உங்களுடைய தனித்திறமையால் எளிதில் சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. உங்கள் உழைப்புக்கான ஒரு கௌரவ நிலை அடையக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனம் மகிழ்ச்சி ஏற்படக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். பெண்கள்வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. இந்த வாரத் தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பாராத வகையில் பொருளாதார அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறையும். துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுவது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத் தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடன் இருப்பவர்கள் ஆதரவால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் சுலபமாக முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலையை சிறப் பாக கையாண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர் கள் உறுதுணையாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மற்றவர்கள் வேலையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங் கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நன்மையை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நீங்கள் நினைத் ததை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள அனைத்துவிதமான பொருளாதார நெருக்கடிகளும் தற்போது குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தான மான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தள்ளிவைப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத் தில் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பைகூட தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஒருசிலருக்கு எந்திரங்களை பழுது பார்ப்பதற் காக எதிர்பாராதவகையில் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொன்னாலும் அனைத்தையும் சமாளிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதக மாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் எதிர்பார்ப்பு கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர் கள்மூலமாக தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படலாம். நீங்க எதிர்பார்த்த பணம் வரவுகள் தக்க நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஒருசில சாதகமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி 12-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சாதகமாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. சிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி உங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை தவறவிட்டுவிட வேண்டாம். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனைச் செய்வது நன்மையை தரும்.