முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 2.
செவ்வாய்: கிருத்திகை- 3.
புதன்: உத்திரம்- 2.
குரு: உத்திரட்டாதி- 4. (வ)
சுக்கிரன்: ஆயில்யம்- 1.
சனி: அவிட்டம்- 2. (வ)
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
21-8-2022 மாலை 6.10 மணிக்கு மிதுனம்.
24-8-2022 காலை 6.56 மணிக்கு கடகம்.
26-8-2022 காலை 6.32 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சாதகமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. சூரியன் 5-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பிரதான கிரகங் களான குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து அனைத்துவகையிலும் நல்ல முன்னேற்றங் களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தோடு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போது நீங்கள் ஏதாவது முதலீடுகள் மேற்கொண்டால் அதற்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியான பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்துவிட முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்பை எதிர்பார்த்த வர்களுக்கு நல்ல நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டு மல்லாமல், நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற் கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்ப தால் சூழலுக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொண்டு இலக்கை அடைவீர்கள். வெளியூர் மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். என்றாலும் வெளிநபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட் கள் தேவையற்ற நெருக்கடி களை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் அவர்கள் உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் கவனத்தோடு செயல் பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். எந்திரங் கள் பழுதாவதால் எதிர் பாராத செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நம்பிக்கைக்குரிய நபர்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சிறப்பாகக் கையாளமுடியும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். சிவன் கோவிலுக்குச் சென்றுவருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவிசெய்வது நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருந்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி களை வரும் நாட்களில் எளிதில் நிறைவேற்றுவீர் கள். தடைப்பட்ட திருமண சுபகாரிய முயற்சி களைத் தற்போது மேற்கொண்டால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்தி கிடைக்கும். உறவினர் களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி நிம்மதி உண்டாகும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் அனுகூலமான பலன் களைப் பெறமுடியும். தொழில் நிமித்தமாக அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெற்று தொழிலை அபி விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். அதிகாரி கள் ஆதரவு மிகவும் அனுகூலமாக இருப்பதால் விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்துடன் இணையும் வாய்ப்புண்டாகும். திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங் களை அடையமுடியும். கந்தசஷ்டி கவசம் படிப்பது, முருகன் தலங்களுக்குச் சென்று வருவது, சனிக்கிழமைகளில் சனிக்கு எள்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்க ளால் முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலை சாதகமாக இருந்து பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்ப உறுப்பினர்களின் உதவியானது சிறப் பாக இருக்கும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்கள் பார்த்து வியக்கு மளவுக்கு நல்ல லாபத்தை அடைவீர்கள். வெளிநபர் களால் இருந்த இடையூறுகள் தற்போது விலகுவதால் நிம்மதியுடன் தொழில்புரிய முடியும். புதிய யுக்திகளைக கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால், சிறுசிறு பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு திறமைகளை வெளிக் காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத பணவரவுகள் ஏற்பட்டு, கடந்தகால சோதனைகள் விலகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச் சனை செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் பேச்சுத் திறமை யால் பல்வேறு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பண வரவுகள் சிறப் பாக இருக்கும் நிலையுண்டு. உறவினர் கள் உறுதுணையாக இருப்பதால் கடந்த காலங்களில் இருந்த கவலைகள் விலகி நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை எளிதில் எதிர்கொண்டு இடத்தை அடையக்கூடிய வாய்ப்புண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் முழுமையாக விலகும். மதிப்புமிகு பதவிகள் தேடிவந்து பொதுநலப் பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புண்டாகும். வேலைக் குச் செல்பவர்களுக்குத் திறமை களை வெளிக்காட்டுவதற் கான நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எந்த முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவதன்மூலம் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாவதுடன் நெருக்கடிகளும் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறிது எதிர்ப்புகள் இருந்தாலும் கிடைக்கவேண்டிய லாபங்கள் கிடைக்கும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் தொழில், வியாபாரத்தில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். வெளியூர், வெளிமாநிலம் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். பணியில் வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். திங்கள், செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததை எளிதில் செய்துமுடிக்க முடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது உத்தமம்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். பிரதான கிரகங்களான குரு, சனி சாதகமற்ற ஸ்தானத் தில் இருந்தாலும், தற்போது வக்ரகதியில் இருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களும், தாராள தனவரவும் ஏற்படும். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் நடக்கும். ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து செல்வது, இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் நிலவிவந்த நெருக்கடிகள் தற்போது விலகி சந்தைச் சூழ்நிலை சாதகமாக மாறுவதால் உங்கள் உழைப்பிற்கான பலன்களைத் தற்போது பெறுவீர்கள். லாபங்கள் கிடைத்து மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை பைசல் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருக்கும். புதிய வேலையை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற குழப்பம் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஒரு புதிய செயலில் ஈடுபட்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். முருகப் பெருமான், மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறப்பான வாய்ப்பு கள் தேடிவரும். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். சுக்கிரன் 9-லும், புதன் 11-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு இருப்பதால் நீண்டநாள் நெருக்கடிகள் தற்போது முடிவுக்கு வரும். ராகு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்போடு பழகுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சுமூகமான நிலை இருக்கும். மற்றவர் களால் முடிக்கமுடியாத செயல்களைக் கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளியூர், வெளிமாநிலங் கள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்தகால மருத்துவச் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துவகையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சனிக்கிழமை உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தருவது நன்று.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறுவகையில் ஏற்றங் களை அடைவீர்கள். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையிலிருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல செய்தி கிடைக்கும். ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, தேக்கநிலை மாறி நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். வாங்கிய கடன்களைப் பைசல் செய்யு மளவுக்கு பொருளாதாரநிலை சாதகமாக இருக்கும். 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தருவது உத்தமம். சில நேரங்களில் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை ஏற்படும். உடன் வேலைசெய்பவர்களால் இருந்த தொந்தரவுகள் மறைந்து நிம்மதியுடன் பணியாற்றமுடியும். வேலைப்பளு குறையும் சூழ்நிலையும், சிலருக்கு விரும்பிய இடமாற்றங் களை அடையும் யோகமும் உண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் எண்ணிய காரியங்களை செயல்படுத்தினால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ராகு காலங்களில் அம்மன் தலங்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்வது உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராசிக்கு 5-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உற்றார்- உறவினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வாகனங்கள்மூலமாக எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போது தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் தொழிலில் அமைதி குறையும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் பேச்சுக்கு செவிசாய்க்காமல் பொறுமையோடு இருப்பது, அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், சந்திரன் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் அனுகூலமான இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு நிலைமையை சமாளிக்கமுடியும். சனிபகவானுக்கு எள்தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, பிரதோஷநாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது நன்று.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே அமைதியைக் குறைப்பார்கள். குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எனவே ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனத்தோடு செயல்படாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். சக ஊழியர்கள்மூலமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. ராகு 3-ல் இருப்பதால் எந்த நெருக்கடியையும் எதிர்கொண்டு இலக்கை அடைவீர்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் இந்த நாட்களில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயல்களுக்கும் ஆதாயங்கள் கிடைப்பதுடன், அனுகூலப் பலன்களும் உண்டாகும். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டில் கலந்துகொள்வது, ஏகாதசியன்று விரதமிருந்து மகாவிஷ்ணு வுக்கு துளசிமாலை சாற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு அனைத்துவிதமான சிக்கல்களும் தீர்ந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது தீர்ந்து பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் பல்வேறு காரியத்தை வரும் நாட்களில் எளிதில் சாதித்துக்கொள்ளமுடியும். புதிய இயந்திரங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் அடையமுடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகமுண்டு. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்களின் அனைத்துவிதமான செயல்களுக்கும் ஆதாயம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.