முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 3.
செவ்வாய்: பூராடம்- 2.
புதன்: பூராடம்- 1.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: மூலம்- 1.
சனி: சதயம்- 2.
ராகு: ரேவதி- 3.
கேது: சித்திரை- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- ரிஷபம்.
22-1-2024 மாலை 4.22 மணிக்கு மிதுனம்.
25-1-2024 அதிகாலை 1.47 மணிக்கு கடகம்.
27-1-2024 பகல் 1.01 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் 9-ல் அமையப்பெற்று 9-ஆம் அதிபதி குரு ஜென்ம ராசியில் அமையப்பெற்று 1, 9-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனுகூல பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரரீதியாக மிகச் சிறப்பான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவிகள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கேது 6-ல் சஞ்சரிப்ப தால் இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் குறையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, பைரவர் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாய், புதன் சேர்க்கைப்பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படலாம். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். குருபகவான் விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படுவதும், சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வதும் நன்மையைத் தரும். சூரியன் உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் உறவினர்கள் ஆதரவால் உங்களின் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வாகனங் களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர ஸ்தானமான 7-ல் அமையப்பெற்றிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களுடைய நீண்டநாளைய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகளை எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி உண்டாகும். குரு லாப ஸ்தானமான 11-ல் அமையப்பெற்று 5, 7 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினை எல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைத்து மனநிம்மதி உண்டாகும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள்கூட தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்களால் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் திறன் வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு உல்லாச பயணங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சூரிய நமஸ்காரம் செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதுமூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, ருண, ரோக, ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல் பட்டு பிரச்சினைகளை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயம் தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, இரவு நேரப் பயணங் களைத் தள்ளிவைப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். மறைமுக போட்டி இருக்கும் என்பதால் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உடன்பிறந்தவர்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கலாம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், ருண, ரோக ஸ்தான மான 6-ல் சஞ்சரிப்பதும், குரு 9-ல் இருப்பதும் சிறப்பு என்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான செவ்வாய், சுக்கிரன் இணைந்து பஞ்சம ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று, குரு பார்வை பெறுவதால் அசையும்- அசையா சொத்துவகையில் அணுகூலங்கள் கிடைக்கும். தற்போது இருக்கும் இடத்தில் ஒரு கௌரவ நிலைய எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து அதிகப் படியான லாபங்களை ஈட்டமுடியும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். உங்கள்மீது உள்ள அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோர்- ஆசிரியரின் பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு புதியமுயற்சிகளை செய்தால் முழுமையான பலனை அடையமுடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் நற்பலனை அடையமுடியும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் தன, பாக்கிய அதிபதி சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு பகைமை உணர்வு மறந்து உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வேலையாட்கள் சிறப்பாக செயல்படுவதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வதால் நீங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்றுக் குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர் களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் படிப்பில் சிறப் பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். பெண்கள்வழியில் அனுகூலமான செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக உங்களுக்கு இருக்கும். துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை களில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மற்றவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை உண்டு. உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங் கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியத்திற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வம்பு, வழக்குகள் குறைவதால் நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை தவிர்த்துவிட்டு அன்றாட பணியில் செயல்பட்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எளிதில்முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை, நெருங்கியவர்களால் நிம்மதிக்குறைவு உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் உங்கள் முயற்சிகள் வெற்றிதந்து மனநிம்மதி உண்டாகும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்களுடைய உதவியானது தக்க நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி சஞ்சரிப்பதாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஒருசில இடையூறுகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எடுத்துவிடுவீர்கள். அரசு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படக்கூடிய சிறுசிறு பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் ஏற்படலாம். பங்காளியிடம் பேசுகின்றபொழுது சூழலுக்கு தகுந்தவாறு பக்குவமாக நடந்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள் பிற்பகல் மேல், செவ்வாய், புதன்கிழமைகளில் வீண் குழப்பங்கள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செய-லும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய அதிர்ஷ்டங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பது மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் வரும் நாட்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வரும் நாட்களில் விடிவுகாலம் பிறந்து ஒரு நல்ல நிலையினை அடைய உள்ளீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம், தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எண்ணியது நிறைவேறக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு உயர்வான நிலையினை அடைவீர்கள். ஒருசிலருக்கு நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்த உடல் சோர்வெல்லாம் விலகி தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்களை பெறுவீர்கள். வியாழன், வெள்ளி, சனி முற்பகல் காலங்களில் தேவையற்ற நெருக்கடிகள், வீண்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் நீங்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன்- நிதானத்தோடு செயல்படுவது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, பிரத்திங்கராதேவி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம்
பாதங்கள்) ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களது மனஅமைதியை குறைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரித்து வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாகத் தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்வார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது உத்தமம். பணவிஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பெரியவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உடல்நலத்தில் கவனம்செலுத்துவது மிகமிக நல்லது. குறிப்பாக தூரப் பயணங்களைத் தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சனிக்கிழமை அன்று முடிந்தவரை புதியமுயற்சிகளைத் தள்ளிவைப்பது நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும், மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதும் கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்படவேண்டும். உங்கள் ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள்வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன நெருக்கடியில் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலீடுகளை எடுக்கமுடியும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளித்து ஒரு வளமான பலன்களை அடைய முடியும். அதிகாரிகளிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். தற்போது தூரப் பயணங்களை தள்ளிவைப்பது நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வரும் நாட்களில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஒருசில அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. குருபகவானுக்கு நெய் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசி அதிபதி குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து சகல சௌபாக்கியங்களும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் இருக்கக்கூடிய இடத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவது மட்டுமில்லாமல் வயது மூத்தவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியுடைய ஆதரவை பெறமுடியும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறையும். உங்களது கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் மேலும் வளமான பலன்களை பெறமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறமுடியும். வரும் நாட்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்ககூடிய நாட்களாக இருக்கும். சனிபகவான் ஸ்தலத்தில் எள் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும்.