முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வனி- 3.

செவ்வாய்: பூரட்டாதி- 3.

Advertisment

புதன்: ரேவதி- 2 (வ).

குரு: கிருத்திகை- 1

சுக்கிரன்: ரேவதி- 3.

rasi

சனி பூரட்டாதி- 1.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

சித்திரை 10 23-4-2024 மீன செவ்வாய் (காலை 8.38).

சித்திரை 11 24-4-2024 மேஷ சுக்கிரன் (இரவு 11.58).

சித்திரை 12 25-4-2024 புதன் (வ) நிவர்த்தி (மாலை 6.23).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கன்னி.

23-4-2024 காலை 9.18 மணிக்கு துலாம்.

25-4-2024 இரவு 8.00 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்ப தால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கக்கூடிய நிலையும், நல்ல நட்புகளும் உங்களை நாடிவரும். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 11-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய், செவ்வாய்க்கிழமைமுதல் 12-ஆம் வீட்டில் ராகு சேர்க்கைபெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட் களுக்கு நல்ல விலை கிடைப்பதால் லாபகரமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக் குச் செல்பவர்கள் உங்களுடைய பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்- ஆசிரியர்கள் பெருமைப் படும்படியான வாய்ப்புகள் அமையும். வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் உங்களுக்கு மகிழ்ச்சியையும் அனுகூலப் பலன்களையும் தரும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு தேவை யற்ற மனகுழப்பங்கள், வீண் அலைச் சல்கள் ஏற்படும். இந்த வாரத்தில் துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு, புதன் சஞ்சரிப்பதாலும் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்ப தாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள் மூலமாக ஒருசில அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு, சூரியன் 12-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற் கான ஆதாயத்தை நீங்கள் பெறக் கூடிய வாய்ப்புகள் அமையும். உடன் வேலை செய்பவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்து வது, இயற்கை உணவுகளை உட் கொள்வது நன்மை தரும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்பு களைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேர மாகும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த ஒரு காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதுமூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளமுடியும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடும். ராசியாதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட் களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப் படும் அளவிற்கு உங்களது வளர்ச்சியானது இருக்கும். சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் வெளியூர் மூலமாக அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். பணவரவு கள் தாராளமாக இருந்து நீங்கள் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதி களைக் காப்பாற்றக்கூடிய ஒரு பலமும், ஒரு சிலருக்கு அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வேலைக்குச் செல்பவர் களுக்கு இதுவரை இருந்த இடர்பாடுகள் விலகி மன நிம்மதியுடன் பணிபுரியக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்க முடியும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற் கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் மிகவும் உற்சாகத் தோடு செயல்படக்கூடிய நிலையும், நல்ல ஆதரவுகள் கிடைக்கக்கூடிய யோகமும் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை குறைத்துக் கொள்ளமுடியும். புதன் 9-ல் சஞ்சரிப்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உடன் இருப்பவர் களிடம் பேசுகின்றபொழுது கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் எதிர் பாராத உதவிகள் கிடைத்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு பணிச்சுமை கூடுத லாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையக்கூடிய நிலை, வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் தேவை யற்ற மனஸ்தாபம் போன்றவை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல ஆதரவு கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

rr

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன்- குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெற்றோர்களுடைய ஆதரவு தற்போது கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக் கூடிய சுக்கிரன் வரும் வியாழக்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைகூட வருகின்ற நாட்களில் பெறமுடியும். சட்ட ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி சுமூகமானநிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது மிகமிக நல்லது. குடும்பத்தில் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நெருங்கியவரிடம் பேசுகின்றபொழுது மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப்பாக செயல் பட்டு அதிகாரியினுடைய பாராட்டு தலை பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங் கள் கிடைக்கும். மாணவ- மாணவியர் கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். தடைப்பட்ட செயல்களை மீண்டும் தொடங்குவதற் கான சந்தர்ப்பங்கள் அமையும். துர்க்கையம்மனுக்கு தீப மேற்றுவது, லஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- குரு சேர்க்கைபெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது, வயது மூத்தவரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசுவது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான விலை கிடைத்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அமைப்பும், போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், மற்றவர் களால் முடிக்க முடியாத பணிகளை நீங்கள் செய்து முடிக்கக்கூடிய பலமும் ஏற்படும். ஒருசிலருக்கு தேவை யில்லாத பயணங்கள் அதன்மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் களை எடுப்பீர்கள் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் சம சப்தம ஸ்தானமான 7-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்வை செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன், தேவையற்ற கவலைகள் எல்லாம் மறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான சுபகாரியங்கள் தற்போது கைக்கூடி மனமகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களுடைய உதவியானது சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகமானது இருக்கிறது. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய அமைப்பு உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் நிறைய ஆர்டர்களை எடுத்து உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணியெல்லாம் தற்போது முடிந்து மனதிலுள்ள பாரம் குறையும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய யோகமும், உல்லாச பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு மிகவும் அனுகூலமான பலன்களை பெரும் யோகம் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் சற்று தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாதக்கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் ஒருசில ஆதரவுகள் இக்கட்டான நேரத்தில் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக மே 1-ல் ஏற்படக்கூடிய குரு மாற்றம் உங்களுக்கு ஒரு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாக தற்போதைய நேரம் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் பொறுமையோடு செயல்படுவதன்மூலம் எதிர்பார்த்த நற்பலன்களை அடையமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது அம்மனின் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடைய வேண்டியதை அடையும் பலம் உண்டாகும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாளைய ஆசைகள் எல்லாம் தற்போது நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்துக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், உங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தியவர்கள் தற்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய நிலையும் உண்டாகும். பணி நிமித்தமாக ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங் கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்டநாள் எண்ணங்கள் எதிர்பாராத வகையில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனிபகவான் செவ்வாய் சேர்க்கைப்பெற்று 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குருபகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். வண்டி, வாகனங்கள்மூலமாககூட வீண் விரயங்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகமிக நல்லது. ஒருசிலருக்கு அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். தற்போதைக்கு நீங்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டால் இன்னும் இரு வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருப்பது உத்தமம். சகஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பழகுகின்றபொழுது சற்று எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான பலனை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். அலைபேசிவழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலம் நன்மையை அடைய முடியும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராகுபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சும்மா இருந்தாலும் வீண் பிரச்சினைகள் உங்களைத்தேடி வந்து மனநிம்மதியைக் குறைக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்துடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் தற்போது 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வேலையாட்களை நம்பாமல் ஒருசில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் எடுத்த ஆர்டர்களை முடிக்கமுடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாக தற்போதைய நேரம் இருக்கிறது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது மிகமிக நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்ல பெயர் எடுக்கமுடியும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது தற்போதைக்கு உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனமாக இருப்பது, மற்றவரிடம் பேசுகின்றபோது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகச்சிறப்பான பலன்களை அடையும் வாய்ப்பும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டு. காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய் தீபமேற்றுவது நன்மையை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்ப தாலும் 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். சுக்கிரன் இந்த வாரத்தில் ஜென்ம ராசி, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்வதால் பெண்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களை பெறுவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களுக்கு எந்த விதத்திலும் இடையூறுகள் இன்றி அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவெல்லாம் கிடைப்பதால் தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைத் தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியருடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள், வீண் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.