முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 2.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1.

Advertisment

புதன்: உத்திரம்- 2 (வ).

குரு: உத்திரட்டாதி- 2 (வ).

சுக்கிரன்: உத்திரம்- 4.

சனி: அவிட்டம்- 1 (வ).

ராகு: பரணி- 3.

கேது: விசாகம்- 1.

tt

கிரக மாற்றம்:

புரட்டாசி 15 (2-10-2022) புதன் வக்ர நிவர்த்தி (பகல் 2.38).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

4-10-2022 காலை 6.01 மணிக்கு மகரம்.

6-10-2022 காலை 8.27 மணிக்கு கும்பம்.

8-10-2022 பகல் 11.23 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பலம் ஏற்படும். குழப்பங்கள் படிப்படியாக விலகி நிம்மதி உண்டாகும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பெண்கள்வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், எந்த செயலையும் கவனத்தோடு செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட சிறப் பான லாபங்கள் கிடைக்கும். சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி முன்னேற்றமடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகுவதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, பிறர் ஆச்சரியப்படுமளவுக்கு காரியத்தை கச்சிதமாக முடிப்பீர்கள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எண்ணிய காரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சி ஏற்படும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச் சனைசெய்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். சுக்கிரன், புதன் 5-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறி குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். நெருங்கிய உறவினர் களின் ஆதரவால் பிரச்சினைகள் குறையும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமை யோடு செயல்பட்டால் குழப்பங்களைத் தவிர்க்கமுடியும். வெளியூர்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போதைக்குப் பயன் படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு செயல்படவும். தொழிலில் இயந்திரங்கள் பழுதாவதால் செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் கடினமான பணிகளைக்கூட எளிதில் முடிக்கமுடியும். எடுத்த பணியை முடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் உதவி சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். வாகனங் களில் நிதானத்தோடு செல்வது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்கள் அனைத்தும் எளிதில் வெற்றிபெற்று நிம்மதி உண்டாகும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது நன்று.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராகு பகவான் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் பலமுண்டாகும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இதுநாள்வரை வக்ரகதியில் சஞ்சரித்த ராசியாதிபதி புதன் வக்ரநிவர்த்தி அடைவதால் தேவையற்ற தடங்கல்கள் விலகும். எந்த பணியில் ஈடுபட்டாலும் திட்டமிட்டு செயல்பட்டு அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத் தில் நல்ல வாய்ப்புகள் கிடைத் தாலும், வேலையாட்களின் சில செயல்களால் மன அமைதி குறையும். எது எப்படி யிருந்தாலும் எடுத்த ஆர்டர் களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யுமளவுக்கு உங்களின் பலம் அதிகரிக் கும். அரசு அதிகாரியிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர் களுக்கு மற்றவர்கள் வேலையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். வெளி நபர்களிடம் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றியினைத் தரும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல சௌபாக் கியங்களையும் அடையும் யோகமுண்டு. எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்கள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகளால் அனைத்துவிதமான நெருக்கடிகளும் குறையும். கடந்தகாலங்களில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைக்கு தற்போது முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புண்டு. பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலைகிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சி அடையுமளவுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும். ஒருசில எதிர்பாராத பொருளாதார அனுகூலங்களால் கடன்கள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறன்களை வெளிக்காட்ட சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். கடந்தகாலங்களில் செய்த பணிகளுக்கான சன்மானங்கள் தற்போது கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்பு, அதன்மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகியவை மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகத்திருப்தியாக இருந்து நிம்மதி உண்டாகும். ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் நிம்மதி நிலவும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும் நிலை உண்டாகும். ராசிக்கு 10-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் வேலையாட்கள்மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தற்போது அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான வேலையைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் நிம்மதியுடன் பணி புரியமுடியும். அதிகாரியிடம் பேசும்பொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. பூமி, மனை வாங்க நினைப்ப வர்கள் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் ஒரு அனுகூலமான செய்தியானது கிடைக்கும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நீங்கள் செய்யும் செயல்களுக்கு முழுமையான அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமை மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நாளாகும். அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை, பைரவர் வழிபாடு கெடுதியைக் குறைக்கும்.

