முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவாதிரை- 3.

செவ்வாய்: மகம்- 1.

Advertisment

புதன்: திருவாதிரை- 4.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: ஆயில்யம்- 4.

dd

சனி: சதயம்- 2 (வ).

ராகு: அஸ்வினி- 2.

கேது: சித்திரை- 4.

கிரக மாற்றம்

ஆனி 22 (7-7-2023) சிம்ம சுக்கிரன் (அதிகாலை 4.04).

ஆனி 23 (8-7-2023) கடக புதன் (பகல் 12.14).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- விருச்சிகம்

2-7-2023 பகல் 1.18 மணிக்கு தனுசு.

4-7-2023 பகல் 1.43 மணிக்கு மகரம்.

6-7-2023 பகல் 1.38 மணிக்கு கும்பம்.

8-7-2023 பகல் 2.57 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் எளிதில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றமும், தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய ஒரு சூழலும் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை சற்று அனுசரித்துசெல்வது மிகமிக நல்லது. சனி வக்ரகதியில் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமை காப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் காலத்தில் தேவையற்ற குழப்பங்கள் இருக்கும் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். கடந்தகால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார்- உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு தக்கவாறு நடந்து கொள்வது நல்லது. குருபகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலமாக நெருக்கடியான நேரங்களில் அவர்களுடைய உதவியோடு ஒரு பெரிய பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறைவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயப்படியான ஊதியங்கள்கூட தாமதமாகும். ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் தற்போதைய நிலையை சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு பிற்பகல், திங்கள், செவ்வாய் முற்பகல் காலத்தில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல் உண்டாகும் என்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. உங்களுக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. சிவன் தளங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை குவிக்கக்கூடிய ஒரு உன்னதமான நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் குரு, ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்டநாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். தொழில் நிறுவனத்திற்காக நவீனகரமான கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களுடைய நற்பெயரை வாங்கக்கூடிய ஒரு உன்னதமான நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சிலருக்கு வெளியூர், மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பலனடையக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்குவது, அசையும்- அசையா சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும். செவ்வாய் பிற்பகல், புதன், வியாழன் முற்பகல் காலத்தில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தேவையற்ற நிகழ்வுகள் உங்கள் மன அமைதியை குறைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய காலமாகும். அஷ்டமச்சனி நடந்தாலும் தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் ஒரு சில அனுகூலங்களை அடையமுடியும். குருபகவான் சாதகமற்று இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும், வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக் கூடிய ஒரு நேரமென்பதால் அனுசரித்துசெல்வது நல்லது. தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது தற்போதைக்கு உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்க தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சரியாக பணிபுரிந்தாலும் மேல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய ஒரு காலமாகும். முடிந்தவரை அலைச்சலை குறைத்துக்கொள்வது நல்லது. வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மிக முக்கியமான பயணங்களை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். வியாழன் பிற்பகல், வெள்ளி, சனி முற்பகல் காலத்தில் தேவையற்ற நெருக்கடிகள், வீண் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது உத்தமம். முருகருக்கு அர்ச்சனை செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வருகின்ற நாட்களில் நடக்கும். பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையக்கூடிய ஒரு நிலையும், பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு பலமும் உண்டாகும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக நன்றாக இருக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் மறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அடைவது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகளும், விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது, எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைசெய்வது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சூரியனுடன் 10-ல் இருப்பதால் உங்களது பலமும், வலிமையும் கூடும். உற்றார்- உறவினர் கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் அனுகூலங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. பூர்வீகச் சொத்துவழியில் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது முடிவு கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகச்சிறப் பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மன நிம்மதி உண்டாகும். கடந்த சில காலங்களாக இருந்துவந்த நெருக்கடிகள் சற்று குறையும் என்றாலும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டு மன நிம்மதி உண்டாகும். நீங்கள் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறும். பாக்கியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல் வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் நீங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் முழுமையான வெற்றியினை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் உங்களுக்கு உள்ள சங்கடங்கள் எல்லாம் மறைந்து மன நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் 10-ல் அமைந்து குரு பார்வை பெறுவதால் நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், ராகு 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச்செலவுகளை குறைத்துக்கொள்வது சிறப்பு. மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்லபெயர் எடுக்கமுடியும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பும் உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான ஐந்தில் சிறப்பாக சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைவதுடன் உங்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். பொருளாதார அனுகூலங்கள் ஏற்படுவதால் உங்களுக்கு உள்ள கடன்களை பைசல் செய்யமுடியும். புதன் 7-ல் வலுவாக சஞ்சரிப்பதால் சில நேரங்களில் சாமர்த்தியமாக செயல்பட்டு ஆதாயங்களை பெறுவீர்கள். எடுத்த பணியினை குறித்த நேரத்தில் முடித்து, இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள், உறவினர் கள்மூலமாக நிம்மதி குறைவு ஏற்படலாம். குறிப்பாக பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி அடையக்கூடிய அமைப்பும், போட்ட முதலை எடுக்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்கள் உழைப்புக்காக நீங்கள் பெறவேண்டிய ஊதியங்களை வரும் நாட்களில் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுடைய நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்))

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் குரு, ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிகப்படியான அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய அமைப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வாகனங்கள் மூலமாகக்கூட சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் கடுமையான நெருக்கடி இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சி உண்டாகலாம். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை கேட்காமல் பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளை தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது தற்போதைக்கு உத்தமம். குறிப்பாக வெளியூர் பயணங்களைத் தற்காலிகமாக தள்ளி வைக்கவும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது உத்தமம். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடனிருப்பவர்கள் தரக்கூடிய இடையூறுகளால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினை என்றாலும் நீங்கள் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலத்தை பெறுவீர்கள். முடிந்தவரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலமாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் கவனத்தோடு இருப்பது, மேலதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன் மூலமாக அநாவசிய செலவுகளும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்கித் தருவது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். குருபகவான் 2-லும் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் வரும் நாட்களில் கைகூடும். மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடுவது மட்டுமில்லாமல் குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். அசையும்- அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த போட்டிகள் விலகும். வெளியூர்மூலமாக நல்லவாய்ப்புகள் கிடைக்கும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலமும் மற்றவர்களால் முடிக்கமுடியாத செயல்களைகூட நீங்கள் சிறப்பாக செயல்பட்டு முடிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். சக ஊழியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தற்போது முழுமையாக விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பெண்கள்வழியில் மிகவும் சாதகமான பலன்களை வரும் நாட்களில் பெறுவீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது கெடுதியைக் குறைக்கும்.