இந்த வார ராசிபலன் 19-5-2024 முதல் 25-5-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-19-5-2024-25-5-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3.

செவ்வாய்: ரேவதி- 1.

புதன்: அஸ்வினி- 4.

குரு: கிருத்திகை- 3.

சுக்கிரன்: கிருத்திகை- 1.

சனி: பூரட்டாதி- 2.

ராகு: ரேவதி- 1.

கேது: அஸ்தம்- 3.

கிரக மாற்றம்:

வைகாசி 6 (19-5-2024) ரிஷப சுக்கிரன்

(காலை 8.43).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கன்னி

20-5-2024 மாலை 4.34 மணிக்கு துலாம்.

23-5-2024 அதிகாலை 2.55 மணிக்கு விருச்சிகம்.

25-5-2024 காலை 10.36 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். பணவரவுகள் சாதகமாக இருந்து சகலவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான விலை கிடைக்கும். சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது குறைத்துக் கொள்ளமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக நன்றாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு விஷயத்திலும் உற்சாகத்தோடு ஈடுபட்டு வெற்றிபெறமுடியும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாழன், வெள்ளி, சனி காலை நேரங்களில் தேவையற்ற மனகுழப்பம், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன் மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.

44

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய பலம் உண்டாகும். இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சுக்கிரன் இனி ஜென்ம ராசியில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக தாராளமாக இருந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோனியம் மிகமிக நன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது சற்றுக்குறைந்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய உதவியை நம்பாமல் எதிலும் நேரடியாக நீங்கள் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்த்துவிட்டு தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. சனிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், பணவிரயங்கள், நிம்மதி குறைவு ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிரு

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 3.

செவ்வாய்: ரேவதி- 1.

புதன்: அஸ்வினி- 4.

குரு: கிருத்திகை- 3.

சுக்கிரன்: கிருத்திகை- 1.

சனி: பூரட்டாதி- 2.

ராகு: ரேவதி- 1.

கேது: அஸ்தம்- 3.

கிரக மாற்றம்:

வைகாசி 6 (19-5-2024) ரிஷப சுக்கிரன்

(காலை 8.43).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கன்னி

20-5-2024 மாலை 4.34 மணிக்கு துலாம்.

23-5-2024 அதிகாலை 2.55 மணிக்கு விருச்சிகம்.

25-5-2024 காலை 10.36 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். பணவரவுகள் சாதகமாக இருந்து சகலவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான விலை கிடைக்கும். சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது குறைத்துக் கொள்ளமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய நிலை ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக நன்றாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு விஷயத்திலும் உற்சாகத்தோடு ஈடுபட்டு வெற்றிபெறமுடியும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாழன், வெள்ளி, சனி காலை நேரங்களில் தேவையற்ற மனகுழப்பம், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன் மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.

44

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய பலம் உண்டாகும். இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சுக்கிரன் இனி ஜென்ம ராசியில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக தாராளமாக இருந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோனியம் மிகமிக நன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது சற்றுக்குறைந்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய உதவியை நம்பாமல் எதிலும் நேரடியாக நீங்கள் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்த்துவிட்டு தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்பும் உள்ளது. சனிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், பணவிரயங்கள், நிம்மதி குறைவு ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வதாலும் செவ்வாய், ராகு 10-ல் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களை தேடிவரும். இருக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சூரியன், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள்மூலமாக அனுகூல மான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் சற்று பொறுமையோடு செயல்படுவது மிகவும் நல்லது. உடன்பிறந்தவர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறப்பு. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவார்கள். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகளை வாங்குவது, வெளியூர் பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு, சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்ககூடிய ஒரு இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்தகாலத்தில் உங்களுக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 10-ல் புதன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை எட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைப்பதால் எடுத்த காரியங்களைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். தொழில் அபிவிருத்திக் காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருக்காது என்பதால் சில நேரங்களில் உங்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதியவாய்ப்பு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்களுக்கு நல்லபெயர் எடுக்கக்கூடிய அளவிற்கு சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசி அதிபதி சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களுடைய அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் ரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவளர்ச்சி அடையமுடியும் என்றாலும் கூட்டாளிகள் உங்கள் அமைதியைக் குறைப்பார்கள். குறிப்பாக உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள், உடன்பிறந்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில்ரீதியாக சற்று எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நல்ல பலன்களை அடையமுடியும். ஒருசிலருக்கு எடுத்த காரியத்தை முடிக்க தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன்மூலமாக வீண்செலவுகளும் உண்டாகும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உடன் வேலை செய்பவருடைய வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட பயனுள்ள விஷயத்திலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட கூடிய விஷயங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது நற்பலனைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சுக்கிரன் இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அமைப்புகள், நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் இருக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். தொழில்ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக நன்றாக இருக்கும். அரசாங்க வழியில் இருந்துவந்த கெடுபிடிகள் எல்லாம் தற்போது குறைவதால் நிம்மதியுடன் உங்கள் செயல்களை செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். செவ்வாய், ராகு 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியி டையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும், 7-ல் புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு, சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப் போகும். எதிர்பாராதவகையில் வீண்செலவுகள் ஏற்பட்டு தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். அதன்காரணமாக குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் வீண்நட்பை குறைத்துக்கொண்டு பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செலவுசெய்வது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் நீங்கள் ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். வரும் நாட்களில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக தாராளமாக இருந்து குடும்பத்தில் சுபிட்சம் நிறைந் திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைக்கூடி மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுடைய உதவியானது சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், ராகு 5-ல் இருப்பதால் உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதாலும் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நீங்கள் வாங்கிய ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணிப்புரியக்கூடிய சூழல் ஏற்பட்டாலும் மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மாணவ- மாணவியர்கள் வரும் நாட்களில் உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. காலபைரவர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கைக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் ருண, ரோக ஸ்தானமான, 6-ஆம் வீட்டில் குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகி வளமான பலன்களை அடையமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை குறித்த நேரத்தில் பூர்த்திசெய்து நல்லபெயர் எடுப்பீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிலும் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். செவ்வாய், ராகு 4-ல் இருப்பதால் வண்டி, வாகனங் கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதுமூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறையும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல வளர்ச்சியினை அடையமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கும். உங்க ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு. உற்றார்- உறவினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி சுமூகமானநிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன கவலைகள் விலகி எதிர்பார்க்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைமையை புரிந்துகொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் உடனடியாக அதற்கான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களுடைய உழைப்பு சற்று அதிகப்படியாக இருக்கும். ஆனால் அதற்கான அனுகூலங்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் மற்றவர்களை திருப்தி படுத்தமுடியாது. உடன்வேலை செய்பவர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துவகையில் தேவையில்லாத வீண்செலவுகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் அலைச்சல், டென்ஷன், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஒருசில விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வெளியில் இருந்து வருவதில் தாமதம் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களது மன அமைதியைக் குறைப் பார்கள். உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது வெளிநபரிடம் குடும்ப விஷயத்தைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விலை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு நடந்து கொண்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கலாம். சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியானமுறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் பெரியோர்கள் சொல்படி நடப்பது உத்தமம். இந்த வாரத்தில் திங்கள் மாலை, செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஞாயிறு மற்றும் சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. காலபைரவரை வழிபாடு செய்வது, பிரித்தியங்கராதேவி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

bala240524
இதையும் படியுங்கள்
Subscribe