முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 2.
செவ்வாய்: பரணி- 2.
புதன்: பூசம்- 4.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: திருவாதிரை- 2.
சனி: அவிட்டம்- 2.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆடி 12 (28-7-2022) குரு வக்ர ஆரம்பம் (பின்னிரவு 1.51).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
25-7-2022 பகல் 11.32 மணிக்கு மிதுனம்.
27-7-2022 இரவு 12.20 மணிக்கு கடகம்.
30-7-2022 பகல் 12.12 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களு டைய இயற்கை சுபாவமான முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் நிதானமாக செயல்படவேண்டிய நேரமா கும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட்டால் தான் தற்போதிருக்கும் நிலையை சமாளிக்கமுடியும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதாரரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு கையிருப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்து ழைப்பு திருப்திகரமாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் கவனத்தோடு இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கைநழுவிப் போகும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் அவசரம் காட்டாமல் நிதானத்துடன் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப் பளு காரணமாக அலைச்சல், உடல் அசதி, ஓய்வுநேரம் குறையும் சூழல் ஏற்படும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உடனிருப் பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. இவ்வாரம் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த வொரு முயற்சியில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சரபேஸ்வரர் வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சுக்கிரன் தனது நட்பு வீடான 2-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத்தரம் உயரும். சூரியன், புதனுடன் 3-ல் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திருமண வயதையடைந்த நபர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளை கள்வழியில் ஆதாயங்கள் ஏற்படும் வாரமாகும். குடும்பத்துக்குத் தேவையான நவீன பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருவாய் அதிகரிப்பதால், தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு அமையும். அரசு அதிகாரி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைக்கூட சிறப்பாகக் கையாண்டு சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கமுடியும். உத்தியோகஸ் தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மல்லாமல், வரவேண்டிய சம்பள பாக்கி வரும் நாட் களில் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப் பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஞாயிறு, வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடை பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். முருகப் பெருமானை வழிபடுவது, துர்க்கையம் மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது சிறப்பு.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலம் ஏற்படும். பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நிலைமையை சமாளித்து விடுவீர்கள். உங்களுக்கிருந்த கடந்தகால சோத னைகள் படிப்படியாகக் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் சிந்தித்துப் பேசுவதன் மூலமாக காரியத்தை சாதிக்க முடியும். வயதில் மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவுப் பயணங் களைத் தவிர்ப்பது நன்று. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். தொழில், வியா பாரத்தில் வேலையாட் களை அனுசரித்துச்சென்றால் நல்ல ஆதாயத்தை அடைய முடியும். மறைமுகப் போட்டி கள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர் கள். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் எதிலும் திறமை யோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கடந்த காலங்களில் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தற்போது குறைந்து சுமூகநிலை ஏற்படும். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். இவ்வாரம் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் புதிய முயற்சி களில் ஈடுபட்டால் அதில் சாதகமான பலனைப் பெறமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது சிறப்பு.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் புதன், சூரி யனுடன் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். செவ்வாய், ராகுவுடன் 10-ல் சஞ்சரிப்ப தால் இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத் தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களுடைய தேவைகள் பூர்த்தியாவது மட்டுமல்லாமல், வாகனங் கள் வாங்கும் யோகம், நவீன பொருட்களை வாங்கு வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சனி 7-ல் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனு சரித்துச்செல்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை மிகவும் சாதக மாக இருப்பதால் நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர் பார்த்த பொருளாதார உதவி கள் கிடைக்கும் வாய்ப்புகள் தற்போதிருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலை யாட்கள் பக்கபலமாக இருப்பதால் புதிய ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். அரசு அதிகாரிகளின் உதவியுடன் நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவு களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பதவி கிடைக் கக்கூடிய வாய்ப்புகள் இவ்வாரத்தில் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அதிகப்படியான ஆதாயங்களை அடையும் வாய்ப்புண்டு. விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடுவது, சனிக்கு எள் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிர் பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் உங்கள் சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படுமென் பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் எந்தவொரு செயலிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக் கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் போட்ட முதலீட்டை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டால் தற்போதைய நிலையை சமாளித்துவிடமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற் சமயத்துக்கு தள்ளிவைப்பது உத்தமம். தொழில் தொடர்பாக அரசு அதிகாரியிடம் பேசும் பொழுது சிந்தித்துப் பேசுவது நல்லது. உத்தி யோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவுடன் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடைஞ்சல்கள் ஏற்படும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் ஜாக்கிரதையாக செயல்படுவது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சி களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, பிரதோஷ காலங்களில் சிவன் தலங்களுக்குச் சென்று அர்ச் சனை, அபிஷேகம் செய்துவருவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். ராசியாதிபதி புதன், சூரியனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் நீண்டநாள் முயற்சிகளுக்கு வரும் நாட்களில் அனுகூலமான செய்தி கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டு மல்லாமல் பிள்ளைகள்வழியிலும் இருந்த மனக் கவலைகள் எல்லாம் மறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவது மட்டு மல்லாமல் நீங்கள் போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபங்களை அடைவீர்கள். அரசாங்கவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகஸ் தர்களுக்கு மிகவும் சிறப்பான