முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 1.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2 (வ).
புதன்: அனுஷம்- 2.
குரு: உத்திரட்டாதி- 1 (வ).
சுக்கிரன்: அனுஷம்- 3.
சனி: அவிட்டம்- 1.
ராகு: பரணி- 2.
கேது: சுவாதி- 4.
கிரக மாற்றம்:
கார்த்திகை 8 (24-11-2022) குரு வக்ரநிவர்த்தி (காலை 5.02).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
21-11-2022 பகல் 12.30 மணிக்கு துலாம்.
23-11-2022 மாலை 4.03 மணிக்கு விருச்சிகம்.
25-11-2022 மாலை 5.20 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன், புதன், சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதாலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்பதால் பேச்சில் கவனமாக இருக்கவும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும் காலமென்பதால் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நன்று. வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். கூட்டாளிகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். இருக்கும் வாய்ப்புகளைத் தக்கமுறையில் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் நஷ்டம் ஏற்படாமல், தற்போதிருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு. குறிப்பாக உடல் உபாதை காரணமாக பணி யில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். எதிலும் பொறுமையாக இருப்பது, முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். புதன் பிற்பகல், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சிவன் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதனுடன் 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகச் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, சுபகாரியங்கள் கை கூடும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. வக்ர கதியிலுள்ள குரு இவ்வாரம் வக்ரநிவர்த்தி யடைய இருப்பதால், உங்களுக்கிருந்த கடந்த கால நெருக்கடிகள் முழுமையாக மறைந்து ஆதாயங்களை அடைவீர்கள். செவ்வாய் ஜென்ம ராசியிலும், சூரியன் ஏழிலும் சஞ்சரிப்ப தால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களை அடையும் வாய்ப் புண்டு. சந்தை சூழ்நிலை சாதகமாக இருந்து உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் யோகமும், கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு தற்போது ஒரு நல்ல விடிவுகாலம் கிடைத்து நிம்மதி அடையக் கூடிய சூழலும் இந்த வாரத் தில் ஏற்படும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலமான பலன்களையடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வெள்ளி மாலை, சனிக்கிழமைகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முருக வழிபாடு, சூரிய நமஸ்காரம், அஷ்ட லட்சுமி வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர் கள். தைரியத்தோடு செயல்பட்டு எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலமுண்டா கும். உங்களுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நன்று. தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிக மாகத் தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் எதிலும் பக்குவமாக நடந்துகொள்வது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், அதற்கான ஊதியத்தை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். சக ஊழியர்கள் பிரச்சினைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்துவார்கள் என்பதால், எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன அமைதி ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத பொருளாதார அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், குருபகவான் வக்ர நிவர்த்தி யடைய இருப்பதும் அற்புத மான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவு மிகச் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கடந்தகால நெருக்கடிகள் இருந்த இடம்தெரியா மல் மறையும். மங்களகர மான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய் 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகமும், கடந்தகாலத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது அதற்கான ஆதாயத்தை அடையும் வாய்ப்பும் ஏற்படும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவி கள் கிடைக்கும். வேலையாட்கள் ஆதர வாக செயல்படுவதால் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபடமுடியும். பெரிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான யோகமுண்டா கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். சிலருக்கு நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகை வந்தடைந்து மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற் கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் முழுமையான வெற்றி கிடைக்கும். சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வதன்மூலம் சங்கடங்கள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் 4-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகமிக நன்றாக இருந்து, உங்களுக்கிருந்த நெருக்கடிகளெல்லாம் விலகி மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக் கும் முயற்சிகளுக்கு அனு கூலமான பலன்கள் ஏற்படுவதுடன் உங்களின் நீண்டநாள் கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறும். ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவுக்கு வளமான பலன்களைப் பெறுவீர்கள். செல்வம், செல்வாக்கு மேலோங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மகிழ்ச்சி, எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் யோகம் ஏற்படும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் அனைத்துவகையிலும் ஆதாயங்கள் கிடைக் கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்று.
