இந்த வார ராசிபலன் 21-5-2023 முதல் 27-5-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-21-5-2023-27-5-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3.

செவ்வாய்: பூசம்- 1.

dd

புதன்: அஸ்வினி- 4.

குரு: அஸ்வினி- 3.

சுக்கிரன்: புனர்பூசம்- 1.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

21-5-2023 இரவு 9.46 மணிக்கு மிதுனம்.

24-5-2023 காலை 8.26 மணிக்கு கடகம்.

26-5-2023 இரவு 8.50 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், குரு, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்று வீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தேவை யற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்பட்டாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்தால் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அடையவேண்டிய லாபத்தை எளிதில் அடைவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகளின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிமாநிலம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து நிம்மதி ஏற்படும். வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பெண்கள்மூலமாக ஒருசில உதவிகள் கிடைக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. குரு, புதன் 12-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருந்தாலும் சக்திக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படுவதால் எதிலும் சற்று சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்தி லும் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும். ஒருசிலரது செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். வேலையாட்கள் சரிவர ஒத்துழைக்க மாட்டார்கள். அலைச்சல் காரணமாக மனநிம்மதி குறையும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் சரியாகப் பணிபுரிந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய ஒரு இக்கட்டான நிலை நிலவும். ஒவ்வொரு செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3.

செவ்வாய்: பூசம்- 1.

dd

புதன்: அஸ்வினி- 4.

குரு: அஸ்வினி- 3.

சுக்கிரன்: புனர்பூசம்- 1.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

21-5-2023 இரவு 9.46 மணிக்கு மிதுனம்.

24-5-2023 காலை 8.26 மணிக்கு கடகம்.

26-5-2023 இரவு 8.50 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், குரு, லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்று வீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தேவை யற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்பட்டாலும் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்தால் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அடையவேண்டிய லாபத்தை எளிதில் அடைவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகளின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிமாநிலம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து நிம்மதி ஏற்படும். வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். நீண்டநாள் இழுபறி நிலையிலிருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பெண்கள்மூலமாக ஒருசில உதவிகள் கிடைக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. குரு, புதன் 12-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருந்தாலும் சக்திக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படுவதால் எதிலும் சற்று சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்தி லும் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும். ஒருசிலரது செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். வேலையாட்கள் சரிவர ஒத்துழைக்க மாட்டார்கள். அலைச்சல் காரணமாக மனநிம்மதி குறையும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் சரியாகப் பணிபுரிந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய ஒரு இக்கட்டான நிலை நிலவும். ஒவ்வொரு செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- குரு, ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறக்கூடிய உன்னதமான நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் சற்று பொறுமையோடு இருப்பது, உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத் தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல் லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை தொழிலுக்காக வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் முழுமையாக மறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படும் வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். படித்துமுடித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற சிறப்பான வேலைவாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் சிறுசிறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கலாம். திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் வரும். பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருந்தா லும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் தீர்க்கமுடியாமல் இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறுசிறு வாய்ப்பையும் தவறவிடாமல் பொறுப்புடன் செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுப்பதுடன் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படாமல் சமாளிக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகப்படியாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அனைத்தையும் சமாளித்து இலக்கை அடைவீர்கள். அதிக அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருப்பதனால் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உடன் வேலை செய்பவருடைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை நிலவும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச் சிறப் பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். ராசியாதிபதி சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமல்லா மல் நீண்டநாட்களாக இருந்த மனக்கவலைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஒருசிலருக்கு வீடு, மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை தந்தாலும் உங்களுக்கு எந்தவிதத்திலும் பிரச்சினைகள் இருக்காது. கடந்த காலசட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை சிறப்பாகச் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பதுடன் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களுடைய நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும்.