காலமென்று கூறினால் மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்லபெயர் எடுக்க முடியும். நீண்டநாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குக்கூட தற்போது திறமைக்கேற்ற உயர்வான இடத்திலிருந்து அழைப்பு வரும். பெண்கள்வழியில் அனுகூல மான பலன்கள் ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். முருகப் பெருமானை தரிசிப்பது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தான மான 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் தேவைக்கேற்றவாறு தக்கநேரத்தில் பணவரவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவை யற்ற கருத்துவேறுபாடுகள் ஏற்படும் நேர மென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. எந்த செயலிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல் பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் சாமர்த்திய மாக செயல்பட்டு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் கலந்தாலோ சித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினை களை எளிதில் சமாளிக்கமுடியும். சிலநேரங் களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் தொழிலில் அனுகூலங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக மனநிம்மதி குறையும். மற்றவர்கள் பணியையும் இணைத்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். பொதுவாக குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி களில் ஈடுபட்டால் வெற்றியடையமுடியும். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ராசிக்கு 3-ல் சனி இருப்பதால் உங்களின் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சூரியன், புதன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களுடைய ஆதரவானது தக்கநேரத்தில் கிடைத்து கடந்த காலப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபார முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சந்தைச் சூழ்நிலை மிகவும் சாதகமாக இருப்ப தால் உங்களது பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களைப் பெறுவீர் கள். கடந்த காலங்களில் வெளிநபர்களால் ஏற்பட்ட இடையூறுகள் முழுமையாக விலகி நிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். வேலையாட்கள் உங்கள் சொல்படி சிறப் பாக செயல்படுவதால் பல்வேறு அனுகூலங் களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். விரும்பிய இட மாற்றங்கள் கிடைத்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, சனி ஆகிய நாட் களில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர் கள். மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது மேன்மையைத் தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும், சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதாலும் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், உடனிருப்பவர்களே நெருக்கடிகளை ஏற்படுத் தக்கூடிய நிலை உண்டாகும். நீங்கள் நல்ல தாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். 5-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடன்பிறந்தவர்களை அனுசரித்துச்செல்வது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளைக் குறைக்காவிட்டால் கடன் வாங்க நேரிடும். உங்கள் கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற இடையூறு கள் ஏற்படும். சில இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் தட்டிப்போகும். சிறு வாய்ப்பாக இருந்தாலும் தற்போதைக்குக் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்துவிட்டு மற்றவர்கள் விஷயத் தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில், பிரதான கிரகங்கள் சாதக மற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகளைப் பெறுவீர்கள். சூரிய நமஸ் காரம் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும் உடல் உபாதைகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, உறவினர்களிடம் கருத்து வேறுபாடு கள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது உத்தமம். குரு உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல்போட வேண்டிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக மிகவும் கவனமாக செயல்படவேண்டும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. அசையா சொத்து வகையில் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பொருள் தேக்கங்கள் ஏற்பட்டு வரவேண்டிய பணவரவில் தடங்கல்கள் உண்டாகும். வேலை யாட்கள் இடையூறுகளை ஏற்படுத்துவதால் மன அமைதி குறையும். தொழில்ரீதியாக புதிய திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகப் படியான வேலைப்பளு காரணமாக அலைச் சல், மன அமைதிக் குறைவு ஏற்படும். நீங்கள் கடினமாக வேலை செய்தாலும் நல்ல பெயர் எடுப்பதில் தடங்கல்கள் உண்டாகக்கூடிய நேரமாகும். எதிலும் சற்று பொறுமையோடு யோசித்து செயல்படுவது நல்லது. இவ்வாரம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதக மற்று இருந்தாலும், சந்திரன் சாதகமாக சஞ்சரிப் பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவை கள் பூர்த்தியாகும். சனிபகவானுக்கு எள் தீப மேற்றுவது, முருக வழிபாடு மேற் கொள்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கக்கூடிய உன்னதமான நேரமாகும். உங்கள் செயல்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதுடன் நீண்டநாட்களாக எண்ணிய காரியங்களை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிகச் சிறப்பாக இருந்து உங்கள் கடன் களை அடைப்பது மட்டுமல்லாமல், சேமிக்கு மளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்களுக்கிருந்த சிறுசிறு உடல் பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் ஏற்படும். குறிப்பாக மருத்துவச் செலவு கள் அனைத்தும் வரும் நாட்களில் குறையும். வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் கள் இருப்பதுடன், தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் நிலை, நவீன கருவிகளை வாங்கும் யோகம் ஏற்படும். சந்தைநிலை சாதகமாக இருப்பதால் உங்களின் நீண்டநாளைய திட்டங்கள் தற்போது நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமல்லா மல் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்தவொரு செயல் செய்தாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களை அடைவீர்கள். மகாவிஷ்ணுவை தரிசிப்பது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தி யாகும். சூழ்நிலைக்குத் தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் ஆதாயங்களை அடையும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல் பட்டு அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். கடந்தகாலங்களில் உங்களுக்கிருந்த பொருள் தேக்கங்கள் தற்போது விலகி சந்தை நிலை சாதகமாக மாறி லாபங்களை ஈட்டுவீர் கள். வேலையாட்களால் இருந்த இடையூறுகள் விலகி நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உத்தி யோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமல்லாமல் உடன் வேலைசெய்பவர் கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார் கள். நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினா லும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். திருமணம் போன்ற சுபகாரியங் களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற் கொண்டால் நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளை கள்வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக் கக்கூடிய நேரமாகும். கடந்தகால உடல் உபாதை கள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். துர்க்கையம்மனை வழி படுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, பாம்புப் புற்றுக்கு பால்விடுவது சிறப்பு.