இந்த வார ராசிபலன் 2-4-2023 முதல் 8-4-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-2-4-2023-8-4-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரேவதி- 1.

செவ்வாய்: திருவாதிரை- 1.

புதன்: அஸ்வினி- 1.

குரு: ரேவதி- 3.

சுக்கிரன்: பரணி- 4.

சனி: சதயம்- 1.

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

பங்குனி 23 (6-4-2023)

ரிஷப சுக்கிரன் (பகல் 10.59).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

4-4-2023 மாலை 4.05 மணிக்கு கன்னி.

7-4-2023 அதிகாலை 1.10 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதியும் 3-ஆம் அதிபதியுமான புதன், செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடை வீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் யோகமுண்டு. கடன் பிரச்சினைகள் தீர்ந்து சுமூகநிலை உண்டாகும். உடல் ரீதியாக பாதிப்பை எதிர்கொண்டவர் களுக்கு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குரு, சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஏற்ற- இறக்கமான விஷயங்களில் பணத்தை கையாண்டால் வீண் இழப்புகளை எதிர்கொள்வீர்கள். ஒருசிலருக்கு குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி அதன் மூலம் சுபச்செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக் கப் போகிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் இழுபறி நிலையி-ருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும் வாய்ப்புண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினா லும் எதிர்பாராதவகையில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ராசிக்கு 6-ல் கேது, லாப ஸ்தானமான 11-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமிருக்காது. பெரியோர்களுடைய ஆசிர்வாதம் சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இருந்தாலும் வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எந்த செயலையும் நேரம் காலம் பார்த்துச் செய்வது மிகமிக நல்லது. சூழ்நிலைக் குத் தக்கவாறு நடந்துகொண்டால் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும் என்றாலும், உடன் வேலை செய்பவர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். மற்றவர்கள் செய லைப் பற்றிக் கவலைப் படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந் தால் வளமான பலன்களைப் பெறலாம். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு, முருகன் கோவிலுக் குச் சென்றுவருவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி ப

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரேவதி- 1.

செவ்வாய்: திருவாதிரை- 1.

புதன்: அஸ்வினி- 1.

குரு: ரேவதி- 3.

சுக்கிரன்: பரணி- 4.

சனி: சதயம்- 1.

ராகு: அஸ்வினி- 4.

கேது: சுவாதி- 2.

கிரக மாற்றம்:

பங்குனி 23 (6-4-2023)

ரிஷப சுக்கிரன் (பகல் 10.59).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- சிம்மம்.

4-4-2023 மாலை 4.05 மணிக்கு கன்னி.

7-4-2023 அதிகாலை 1.10 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதியும் 3-ஆம் அதிபதியுமான புதன், செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடை வீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஏற்றம் மிகுந்த பலன்களை அடையமுடியும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் யோகமுண்டு. கடன் பிரச்சினைகள் தீர்ந்து சுமூகநிலை உண்டாகும். உடல் ரீதியாக பாதிப்பை எதிர்கொண்டவர் களுக்கு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குரு, சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஏற்ற- இறக்கமான விஷயங்களில் பணத்தை கையாண்டால் வீண் இழப்புகளை எதிர்கொள்வீர்கள். ஒருசிலருக்கு குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி அதன் மூலம் சுபச்செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக் கப் போகிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் இழுபறி நிலையி-ருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும் வாய்ப்புண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினா லும் எதிர்பாராதவகையில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ராசிக்கு 6-ல் கேது, லாப ஸ்தானமான 11-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமிருக்காது. பெரியோர்களுடைய ஆசிர்வாதம் சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இருந்தாலும் வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எந்த செயலையும் நேரம் காலம் பார்த்துச் செய்வது மிகமிக நல்லது. சூழ்நிலைக் குத் தக்கவாறு நடந்துகொண்டால் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும் என்றாலும், உடன் வேலை செய்பவர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்து வார்கள். மற்றவர்கள் செய லைப் பற்றிக் கவலைப் படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந் தால் வளமான பலன்களைப் பெறலாம். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு, முருகன் கோவிலுக் குச் சென்றுவருவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். என்றாலும் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. 10-ல் குரு சஞ்சரிப்ப தால் நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாகச் செயல்பட்டாலும் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். சூரியன் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கமுடியும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்பு கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குத் தற்போது ஆரோக்கியத்தில் சற்று முன்னேற் றம் உண்டாகும். வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக சுபச் செலவுகளை எதிர் கொள்வீர்கள். உறவினரி டம் பேசுகின்றபொழுது நிதானத்தோடு பேசினால் நிலைமையை சமாளிக்க முடியும். தொழில், வியா பாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட் டால் மட்டுமே போட்டி களை சமாளித்து லாபங் களைப் பெறமுடியும். ஒருசிலரின் செயல் களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங் கள் தடைப்படும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். விநாயகர் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது, ஆலயங்களுக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தருவதன்மூலமாக நல்ல வாய்ப்புகளைப் பெறமுடியும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் மகிழ்ச் சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடக்கும். புதன் 10-லும், சுக்கிரன் 10, 11 ஆகிய ஸ்தானங் களிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். பெண்கள்வழியில் அனு கூலமான பலன்கள் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டு. உற்றார்- உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால மனக் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். ராசிக்கு 8-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிநபர் களிடம் அதிகம் பேசாம-ருந் தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். தொழில், வியா பாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்ப தால் அதிக முதலீடுகளை செய்து நல்ல லாபத்தை ஈட்ட முடியும். சிலர் சில இடையூறு களை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் ஏற்றங்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை யும் சக ஊழியர்கள் ஆதர வாக இருக்கக்கூடிய அமைப்பும் உண்டு. உங்கள் திறமைகளை எளிதில் வெளிக்காட்டமுடியும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் நீங்கள் ஏதாவது ஒரு புதுச் செய-ல் ஈடுபட்டால் அதில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.

