முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்வினி- 3.
செவ்வாய்: புனர்பூசம்- 1.
புதன்: பரணி- 3.
குரு: அஸ்வினி- 1.
சுக்கிரன்: ரோகிணி- 3.
சனி: சதயம்- 2.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
24-4-2023 பகல் 1.13 மணிக்கு மிதுனம்.
26-4-2023 இரவு 12.18 மணிக்கு கடகம்.
29-4-2023 பகல் 12.48 மணிக்கு சிம்மம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் நீங்கள் நினைத் ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு பார்வை 5, 7 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. சுக்கிரன் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக் கும். நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மல்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். புதிய வேலையை எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேராகும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தொழில்ரீதியாக சிலர் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் உங்களிடம் தேவையற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். எந்திரங்கள் பழுதாவதால் வீண் செலவு களை எதிர்கொள்வீர்கள். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் சற்று பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார் கள். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன், சூரியன், குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்வினி- 3.
செவ்வாய்: புனர்பூசம்- 1.
புதன்: பரணி- 3.
குரு: அஸ்வினி- 1.
சுக்கிரன்: ரோகிணி- 3.
சனி: சதயம்- 2.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
24-4-2023 பகல் 1.13 மணிக்கு மிதுனம்.
26-4-2023 இரவு 12.18 மணிக்கு கடகம்.
29-4-2023 பகல் 12.48 மணிக்கு சிம்மம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் நீங்கள் நினைத் ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு பார்வை 5, 7 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. சுக்கிரன் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக் கும். நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மல்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். புதிய வேலையை எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேராகும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்கும், நடப்பது ஒன்றாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தொழில்ரீதியாக சிலர் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் உங்களிடம் தேவையற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். எந்திரங்கள் பழுதாவதால் வீண் செலவு களை எதிர்கொள்வீர்கள். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் சற்று பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார் கள். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன், சூரியன், குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்புண்டு. மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர் களுடைய ஆதரவு கிடைப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனிபகவான் பாக்கிய ஸ்தா னத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த வீண் மருத் துவச் செலவுகள் குறையும். இதுநாள் வரை பல்வேறு இழப்புகளை சந்தித்த உங்களுக்கு தொழில், வியா பாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டமுடியும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் படிப்படியாகத் தீர்ந்து மனக்கவலைகள் விலகி, செய்யும் வேலைகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உழைப்புக்கான சன்மானங்கள் கிடைக்கும். வீண் பழிச்சொற்கள் விலகி மன நிம்மதி உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலை பேசி வழியில் மகிழ்ச்சிதரும் செய்திகள் வந்து சேரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், 11-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பென்ப தால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குரு பகவான் 10-ல் சஞ்சரிப் பதாலும், அஷ்டமச் சனி நடப்பதாலும் பணப் பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தள்ளிவைப்பது மிகமிக உத்தமம். சிறு உடம்பு பாதிப்பென்றாலும் அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகப்படியாக இருப்பதால் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். சில நேரங்களில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காதென்ற காரணத்தினால் நீங்கள் ஓய்வுநேரம் பார்க்காமல் கவனமாக இருந்தால்தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உழைப்புக் கான ஊதியம் கிடைக்கு மென்றாலும் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக வெளி யிடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர் பார்ப்பவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். ஞாயிறு, திங்கள், வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பும், உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் யோகமும் உண்டு.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். பொருளாதார நெருக்கடி கள் விலகி மன நிம்மதி உண்டாகும். சுக்கிரன் 10-ல் ஆட்சிபெற்று, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்த வகையில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள்மறைந்து நிம்மதி ஏற்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக் குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறைந்து சேமிக்குமளவிற்கு பொருளாதார நிலை சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி நல்ல லாபத்தை அடையமுடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைக்கும். கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டு வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். படித்து முடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத் தில் இருந்து அழைப்பு கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்துவந்த நிம்மதியற்ற நிலை விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட் களில் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். குரு, சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறுசிறு நெருக்கடி கள் ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமை யால் அனைத்தையும் சிறப்பாகக் கையாண்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். உடல் ஆரோக் கியத்துக்கு முக்கியத்துவம் தருவது, உறவினரி டம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தூரப் பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் தேவையற்ற அலைச்சல் களைக் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் சிலர் செய்யக்கூடிய செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். வெளிநபர்களிடம் தொழில் விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் அதிகாரியிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் சிறப் பாக செய்துமுடிப்பதுடன் நல்ல பெயரும் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெற்று கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். 