முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 3.

செவ்வாய்: கேட்டை- 4.

Advertisment

புதன்: மூலம்- 2 (வ).

குரு: அஸ்வினி- 4 (வ).

சுக்கிரன்: விசாகம்- 3.

சனி: சதயம்- 1.11

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

கிரக மாற்றம்:

மார்கழி 9 (25-12-2023) விருச்சிக சுக்கிரன் (காலை 6.46).

மார்கழி 11 (27-12-2023) தனுசு செவ்வாய் (இரவு 12.21).

மார்கழி 12 (28-12-2023) விருச்சிக புதன் (வ)

(காலை 10.55).

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். குருபார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களை பெறமுடியும். சூரியன் 9-ல் இருப்பதால் அசையா சொத்துகளில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு 12-ல் ராகு, வரும் 27-ஆம் தேதிவரை 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு, நவீன கருவிகளை வாங்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு பெரிய நிறுவ னத்தில் இருந்து அழைப்புவரும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த நாட்களில் நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிபெறும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது, முருக வழிபாடு மேற்கொள்வதுமூலம் உங்களின் சங்கடங்கள் குறைந்து நன்மை ஏற்படும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து பொருளாதாரரீதியாக அனுகூலங்களைப்பெற முடியும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். ஜென்ம ராசியாதிபதி சுக்கிரன் திங்கட்கிழமைமுதல் 7-ல் சஞ்சரிப்பதால் உங்கள் தனி திறமையால் கடந்தகால பிரச்சினைகளை சமாளித்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்ல நட்புகள் உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் ஆதாயம் அடையமுடியும். பெண்கள்வழியில் மகிழச்சி ஏற்படும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வேலைப்பளுவை குறைத் துக்கொள்வது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். மறைமுக போட்டிகள் சில நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைத்து உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச்செய்வது, சிவன் ஸ்தலங்கலுக்கு சென்று வருவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் கேது, 7-ல் மாதக்கோளான சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது உத்தமம். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பங்காளிகள்வகையில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். குரு வக்ரகதியல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது உத்தமம். நீங்கள் நல்லதாக ஏதாவது ஒரு செயல் செய்தாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு தற்போது பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்க்கொள்வீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கின்ற நேரத்தில் உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள். சனி 9-ல் உள்ளதால் ஒவ்வொரு செய-லும் கவனத்தோடு இருந்தால் நீங்க போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளுவை பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படுவது, பிறர் சொல்வதைக் கேட்டு இப்பொழுது இருக்கக்கூடிய வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பொதுவாக குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திகொண்டால் விரைவில் குரு வக்ரநிவர்த்தி (31-12-2023-ல்) அடைய இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங் கள் ஏற்படும். பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகச்சிறப்பான பலன்களை அடையும் வாய்ப்பும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டு. சிவ ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எண்ணிய உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறும். இதுநாள்வரை 5-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் 27-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் குறையும். வயது மூத்தவர்களுடைய ஆசிர்வாதம் கிடைப்பதால் நீண்டநாள் பிரச்சினைகள் எல்லாம்கூட இருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதுடன் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய நிம்மதியான நிலை ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