weekrasi

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப் பெற்று 8-ல் இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்பு கள்கூட தேவையற்ற வகையில் தடைப்படும். 9-ஆம் வீட்டில் புதன், 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்ப தாலும், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப் பதாலும் உங்களுக்கு நெருக்கடி இருந்தா லும், தக்க சமயத்தில் எதிர்பாராத உதவி கள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத் தில் கிடைக்கும் வாய்ப்பு களைத் தக்கமுறையில் பயன் படுத்திக் கொள்வது நல்லது. வேலையாட்களை முடிந்த வரை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். பொதுவாக தொழில் விஷயங்களை வெளியிடங்களில் பேசுவதைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப் பீர்கள். அதிகாரியிடம் வாக்கு வாதங்கள் செய்யாமல், எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், நீங்கள் எதிர்பார்க்காத வகையில் திடீர் உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் மறையும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலையானது மிகமிக நன்றாக இருக்கும். ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். கடந்தகால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெற முடியும். நண்பர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது, உறவினர்களிடம் பேசுகின்றபொழுது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிகப் படியான லாபங்களை அடையும் யோகமுண்டு. நவீனகரமான பொருட்களை தொழிலுக்காக வாங்குவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசுவழியில் நீங்கள் எதிர் பார்த்த உத்தரவுகளை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதில் செய்துமுடிக்கமுடியும். படித்துமுடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்தி-ருந்து அழைப்பு வரும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பாதியில் தடைப்பட்ட காரியங் களை மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங் கள் அமையும். எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். மகாவிஷ்ணு வழிபாடு, துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் கேது, 6-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காவிட்டாலும் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். ராசிக்கு 7-ல் ராகு, 7, 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. எதிர்பாராதவகையில் ஏற்படும் செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் காரணமாக உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். சிலநேரங்களில் வேலையாட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக செயல் பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை மிகவும் சரியாகப் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காலநேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்தால்தான் தற்போது இருக்கக்கூடிய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் உங்கள் பணியில் கவனத்தோடு இருந்தால், விரைவில் ஏற்படக்கூடிய குருப் பெயர்ச்சியின்மூலம் கௌரவமான நிலையினை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு நெருக்கடிகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்ப தாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டு மல்லாமல் மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்ற முடியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ராசிக்கு 4-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு நல்ல நிலையினை அடையும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் தொழிலை விரிவு படுத்தமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்கள் பணியையும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருந் தாலும், அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியிடங் களுக்குச் செல்லக்கூடிய நிலையும், அதன் காரணமாக மன நிம்மதிக் குறைவும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது, முடிந்த வரை வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு அனுகூலமான பலன்களைப் பெறும் யோகமுண்டு. முருக வழிபாடு, சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் என் தீபமேற்றுவது நன்று.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 3-ல் சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் தக்க நேரத்தில் பூர்த்தியாகி நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது படிப்படியாகக் குறையும். ராசியாதிபதி குரு, சூரியனுடன் 4-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். உடனிருப்பவர்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். போட்டிகள் இருந்தாலும் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங் கள் உறுதியாகக் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தா லும் அனைத்தையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். தற்போது எதிலும் பொறுமை யோடு இருந்தால் விரைவில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு மறுமலர்ச் சியை உண்டாக்கும். நீங்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்டநாள் எண்ணங்கள் எதிர்பாராதவகை யில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு, துர்க்கைக்கு தீபமேற்றுவது சிறப்பு.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் உங்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய இடையூறுகள் தற்போது விலகி ஆதாயமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 4-ல் புதன், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து பிறருக்குத் தரவேண்டிய கடன்களைத் தக்கநேரத்தில் பைசல் செய்வது டன் உங்கள் தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். உற்றார்- உறவினர்களிட மிருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் குறையும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடா மல் இருப்பது நல்லது. பெண்கள் வழியில் ஆதாயங்களைப் பெறமுடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி ஏற்படும். ராசிக்கு 3-ல் குரு இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத் தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு இருந்தால்தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனக் கவலைகள் குறையும். உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் வெளிநபர்களிடம் அனாவசியமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஆஞ்சனேயர் வழிபாடு, பெருமாள் தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெற்றாலும், குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் மிகமிகத் திருப்திகரமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண் மருத்துவச் செலவு களைக் குறைக்கமுடியும். 3-ல் ராகு இருப்ப தால் எந்தவித பிரச்சினையையும் எளிதில் எதிர்கொள்ளக்கூடிய தைரியம் உங்களிடம் இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் செயல் பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். அதிலும் குறிப்பாக அனைத்து விஷயங் களிலும் வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்படுவது நல்லது. சில நேரங்களில் உடனிருப்பவர்களே வீண் சிக்கலை ஏற்படுத்துவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் இருக்குமென்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களிடம் உண்டு. அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்து வது உத்தமம். பூர்வீகச் சொத்து வகையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் பங்காளியிடம் அதிகம் பேசாம-ருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய நாட்களாக இருக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவதும் உத்தமம். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருவால் பொருளாதார நெருக்கடிகள் இருக்குமென்றாலும் பொறுமையோடு செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வதும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பதும் மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள், வேலையாட்களால் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் ஒவ்வொரு செய-லும் பொறுமையோடு செயல்படுவது, வெளிநபர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விரைவில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சிமூலம் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து அனுகூலமான பலன்களை அடையும் யோகமுண்டு. வேலைக்குச் செல்பவர்கள் பிறர் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உழைப்புக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். முருக வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு உத்தமம்.

bala070423
இதையும் படியுங்கள்
Subscribe