முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 1.
செவ்வாய்: உத்திரம்- 2.
புதன்: உத்திரம்- 1.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 2 (வ).
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
ஆவணி 7 (24-8-2023) புதன் (வ) ஆரம்பம் (அதிகாலை 1.08).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கன்னி
21-8-2023 மாலை 5.30 மணிக்கு துலாம்.
24-8-2023 அதிகாலை 2.54 மணிக்கு விருச்சிகம்.
26-8-2023 காலை 8.37 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் தற்போது உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளுடைய பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் ஏற்படக்கூடிய யோகம் இருக்கிறது. உங்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலை ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமையில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்று வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எந்தவித நெருக்கடிகள் இருந்தாலும் அதனை மன தைரியத்துடன் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு, ராகு சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பெண்கள்வழியில் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் தவறவிடாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் போட்ட முதலில் எடுக்கமுடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தற்காலிக மாக தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு மற்றவர்களுடைய வேலையை நீங்கள் இணைத்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிக்கக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனிக்கிழமையன்று வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது மூலம் உங்களுக்கு ஒரு வளமான பலன்கள் ஏற்படும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியனுடன் 3-ல் சஞ்சரிப்ப தால் உங்கள
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 1.
செவ்வாய்: உத்திரம்- 2.
புதன்: உத்திரம்- 1.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 2 (வ).
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
ஆவணி 7 (24-8-2023) புதன் (வ) ஆரம்பம் (அதிகாலை 1.08).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கன்னி
21-8-2023 மாலை 5.30 மணிக்கு துலாம்.
24-8-2023 அதிகாலை 2.54 மணிக்கு விருச்சிகம்.
26-8-2023 காலை 8.37 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் தற்போது உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளுடைய பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் ஏற்படக்கூடிய யோகம் இருக்கிறது. உங்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலை ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமையில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்று வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எந்தவித நெருக்கடிகள் இருந்தாலும் அதனை மன தைரியத்துடன் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு, ராகு சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பெண்கள்வழியில் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் தவறவிடாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் போட்ட முதலில் எடுக்கமுடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தற்காலிக மாக தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு மற்றவர்களுடைய வேலையை நீங்கள் இணைத்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிக்கக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனிக்கிழமையன்று வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது மூலம் உங்களுக்கு ஒரு வளமான பலன்கள் ஏற்படும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியனுடன் 3-ல் சஞ்சரிப்ப தால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வருகின்ற நாட்களில் நடக்கும். தனகாரகன் குரு- ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களுடைய நீண்டநாளைய எண்ணங்களைத் தற்போது செயல் படுத்தினால் அதற்கு முழுமையான வெற்றி கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய ஒரு அதிர்ஷ் டங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்யக் கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் மிகை ஆகாது. எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு உள்ள கடன்களை பைசல் செய்வீர்கள். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதுமூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறைந்து அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பரிபூரண வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலமாக நல்லவாய்ப்புகளை பெறமுடியும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு உள்ள கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது சற்று குறைந்து ஏற்ற மிகுந்த பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக அலைச்சல்கள் இருந்தாலும் உழைப்புக் கான பலனை பெறுவீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் முன்யோசனையுடன் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் வீண் சிக்கல்களை குறைக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையமுடியும். வரும் நாட்களில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு ஒவ்வொரு செயலிலும் பொறுமையோடு செயல்படுவது பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையோடு இருப்பது நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும், சமுதாயத் தில் ஒரு கௌரவமான நிலையும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை குறித்த நேரத்தில் பூர்த்திசெய்து அதிகப்படியான லாபங்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய திறனும் கடினமான பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய ஒரு அமைப்பும் உண்டாகும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து நீண்டநாட்களாக உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் எதிர்பாராத அணுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 12-ல் சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். உங்கள் ராசிக்கு 8-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு இருப்பது நல்லது. 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல ஒரு வாய்ப்புகள்கூட ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்கும் சின்னசின்ன வாய்ப்புகளைகூட தற்போதைக்கு தவிர்க்காமல் சரியான முறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளியில் நபர்களிடம் பேசினால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சொல்லிக்கொள் ளும்படி இருக்காது என்பதால் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுக்கு பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்களை பெற்று நிலைமையை சமாளிக்க முடியும். வரும் நாட்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் சிறப் பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். மற்றவர் களுக்கு தந்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துவழியில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது குறையும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய பொருளாதார அணுகூலங்கள் கிடைக்கும். கடந்தகாலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு முயற்சிக்கும் நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம்மாற்றங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள்மீது வைத்த தேவையற்ற புகார்கள் அனைத்தையும் எளிதில் சமாளித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நினைப்பதை சாதிக்கமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் ஆகிய நாட்களில் மிகச்சிறப்பான பலன்களை அடையும் வாய்ப்பும், நீங்கள் எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் உண்டு. மேலும் வளமான பலன்களை அடைய முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரத் தேங்காய் உடைக்கவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதனுடன் 10-ல் நிற்பதால் இருக்குமிடத்தில் உங்களுடைய பெயர், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பாக்கிய ஸ்தானத் தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பெண்கள்மூலமாக அனுகூலங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சர்ப கிரகமான ராகு 6-ல் இருப்பதால் தொழில், வியாபாரத் தில் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பான முடிவுகளை எடுத்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்டிகள் இருந்தாலும் அதனை சுலபமாக சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் படிப்படியாக வளர்ச்சியும் புதியவாய்ப்பு எதிர்பார்த்த வர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய யோகங்களும் வருகின்ற நாட்களில் இருக்கிறது. அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியை உங்களுக்குத் தரும். வாழ்வில் மேன்மை அடைய தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்ளவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய ஒரு இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெற்றோர் வழி உறவினர்கள்மூலமாக பொருளாதார அணுகூலங்களை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை அடையக்கூடிய அமைப்பும், புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை விரிவுப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்புகளும் ஏற்படும். ஒரு சிலருக்குத் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் எதிலும் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடிவருவது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். புதியவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற சிறப்பான ஒருநிலை அடையக்கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயல் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான ஆதாயங்களை அடையமுடியும். உங்கள் பிரச்சினைகள் குறைய மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் சிறப்பு. குரு, ராகு 4-ல் இருப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எவ்வளவு கடுமையான நெருக்கடி இருந்தாலும் எதிர் பாராத உதவிகள் உங்களுக்குக் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய சிக்கல்களை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல் படுவது, கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். குறிப்பாகத் தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி களில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார வரவுகள் ஏற்பட்டு அதன்மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு உள்ள சிக்கல்களை குறைத்துக் கொள்ளமுடியும். இந்த வாரத்தில் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையையும் மனோ தைரியத்துடன் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்ககூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் தக்க நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு சூழலுக்கு தக்கவாறு பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் ஒவ்வொரு விஷயத்திலும் சாமர்த்தியமாக முடிவெடுத்தால் அடையவேண்டிய லாபத்தை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய நேரமாகும். பொதுவாக தூரப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையில்லாத குழப்பங்கள் உண்டா கும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அனுகூலங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும்கூட கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய ஒரு உன்னதமான நிலை உண்டாகும். பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை சுலபமாக காப்பாற்றமுடியும். ஒருசிலருக்கு அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்த தேவையற்ற பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூல மான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணங்களை எளிதில் நிறைவேற்றி நல்ல லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஒருசிலருக்கு விரும்பிய இடம்மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களை பெறலாம். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள் மாலை, செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. பாம்பு புற்றுக்குப் பால்விடுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றங்களை அடையலாம். ப்