thisweekrasi

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 7-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ராகு 8-ல் சஞ்சரிப்பதால் வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடிவரும். நீங்கள் சும்மா இருந்தாலும் உடன் இருப்பவர்களால் உங்கள் மன அமைதி குறையும். 4, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். 9-ல் உள்ள குரு வக்ரகதியில் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கையில் இருப்பதைகொண்டு செலவுகள் செய்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒருசிலருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாத நிலை கூட ஏற்படலாம். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் நடப்பது ஒன்றாக வும் இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளிநபர்களிடம் தொழில் விஷயங்களை பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் சூழல் உண்டாகும். அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். தற்போது நிதானமாக இருந்தால் அடுத்த வாரம் குரு வக்ரநிவர்த்தி அடையும்போது அனைத்து சிக்கலும் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். சிவ ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சரபேஸ்வரரை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும், 6-ல் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நல்ல ஆதரவு கிடைக்கும். திங்கட்கிழமை முதல் சுக்கிரன் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர் களிடம் கடந்த காலங்களில் நிலவிய கருத்து வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமையான நிலை ஏற்படும். சூரியன் 4-ல், குரு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளை பராமரிப்பு பணி செய்வதற்காக செலவு செய்யும் நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சந்தை சூழ்நிலை சற்று நெருக்கடி நிறைந்த தாக இருக்கும். ஒவ்வொரு முடிவு எடுக்கின்றபொழுதும் யோசித்து எடுத்தால் வீண் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். புதிய இயந்திரங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிக்கு வெளியிடங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் பிறருடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் பொருளாதார ஆதாயம் கிடைத்து மகிழச்சி ஏற்படும். பொதுவாக எதிலும் பொறுமையோடு இருப்பது, சிந்தித்து செயல்படுவது நல்லது. இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் வெளியி-ருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைத்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். நீங்கள் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது குருபகவானுக்கு நெய்தீபமேற்றுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சகலவிதத்திலும் சுபிட்சங்கள் கிட்டும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். இதுநாள்வரை 2-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் 27-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள்கூட விலகி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியினை தரும். மணவயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் வீண் மருத்துவச் செலவுகள் குறையும். சனி 5-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சந்தை நிலை உங்களுக்கு சாதகமாக இருந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை தக்க நேரத்தில் டெ-வரி செய்து லாபத்தை ஈட்டி மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவி கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான நிலை கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். பிறரால் முடிக்கமுடியாத காரியத்தைகூட நீங்கள் தலையிட்டு எளிதில் முடித்துவிடுவீர்கள். இவ்வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் காலைவரை உங்களுக்கு தேவையற்ற குழப்பம், வீண் அலைச்சல் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பது நற்பலனை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த செய-லும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொதுவாக பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு தற்போது சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, வீட்டில் கணவன்- மனைவியிடையே விட்டுகொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் நிலவும். வண்டி, வாகனங்களை பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். கூட்டாளிகளை அனுசரித்துச்சென்றால் அவர்களின் ஆதரவால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமாக இருப்பது, வேலை ப்பளுவை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. சக ஊழியர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து சென்றால் நிலைமையை சமாளித்துவிடமுடியும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களைத் தற்சமயத்துக்கு தள்ளிவைப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதன்மூலமாக உங்களின் சங்கடங்கள் சற்று குறையும். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, ராகுகால பூஜைகளில் துர்க்கையம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 10-ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் வாழ்வில் ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்யநேரிடும். நெருங்கியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எண்ணிய காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து மனநிம்மதி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் புதிய ஆர்டர்களை பெறுவதற்கான யோகம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்கள் உற்பத்திக்கு நல்லவிலை கிடைத்து ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமையாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சுலபமாக முடியவேண்டிய செயல்கள் தாமதமாகி உங்கள் மன நிம்மதியைக் குறைக் கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் குறையும். கையில் இருப்பதைக் கொண்டு செலவுசெய்வது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர் களின் உதவியால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். சனி 2-ல், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நிலை, வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் அமைப்பு ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக போட்டிகள் எல்லாம்கூட குறைந்து அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் பிரச்சினைகளின்றி எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவுப் பயணங்களை தள்ளி வைப்பது சிறப்பு. வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு, வழக்குகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். செவ்வாய்க்கு வழிபாடாக முருகனுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைசெய்வது நன்று.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன் திங்கட்கிழமை முதல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாதகோளான சூரியன், புதனுடன் 11-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் கௌரவமான நிலை ஏற்படும். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் பொறுமையைக் கடைபிடிப்பது, பண விஷயத்தில் ஆடம்பரத்தை குறைத் துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துரீதியாக நீண்டநாட்களாக தீராத சிக்கல்கள் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் தேவையில்லாத இடையூறு களை எதிர்கொள்வீர்கள் என்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்கமுடி யாத நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நன்று. இவ்வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, விநாயகரையும், ஆஞ்சனேயரையும் வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் ஆதாயங்கள் அதிகப்படியாக கிடைக்கும். சுக்கிரன் வரும் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 9, 10-ல் சஞ்சரிப்பதாலும் மறைமுக எதிர்ப்புகள் விலகுவது மட்டுமில்லாமல் உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கவேண்டும் என்ற எண்ணங்கள் பூர்த்தியாவதற்கான சாத்திய கூறுகள் நிலவும். நீண்டநாட்களாக மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குகூட தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபத்தை பெறுவீர்கள். நீங்கள்போட்ட முதலீட்டை விட அதிகப்படியான வருவாய் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான பலனை தற்போது அடையும் யோகமுண்டு. உங்களுக்கு இருந்த சம்பள பாக்கிகள் எல்லாம் தற்சமயம் கிடைத்து உங்களின் பொருளாதார கஷ்டங்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மையை தரும்.