முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: சித்திரை- 4.

செவ்வாய்: மிருகசீரிடம்- 3.

Advertisment

புதன்: சித்திரை- 1.

குரு: உத்திரட்டாதி- 1 (வ).

சுக்கிரன்: சித்திரை- 4.

சனி: அவிட்டம்- 1 (வ).

tt

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

ஐப்பசி 6 (23-10-2022)

சனி வக்ரநிவர்த்தி

(காலை 9.36).

ஐப்பசி 9 (26-10-2022) துலா

புதன் (பகல் 1.47).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

25-10-2022 அதிகாலை

2.32 மணிக்கு துலாம்.

27-10-2022 காலை 6.30 மணிக்கு விருச்சிகம்.

29-10-2022 காலை

9.05 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும், 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 7-ல் வலுவாக இருப்பதும் சிறப்பென் பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய யோகமுண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் யோகம், திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் கைகூடக்கூடிய அமைப்புண்டு. ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டாளிகளுடைய ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூல மான செய்தி கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பும், வேலைப் பளு குறையக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூல மான நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்று வது சிறப்பு.

tt

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகால மறைமுகப் பிரச்சினைகள் விலகி சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வார முற்பாதியில் புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து, பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. சனி 9-ல் சஞ்சரிப்ப தால் பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்களின் தொந்தரவுகள் முழுமையாக மறைவதால் மனநிம்மதி ஏற்படக்கூடிய நிலை வரும் நாட்களில் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். இக்கட்டான நிலையில்கூட சாமர்த்திய மாக செயல்பட்டு காரியங் களில் வெற்றிபெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் ஈடுபாட்டுடன் செயல்படமுடியும். வேலைப் பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. உடல்நல பாதிப்புகளெல் லாம் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் )

ராசியாதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதும், 5-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதும் எல்லாவகையிலும் அனுகூல மான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பா கும். லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்ப தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடைய உதவியானது மிகவும் சாதகமாக இருக்கும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால பொருட்தேக்கங்கள் விலகி சகலவிதத்திலும் ஆதாயங்களை அடைவீர் கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை சிறப் பாக இருப்பதால் கடந்த கால சோதனைகள் மறைந்து லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்களின் கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள், பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் கையாண்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் அனுகூல மான பலன்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் எதிர்பார்த் ததைவிட அதிகப்படியான ஆதாயங்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதும், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தும் சாதகமற்ற அமைப் பென்பதால் எதிலும் நிதா னத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் வீண்செலவுகள், கணவன்- மனைவியிடையே தேவை யில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். சனி 7-ல் இருப்பதால் முடிந்தவரை உடனிருப்பவர்களை அனு சரித்துச்செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்து டன் இருந்தால்தான் நெருக் கடிகளை சமாளிக்கமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கவேண்டிய நேரத்தில் தேவையற்றவகையில் இடையூறுகள் ஏற்படும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக் காது. உங்கள் பணியில் மட்டும் நீங்கள் தற்போதைக்கு கவனமாக இருந்தால் விரைவில் நல்ல நிலையை எட்டமுடியும். வேலையாட்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியரீதியான பாதிப்புகளால் ஈடுபாட்டுடன் பணிபுரிய முடியாது. மேலதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பிரச்சினைகளை சமாளிக்கும் பலமேற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறும் வாய்ப்புண்டு. சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன் 3-ல் கேதுவுடன் சஞ்சரிப்பதால் அனைத்து விதமான செயல்களிலும் வெற்றிமேல் வெற்றி யடைவீர்கள். இதுநாள் வரை வக்ரகதியில் சஞ்ச ரித்த சனி தற்போது வக்ர நிவர்த்தி பெற்று 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும், வலிமையும் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் கடன்கள் அனைத்தையும் பைசல் செய்யமுடியும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலமுண்டாகும். செவ்வாய் 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத் தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளைப் பெறமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல்மூலமாக லாபகரமான பலன்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக் காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நிம்மதியுடன் பணிபுரியமுடியும். புதிய வாய்ப்பு எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். வரும் வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றவாறு இருந்து அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பணவரவானது ஏற்ற- இறக்கமாக இருக்குமென்பதால் ஆடம்பரத்தைக் குறைத் துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு இலக்கை அடைவீர்கள். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் நேரமென் பதால் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் நெருக்கடிகளை சமாளித்து நல்ல லாபத்தை அடையமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சகஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் எல்லா வகையிலும் ஏற்றத்தைத் தரும் நாட்களாக இருக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வாகனங்கள்மூலமாக செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், குரு வக்ரகதியில் இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் மிகவும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். கிடைக்கும் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வெளியாட்களால் சில இடையூறுகள் ஏற்படுமென்றாலும், சற்று கவனத்தோடு இருந்தால் நிலைமையை சமாளித்து முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோக ரீதியாக பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் ஏற்படலாமென்பதால் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் பணியில் தற்போதைக்கு கவனம் செலுத்தி பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் நல்லநிலையினை அடையமுடியும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் சிறப்பான பலன்களை அடையும் யோகமுண்டு. உங்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்போடு பழகுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசியாதிபதியான செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை அடையும் யோகமுண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரிசெய்து நல்லபெயர் எடுப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையை எட்டமுடியும். பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப்பாகக் கையாண்டு சூழ்நிலையை சமாளிப்பீர்கள். வாகனங் களில் செல்லும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் பொருளாதாரரீதியாக மிகவும் சாதகமான பலன்களை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், கேதுவுடன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். ராசியாதிபதி குரு 4-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து எல்லாவகையிலும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் யோகமுண்டாகும். உங்கள் ராசிக்கு புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் சூழலுக்குத் தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத் தையும், பொருளாதார அனுகூலத்தையும் பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் உதவி கிடைப்பதால் தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வை அடையக்கூடிய யோகமுண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளும் நேரமென்பதால் சிந்தித்துப் பேசுவது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச்செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தும், 10-ல் சூரியன், சுக்கிரன், கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் எதையும் எதிர்கொண்டு நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நெருங்கியவர்களின் உதவியால் உங்களுக்கிருந்த பெரிய பிரச்சினையானது தற்போது குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் தற்போது மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பல்வேறு பணிச்சுமை காரணமாக அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்பு கள் கிடைப்பதால் பொருளாதார முன்னேற்றங் களைப் பெறமுடியும். எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யும் வாய்ப்புண்டாகும். நீங்கள் தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, சனிபகவானுக்கு அர்ச்சனைசெய்வது, மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் அனைத்து செயலிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். 9-ல் சுக்கிரன், சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொன்றிலும் சிந்தித்து செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். பணவரவில் ஏற்ற- இறக்க மான நிலை இருக்குமென்பதால் ஆடம்பரத் தைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள்மூலமாக சில இடையூறுகள் ஏற்படும். காலநேரம் பார்க்காமல் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் இடர்களை சமாளித்து நிலைமையை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. உங்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்குமென்றாலும் உடன் வேலைசெய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி செயல்பட்டால் நல்ல வளர்ச்சியினை அடையமுடியும். சிலருக்கு வெளியூர்மூலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட்டு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளமுடியும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, பைரவரை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் பிரச்சினைகள் அதிகரிக்கும். குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி வலுவாக சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து உங்களின் அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, வாகனங்களில் பொறுமையோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் நல்ல லாபங்கள் கிடைக்கும். சில பணிகளில் மற்றவர்கள் உதவியை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடையமுடியும். அரசாங்கவழியில் சில கெடுபிடிகள் இருக்குமென்பதால் வெளி நபர்களிடம் பேசும்பொழுது பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருந்தாலும், அதற்கான ஆதாயங்களைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.