7-ஆமதிபதி செவ்வாயும், 9-ஆம்திபதி புதனும் பரிவர்த் தனை பெற்றிருப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண மாகிய புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கான யோகமுண்டு. சனிபகவான் 5-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து அனைத்து விஷயத்திலும் உற்சாகத்துடன் செயல் படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அசையும், அசையா சொத்துவகையில் முதலீடு செய்வதற் கான யோகமுண்டு. சூரியன், ராகு 7-ல் சஞ்சரிப் பதால் வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக் கிருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தை பெறமுடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிரிகள்கூட உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய ஒரு சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அரசாங்க வழியில் சட்ட சிக்கல்கள் விலகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வீண் பழிச்சொற்கள் விலகி உங்களுடைய மதிப்பை அதிகாரிகள் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய அமைப்பும், உங்களுக்கு இருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் நடக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்களின் அனைத்து தேவைகளும் தக்க நேரத்தில் பூர்த்தியாகி மன நிம்மதி உண்டாகும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, பெண்கள்வழியில் ஒரு அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்பு உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. அதிக அலைச்சல் காரணமாக இருப் பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் உங்களின் தனித்திறமையால் போட்ட முதலை எடுத்துவிடுவீர்கள். வேலையாட்கள் செய்யக்கூடிய சில செயல்களால் தொழில் ரீதியாக வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். முக்கிய விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல் பட்டால் நல்ல வாய்ப்பை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் மன அமைதி குறையும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்க முடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். திங்கள் பிற்பகலுக்கு பிறகு, செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் சந்திராஷ்டம் என்பதால் தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்பட்டு உங்கள் மனநிம்மதி சற்று குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் விலகி சகல விதத்திலும் ஏற்றங் களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, உறவினர் களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துவழியில் பங்காளியிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால மனக் கசப்புகள் எல்லாம் விலகி தற்போது நல்ல லாபத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழிலை விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியும், எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை தொழிலுக்காக வாங்குவீர்கள். வேலையாட் களால் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், விரும்பிய இடம் மாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி முற்பகல் காலத்தில் சந்திராஷ்டமம் என்பதால் வீண் அலைச்சல், எதிலும் நிம்மதியில்லாத நிலை ஏற்படும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும். அலைச்சல் காரணமாக மன நிம்மதி குறைவு உண்டாகும். பண பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நெருங்கிய உறவினர் கள் நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். தொழில், வியாபாரத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். நேர காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். வாகனங்கள் மூலமாக வீண்செலவுகள் ஏற்படும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய வீண் பயணங்களால் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக சக ஊழியர்களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை இருக்கும். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான சம்பளம் கிடைக்கும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு பேசினால் நிலைமையை சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சனிக்கிழமை பிற்பகல் காலத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் பொறுமையோடு இருப்பது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், ராகு, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் மிக மிக சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வீடுகளை பழுது பார்ப்பதற்காக சுபச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நல்ல லாபத்தை அடைய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உங்களுக்கு இருக்கக்கூடிய சிறுசிறு உடம்பு பாதிப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். குடும்ப விஷயங்களை வெளி நபரிடம் பேசாமல் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பண உதவி செய்யாமல் இருப்பது தற்போதைய நேரத்திற்கு நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சிறப்பாக சஞ்சரிப்பதால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகபடியான ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வயது மூத்தவர்களிடமும் பங்காளிகளிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தற்போது உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டுக்கு குரு மாறுதலாக இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை படிப்படியாக உயரும். உங்களின் கடன் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் இருந்த மறைமுக பிரச்சினைகள் விலகும். ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாக தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து வளமான பலன்கள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் சொல்லக்கூடிய நேரம் என்பதால் பணியில் மட்டும் கவனத் தோடு இருப்பது, முக்கிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்கள்வழியில் ஒரு சில உதவிகள் கிடைத்து அதன் மூலம் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வெளியூர் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். ஒரு புதிய செயலில் நீங்கள் ஈடுபட்டால் அதற்கு பரிபூரண வெற்றி கிடைக்கும்.