முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரட்டாதி- 2.
செவ்வாய்: அவிட்டம்- 4.
புதன்: ரேவதி- 4.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: பூரட்டாதி- 1.
சனி: சதயம்- 4.
ராகு: ரேவதி- 2.
கேது: அஸ்தம்- 4.
கிரக மாற்றம்:
பங்குனி 13 (26-3-2024) மேஷ புதன் (அதிகாலை 2.57).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
24-3-2024 பகல் 2.20 மணிக்கு கன்னி.
27-3-2024 அதிகாலை 2.56 மணிக்கு துலாம்.
29-3-2024 பகல் 2.09 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிநாதன் செவ்வாய்- சனி, சுக்கிரன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும், நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. வேலை நிமித்தமாககூட பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகம் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத் திற்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வெள்ளி பிற்பகல், சனிக்கிழமையன்று எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்ற காரணத்தால் எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பெண்கள்வழியில் அனுகூலமும் உடன்பிறந்தவர்கள்மூலம் ஒருசில சாதகமான பலன்களும் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக உள்ள சிக்கல்கள் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவ- மாணவியர்கள் சற்று முனைப்புடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதும் சிற்பான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கிதரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறைந்து பண வருவாயானது உங்களுக்கு சேமிக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சனி, சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையை எட்டுவீர்கள். தொழில் ரீதியாக இருந்த போட்டி, பொறாமை கள் எல்லாம் தற்போது குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அரசு உத்தரவுகள் கிடைக்கப்பெற்று உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் களுடைய ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். மேற்கல்விக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் சிறப்பான பலன்களை அடையக் கூடிய யோகம் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமிநரசிம்மர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். இந்த வாரத்தில் புதன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சனி, செவ்வாய், சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். வேலையாட் களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரண மாக மனஉளைச்சல், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக் கூடிய நேரமாகும். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனத்தை செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் வாய்ப்புகளும். அசையா சொத்துகள்வகையில் அனுகூலங்களும் ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அனுகூலங்கள் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு நல்லவரன் அமைந்து குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய புதன் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், சனி, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பிரதி பலனை தற்போது அடைய உள்ளீர்கள். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் பெரியவர்களிடம் பேசுகின்றபொழுது வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஒரு உயர்வான நிலையினை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல நிலை ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்ற காரணத்தினால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று கவனத் தோடு நடந்துகொள்வது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக இருந்துவந்த தடங்கல்கள் விலகி எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. 7-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, விட்டுக்கொடுத்து செல்வது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் அதிகப்படியான மதிப்பெண்களை எடுத்து பெரியோர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுடைய கனவு கள் எல்லாம் நிறைவேறி மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடகூடிய வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைவதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சனி, பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு- நிதானத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தனகாரகன் குரு 6-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்க வேண்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்கள்மூலமாக தேவையில்லாத கவலைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் பெரிய எதிர்பார்ப்பின்றி செயல்பட்டால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக வேலைப்பளு கூடுதலாக இருக்கக்கூடிய நிலை, மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் உங்கள் ராசிக்கு சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருப்பது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நீங்கள் வாங்கிய கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள், போட்டி, பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைக்கக்கூடிய அமைப்புகளும், புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கௌரவமான நிலையும் கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று நல்லபெயர் எடுப்பீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றி கிடைப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சூரியனுக்கு வழிபாடாக சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், ராகு, 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து படிப்படியான அனுகூலங்களை பெறுவீர்கள். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சனி, செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் உங்களுடைய செயல்களில் நீங்கள் சற்று பொறுமையோடு இருந்தால்தான் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வெளியூர் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாத பணிகளைகூட தற்போது எளிதில் முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற அலைச்சல், நிம்மதிக்குறைவு உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த ஒரு காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்களை அடைய முடியும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, செவ்வாய், 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படுவது, குறிப்பாக அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்களை அடையும் முடியும். ஞாயிறு மதியத்திற்கு பிறகு, திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையில்லாத அலைச்சல், சுலபமாக முடியவேண்டிய விஷயங்கள் சற்று தாமதமாகக்கூடிய நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாய், சனி, ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு வயது மூத்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கக்கூடிய யோகம் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் ஒருசில நேரங்களில் சற்று பொறுமையோடு செயல்படுவது மிகவும் சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். குறிப்பாக அதிகாரியிடம் பேசுகின்ற போது மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது, விளையாட்டு விஷயங்களில் அதிக நேரம் செலவு செய்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு யோகத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். புதன், வியாழன், வெள்ளி முற்பகல் வரை உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு காரியத்திலும் சற்று கவனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது மிகமிக நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகமிக நல்லது.