முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாத சாரம்:
சூரியன்: சித்திரை- 3.
சந்திரன்: கிருத்திகை- 4.
செவ்வாய்: புனர்பூசம்- 3.
புதன்: சுவாதி- 3.
குரு: மிருகசீரிடம்- 2 (வ).
சுக்கிரன்: அனுஷம்- 2.
சனி: சதயம்- 4 (வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்:
20-10-2024 கடகச் செவ்வாய் பகல் 2.22 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
21-10-2024 மாலை 6.15 மணிக்கு மிதுனம்.
23-10-2024 இரவு 12.01 மணிக்கு கடகம்.
26-10-2024 காலை 9.45 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் இனி 4-ல் சஞ்சரிப்பதாலும், சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு பகவான் வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதுமூலம் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் எடுத்த பணியை முடிக்கமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்குச் சென்று வருவதன்மூலமாக பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுகப் பிரச்சினைகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். திறமை வாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ வாய்ப்புகள் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாத சாரம்:
சூரியன்: சித்திரை- 3.
சந்திரன்: கிருத்திகை- 4.
செவ்வாய்: புனர்பூசம்- 3.
புதன்: சுவாதி- 3.
குரு: மிருகசீரிடம்- 2 (வ).
சுக்கிரன்: அனுஷம்- 2.
சனி: சதயம்- 4 (வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்:
20-10-2024 கடகச் செவ்வாய் பகல் 2.22 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
21-10-2024 மாலை 6.15 மணிக்கு மிதுனம்.
23-10-2024 இரவு 12.01 மணிக்கு கடகம்.
26-10-2024 காலை 9.45 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் இனி 4-ல் சஞ்சரிப்பதாலும், சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு பகவான் வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதுமூலம் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் எடுத்த பணியை முடிக்கமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்குச் சென்று வருவதன்மூலமாக பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுகப் பிரச்சினைகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். திறமை வாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ வாய்ப்புகள் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பல்வேறு வளமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறைந்து ஏற்ற மிகுந்த பலன் களைப் பெறுவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதர உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்குச் சென்று வருவதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 26.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். இந்த வாரத்தில் 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து அதன்மூலம் உங்களுடைய தேவைகள் சற்று பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக ஒரு சில அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்குச் சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசி அதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் நிம்மதி, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைத்து நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடையக்கூடிய நேரமாகும். துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23, 26.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல நிலையினை அடைவீர்கள். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது, வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது தற்போதைக்கு உத்தமம். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது பலமும், வ-மையும் கூடும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். பணவரவுகள் மிகவும் நன்றாக இருந்து பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்கு நிலவிய தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் விலகும். ஒருசிலருக்கு அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகம் தற்போது உண்டு. உங்களுக்கிருந்து வந்த சட்டரீதியான பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகுவதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். ஒரு சிலருக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் நிதானத்தோடு செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த ராசியாதிபதி செவ்வாய் இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார நிலையானது சற்று சாதகமாக இருக்கும். உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதியங்கள் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். சிவன் ஸ்தலங்களுக்குச் சென்று வருவது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 26.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் மிகமிக சாதகமாக இருந்து மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தடைப்பட்டு வந்த மங்களகரமான சுபகாரியங்கள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது சற்று குறைத்துக்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சியினை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக் கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். பூர்வீக சொத்து வகையில் பொருளாதார ஆதாயத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகவும் நன்றாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியை அடைவீர்கள். புதிய யுத்திகளைப் பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அதில் நல்ல பலன் கிடைக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் அமையும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு கௌரவமான இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறக் கூடிய நேரமாகும். ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதுமூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் செவ்வாய், 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கித்தரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த தேக்கமான நிலைகள் விலகி ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் சிறப்பான முன்னேற்றமும் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் தொழில் அபிவிருத்தி சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள்வகையில் இருந்துவந்த மனகவலைகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கின்ற வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்களைப் பெறக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது சிறப்பாக செயல்படுவதால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் ராகு, 8-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பணவரவில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களது மன அமைதியானது குறையும். கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்துச் சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். சுக்கிரன் 9-ல் இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச்சொற்களைச் செல்லக்கூடிய நேரம் என்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய காலமாகும். மாணவ- மாணவியர் கள் தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 26.