கன்னி
(உத்திரம் 2, 3, 4லிஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், புதன் இணைந்து 3-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமென்பதால், கடந்தகால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். கடந்த நான்கு மாதங்களாக வக்ரகதியில் சஞ்சரித்த குரு தற்போது வக்ரநிவர்த்தியடைவதால் பணவரவு மிகச்சிறப்பாக இருந்து, அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சினைகளும் முழுமையாகக் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் தேவைகளெல்லாம் உடனுக்குடன் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், உங்கள் பொருட்களுக்கு நல்ல விலைகிடைக்கும் அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட் கள் தொழிலுக்குக் கிடைப்பதால் எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். குடும்பத்தில் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறும் யோகமுண்டு. புதிய வீடு, மனைபோன்ற சொத்துகள் வாங்கும் முயற்சியை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல் காரணமாக உடல் அசதி, நிம்மதிக் குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் கவனத்துடனும், நிதானத்துடனும் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வெளிப்பயணங்கள் மேற் கொள்ளும்பொழுது பொறுமையோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில இடைத்தரகர்களின் செயல்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். வேலை யாட்கள் பிரச்சினைகளையும், புதிய கோரிக்கை களையும் வைப்பார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். வெளிநபர்களிடம் தொழிலைப்பற்றி அதிகம் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஒருசிலருக்கு வாகனங் கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில், மற்ற கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் அனுகூலமாக இருப்பதால் எதிர்பாராத பொருளாதார ஆதாயத்தைப் பெற்று கஷ்டங்கள் குறையும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம், பணவரவு மிகமிக நன்றாக இருக்கக்கூடிய யோகம் இந்த வாரத்தில் உண்டு. 5-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ரநிவர்த்தியடைய இருப்பதால், உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள், தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் துடன் செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எண்ணியதை நிறைவேற்றக்கூடிய யோகம் ஏற்படும். உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து சிறப் பான லாபங்களை அடைவீர்கள். நவீன திட்டங்களைத் தீட்டி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது நட்புடன் பழகும் நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை, எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், எதில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சிவ வழிபாட்டை மேற்கொள்வது, செவ்வாய்க் கிழமை முருகனுக்கு விரதமிருப்பது, கந்த சஷ்டிக் கவசம் படிப்பது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 4-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் துடன் இருப்பது நல்லது. வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் சிக்கனத் தோடு இருப்பதும், பணப் பரிமாற்ற விஷயங்களில் யோசித்து செயல்படுவதும் உத்தமம். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. ராசிக்கு 12-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமலிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும். உங்களுடைய பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்காததால் மன அமைதி குறையும். அதிக முதலீடுகொண்ட செயல்களில் தற்போதைக்கு ஈடுபடாமலிருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில், மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அனு கூலங்கள் ஏற்பட்டு நெருக்கடிகள் சற்று குறையும். சனிக்கிழமை சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, எள் தீபமேற்றி வழிபடுவது, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைசாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும், 9, 10-க்கு அதிபதி யான புதன், சுக்கிரன் இணைந்து 11-ல் சிறப் பாக அமையப்பெற்று தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால், உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் விலகி பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் திருமண வயதையடைந்தவருக்கு மன மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 5-ல் செவ்வாய் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். சில நெருக்கடிகள் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்களை சற்று குறைத் துக்கொள்ளமுடியும். எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும், எதிர்பாராத பண வரவுகளும் ஏற்படும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இருக்குமிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குரு வக்ரநிவர்த்தியடைய இருப்பதால் பணவரவு மிக நன்றாக இருந்து குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். கடந்தகால சங்கடங்களெல்லாம் குறையும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான யோகமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், உங்கள் உழைப்புக்கான பலனையும் வரும் நாட்களில் அடையமுடியும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடியாத பணிகளைத் தற்போது முடித்து விட முடியும். போட்டி, பொறாமைகள் விலகுவதால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சாதகமான சூழ்நிலையும், அதிகாரிகள் ஆதரவும் வரும் நாட்களில் உண்டு. பயணங்கள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய யோகம் உண்டாகும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவு சிறப்பாக இருப்பதால் பொருளா தார நெருக்கடிகள் விலகி அனைத்துவிதமான பிரச்சினைகளும் குறையும். பிறருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை குறித்த நேரத்தில் கொடுக்கும் பலமேற்படும். ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகப்படியான லாபங்களை அடையும் வாய்ப்பேற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதியுண்டாகும். சட்டரீதியான சிக்கல்கள் விலகுவதால் தொழிலில் புதுத் தெம்புடன் செயல்பட முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குறிப்பாக சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். திங்கள் பிற்பகல், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.