முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: உத்திரம்- 3.
செவ்வாய்: திருவாதிரை- 3.
புதன்: உத்திரம்- 1.
குரு: மிருகசீரிடம்- 1.
சுக்கிரன்: சித்திரை- 4.
சனி: பூரட்டாதி- 1 (வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்:
(23-9-2024) கன்னி புதன் (பகல் 10.11).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மேஷம்
22-9-2024 காலை 6.09 மணிக்கு ரிஷபம்.
24-9-2024 காலை 9.55 மணிக்கு மிதுனம்.
26-9-2024 மாலை 5.12 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு உள்ள வேலைப்பளு சற்றுக் குறைந்து மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப் பாக செயல்படுவது மட்டு மில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகளும், வெளியூர் பயணங்கள் மேற்கொள் ளக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை பெற பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 5-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள், வேலை யாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் அடையவேண்டிய அனுகூலங்களை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி, குடும்பத்தில் நிம்மதிக் குறைவு ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 27, 28.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், சுக ஸ்தானமான 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டும். வரும் திங்கட்கிழமைமுதல் ராசியாதி பதி புதன் 4-லும், சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை உங்களின் தனித் திறமை யால் எளிதில் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். வண்டி, வாக னங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு உடனிருப்பவர்களால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சூரியன்- கேது சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதா லும், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் அனு கூலமான பலன்கள் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் எண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு உயர்வான நிலையினை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் நீங்கள் மற்றவரிடம் வாங்கிய கடன்களைப் பைசல் செய்யக் கூடிய அளவிற்கு பொருளா தார பலமும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவு களை பெறமுடியும். உத்தியோகரீதியாக நல்ல ஒரு முன்னேற்றமும், புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர் களுக்கு கௌரவமான இடத்திலிருந்து அழைப்பு வரும் யோகமும் இந்த வாரத்தில் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களிடம் பாராட்டுதல்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம் மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 27, 28.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக தொழில், வியாபாரத் தில் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25, 26.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்குகூட தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து லாபகரமான நிலையினை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும், மறைமுக எதிர்ப்புகள் குறையக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். தொழில்ரீதியாக வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு அனுகூலமான பலன்களை அடைவார்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 28.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும், குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஒன்றாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது தற்போதைக்கு உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படக்கூடிய நேரமாகும். சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். சில விஷயங்களில் வேலையாட்களை நம்பாமல் எதிலும் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். உத்தியோகரீதியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். சக ஊழியரிடம் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபகமறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்து நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் சுலபமாக கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. இரவு நேரப் பயணங்களில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் வருகின்ற நாட்களில் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உறவினர்கள் மூலமாக ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மட்டுமின்றி கலை மற்றும் விளையாட்டு துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள்வழியில் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு வரும் திங்கட்கிழமைமுதல் புதன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தி களை பயன்படுத்தி லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளியிடம் தேவையற்ற மனதாபங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு நடந்துகொள்வது நல்லது. குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பதும், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வதும் நல்லது. உத்தியோகரீதியாக உங்கள் உழைப்புக் கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியருடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் மேற்படிப்புக் காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு வெளியிடங் களில் இருந்து நல்ல ஆதரவு கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான சுக்கிரன் பத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீண்டநாட்களாக இழுபறிகளில் இருந்துவந்த வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து மன நிம்மதி உண்டாகும். உடன் பிறந்த வர்கள்மூலமாக ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். காலபைரவரை வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 28.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களாளே தேவையற்ற தடைகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தற்போது ஈடுபடாமல் இருப்பது உத்தமம். ஒருசிலருக்கு அலர்ஜி சம்பந்தப்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் பொறுமை காப்பது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், கேது, 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து சென்றால் தான் நிலைமையை சமாளிக்கமுடியும். உற்றார்- உறவினர் களே உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்பட்டால் தான் உங்களுடைய முதலீடுகளை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் அவர்களை எதிர்பார்க்காமல் சில நேரங்களில் நீங்களே நேரடியாக சில விஷயங்களில் செயல்பட்டால்தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23.