tt

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை, தேவையற்ற நெருக்கடி கள் ஏற்படும். மிகவும் நம்பியவர்களே கடைசி நேரத்தில் பிரச்சினைகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்பதால், பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருக்கவும். ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க இடைஞ்சல்கள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது, குறிப்பாக உங்கள் பொருட்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக் காது. அதனால் முக்கிய முடி வெடுப்பதென்றால் சிறிது நாட்களுக்கு பொறுமை காப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பிறர் சொல்லும் வார்த்தை களைக் கேட்டு குழப்பிக் கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இரவுப் பயணங் களைத் தள்ளிவைப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் திடீர் பணவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் குறையும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குருபகவான் ராசிக்கு 6-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக ஒருசில அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. எனினும் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப் படும். உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்கவும். உணவு விஷயத்தில் எச்சரிக் கையாக செயல்படுவது நல்லது. வெளிநபர் களிடம் குடும்ப விஷயங்களைப் பேசாமல் இருக்கவும். குறிப்பாக வயது மூத்தவர்களிட மும், பங்காளியிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்பு களையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது, வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குறிப்பாக அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது உத்தமம். ஒருசிலரின் செயல் களால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நன்று. சூழலுக்கேற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படவும். தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக வரும் நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடி நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் தீரும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலமுண்டாகும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய யுக்தி களைப் பயன்படுத்தி நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். அரசுவழி அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கான ஊதியத்தை அடையும் வாய்ப்புண்டு. கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் தற்போது தக்க வெகுமதி கிடைக்கும். நீண்டநாள் பொருளாதாரப் பிரச்சினைகளை வரும் நாட்களில் தீர்க்கமுடியும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேங்கடாசலபதி வழிபாடு, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி நெய்தீபம் ஏற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்தகால பிரச்சினைகள் பகலவனைக்கண்ட பனிபோல படிப்படியாகக் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருந்து கடன்களை பைசல் செய்யமுடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்ளவும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வை அடையும் வாய்ப்புண்டு. நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது உத்தமம். பூர்வீக சொத்துவழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் உறவினர் களிடம் பேச்சில் பொறுமை காப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்களை செயல்படுத்தினால் எளிதில் அனுகூல பலன்களை அடையமுடியும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் 9, 10-க்கு அதிபதியான புதனும் சுக்கிரனும் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். பொருளாதார ஆதாயங்களை அடையும் வாய்ப்புண்டு. நெருங்கியவர்களின் உதவியால் கஷ்டங்கள் குறையும். ஜென்ம ராசியில் சனி, 4-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஓய்வுநேரம் குறையும். அசையா சொத்துவகையில் செலவுகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். அரசுவழி அதிகாரிகள்மூலமாக எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் தற்போது பார்க்கும் வேலையே நல்லதென்பதால், மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் இருக்கவும். விரைவில் நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல மாற்றங்கள் ஏற்படும். வரும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது, சனிபகவானுக்கு இரும்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது, மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். நெருங்கியவர்களே உங்கள் நிம்மதியைக் குறைப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். வேலையாட்கள்மூலம் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் விஷயங்களை வெளிநபர் களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. சட்டரீதியாக ஏற்படும் சிறுசிறு சிக்கல்கள் மன அமைதியைக் குறைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை உண்டாகும். முடிந்தவரை அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது, தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து பொருளாதாரரீதியான நெருக்கடிகள் சற்று குறையும். முருக வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும். முடிந்தால் ஒருமுறை உங்கள் குலதெய்வத் தலத்திற்குச் சென்றுவருவது உத்தமம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களின் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். நவீன கரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் மிகச் சிறப்பான அனுகூலங்களைப் பெறும் வாய்ப்பு உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான லாபங்களை வரும் நாட்களில் அடைவீர்கள். அரசுவழியில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முக்கிய விஷயங்களை மற்றவரிடம் பேசாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து வழியில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் தீர்ந்து பொருளாதாரங்களைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது கெடுதியைக் குறைக்கும்.