tt

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையி லும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புத்துணர்வுடன் செயல்பட்டு நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். ராசியாதிபதி புதன்- குரு சேர்க்கைப்பெற்று 8-ல் இருப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். பங்காளியிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வதனமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக முடிப்பீர்கள். அதிகாரியிடம் கடந்த காலங்களில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான நிலை ஏற்படும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு கௌரவமான இடத்திலிருந்து அழைப்புவரும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் கிடைக்கப்பெற்று, நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருந்து மன நிம்மதி ஏற்படும். கடந்தகால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைவது மட்டுமில்லாமல் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பங்காளிவகையில் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் உங்களுக்கு வரவேண்டிய ஒரு பெரிய தொகை வந்தடைந்து மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கௌரவமான நிலை தொழில், வியாபாரத்தில் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கூட்டாளிகள்மூலமாக சாதகமான பலன்களை பெறுவீர்கள். பயணங்கள்மூலமாக பொருளாதார அனுகூலங் கள் கிடைக்கும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியுடைய பாராட்டை பெறுவீர்கள். ஒருசிலருக்கு நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது வந்தடைந்து உங்களின் பொருளாதார சிக்கல்கள் குறையும்., வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான நாட்களாக இருந்து எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் வெற்றிபெறும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் காரணமாக உங்கள் சேமிப்புகள் குறையக்கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கிறது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக வீண் நெருக்கடிகள் ஏற்படும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டி போகும். சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் வீண் பழிச் சொற்களுக்கு ஆளாகக்கூடிய நேரமாகும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். தடைப்பட்ட செயல்களை மீண்டும் தொடங்கு வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு- புதன் சேர்க்கைப்பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவுகள் கிடைக்கும். மாத கோளான சூரியன் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான விலை கிடைக்கும். கூட்டாளிகள்மூலமாக சாதகமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் திருமண வயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தற்போது மறைந்து ஒற்றுமை யான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் உங்கள் பணியில் திறன்பட செயல்படுவீர்கள். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். படித்து முடித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செவ்வாய் 7-ல் சஞ்சரிப் பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார் கள். உடல்ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதையும் அலட்சியப் படுத்தாமல் ஆரோக்கியத்திற்கு முக்கியத் துவம் தரவேண்டிய நேரமாகும். வயது மூத்தவர்களிடம் வீண் பேச்சை குறைத்துக் கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை நீங்கள் நேரடியாக பேசாமல் மற்றவர்களை வைத்து பேசுவது தற்போதைக்கு நல்லது. உங்கள்மீது வீண் பழிச்சொற்களை மற்றவர்கள் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். பொதுவாக உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்ப தால் ஒருசில ஆதாயங்களை பெற்று உங்கள் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடி இருந்தாலும் மன தைரியத்துடன் செயல்படுவீர் கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் நல்ல நிலையினை அடைவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் பொறுமையோடு செயல்படுவது, எதிலும் சிக்கனமாக இருப்பது தற்போதைக்கு நல்லது. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். மாதக்கோளான சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். போட்ட முதலை எடுக்கவே போராட வேண்டியிருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. வெளியிடங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காத காரணத் தால் மனக்கவலை, தொழிலில் அன்றாட செயல் களில் சகஜமாக செயல்படமுடியாத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டு மில்லாமல் அதிகாரியிடம் கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களால் ஆரோக்கிய பாதிப்புகளும், பண விரயங்களும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தா லும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு அனுகூல மாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளைப் பெற்று மன நிம்மதி அடைவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் தலங்களுக்கு சென்று சிவ வழிபாட்டை மேற்கொள்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குரு 2-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். புதுமணத் தம்பதிகளுக்கு புத்திரப்பேறு அடைவதற்கான யோகம் உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, எதிர்பார்த்த உயர்வுகளை அடையும் வாய்ப்பு ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக அமைந்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் ஒரு சாதகமான பலன்கள் வருகின்ற நாட்களில் ஏற்படும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கோபத்தை மட்டும் சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் அனுகூல மான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மன நிம்மதி யுடன் பணிபுரியமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக மறையும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனு கூலம் உண்டாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ப்

bala260523
இதையும் படியுங்கள்
Subscribe