முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரட்டாதி- 1.
செவ்வாய்: மிருகசீரிடம்- 3.
புதன்: உத்திரட்டாதி- 1.
குரு: ரேவதி- 2.
சுக்கிரன்: அஸ்வினி- 3.
சனி: சதயம்- 1.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
19-3-2023 பகல் 11.17 மணிக்கு கும்பம்.
21-3-2023 பகல் 11.57 மணிக்கு மீனம்.
23-3-2023 பகல் 2.08 மணிக்கு மேஷம்.
25-3-2023 இரவு 7.25 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய யோகமும், எதில் ஈடுபட்டாலும் அதில் ஒரு ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும் இந்த வாரத்தில் உண்டு. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். சுக்கிரன் ஜென்ம ராசியில் இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பெண்கள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மாதக்கோளான சூரியன், குருவுடன் 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் முக்கிய விஷயங்களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபங்களை அடைவீர்கள். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றக் கூடிய அளவிற்கு பணவரவுகள் நன்றாக இருக் கும். பெரிய மனிதர்களின் உதவி யால் உங்களுக்கு இருக்கக் கூடிய சட்டச் சிக்கல்கள் யாவும் விலகும். வேலைக்கு செல்பவர் களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக் கும். முன் கோபத்தை சற்று குறைத்துக் கொள் வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்க ளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் தொட்ட காரியம் அனைத் தும் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வு கள் நடக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட் களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். பூர்வீகச் சொத்துவழியில் இருந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கடந்த வாரங்களில் இருந்துவந்த குழப்பங்கள் எல்லாம் மறைந்து எதிலும் தெள்ளத் தெளிவாக செயல்படக்கூடிய மனோநிலை ஏற்படும். பிறருக் குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டு மல்லாமல் அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவு களைப் பெறமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பணியில் சிறப்பாக செயல் படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக் கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். சுக்கிரன், ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணப்பரிமாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்படுவதும், மற்றவர்களுக்கு வாக்குறுதி தராமல் உங்கள் கையிருப்பைக் கொண்டு செயல்படுவதும் நல்லது. ஆடம்பரத்தைத் தற்போது குறைத்துக்கொண்டு செயல்பட் டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 5-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு தேவையற்ற அலைச் சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயங்கள் கிடைக் கும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் கண்ணும் கருத்துமாக செயல் படுவதும், கூட்டாளிகளை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பதும் நன்மையைத் தரும். நீங்கள் போட்ட முதலை எடுக்க எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். தொழில் முன்னேற்றத்திற்கு வெளி இடங்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், உடனிருப்பவர்களே தேவை யற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச் சுமை இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச் சிக்கு உறுதுணையாக, நெருங்கியவர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கக் கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற் கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்குச் சென்று செவ்வாய்க்கிழமையன்று அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
மாதக் கோளான சூரியன், குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே அன் யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் எளிதில் கைகூடும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றி நல்ல பெயர் எடுக்கமுடியும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்ப தால் குடும்பத்திற்குத் தேவையான நவீனகர மான பொருட்களை வரும் நாட்களில் வாங்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சனியும், 12-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. முடிந்தவரை தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப் பது உத்தமம். உடன்பிறந்த வரிடம் வீண் மனஸ்தாபங் கள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நீங்கள் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவி களைப் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை எளிதில் அடையமுடியும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பிரத்தியங்கராதேவி வழிபாடு மேற்கொள்வது ஏற்றத்தைத் தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சனியும், அஷ்டம ஸ்தானமான 8-ல் ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்குத் தேவையற்ற நெருக்கடிகளைத் தருவார்கள். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் மிகமிக சிக்கனமாக இருக்க வேண்டிய காலமாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் தனித் திறமையால் தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சினைகளை சமாளித்து நல்ல நிலையை அடைவீர்கள். வேலையாட் கள் ஒத்துழைப்பு தற்போது கிடைக்காது என்பதால் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உடல் அசதி, ஓய்வில்லாத நிலை ஏற்படும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங் களும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர் பாராத உதவிகள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதாரநிலை மிகமிக சிறப்பாக இருந்து மகிழ்ச்சியான நிலை ஏற்படும். நீண்டநாட்களாக உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் வளர்ச்சி யைக் கண்டு ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் செல்வம், செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப் பது மட்டுமல்லாமல் தொழில் அபிவிருத் திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போது மேற் கொண்டால் அதில் ஒரு ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களின் சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். படித்து முடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் உண்டாகி அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள் வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
மாதக் கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் தனக்கு நட்பு வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து வளமான பலன் களைப் பெறுவீர்கள். சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் ஆதாயங்களை அடையும் வாய்ப் புண்டு. கணவன்- மனைவியிடையே தற்போது நிலவக்கூடிய கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. கடந்த காலங்களில் உங்களுக்கு நிலவிய அலைச்சல், டென்ஷன் ஆகியவை சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். வெளியூர்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் மறைமுகப் போட்டிகள் சற்று அதிகப்படி யாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் குறிப்பாக முக்கிய முடிவுகளில் கவனமாக இருந்தால் ஆதாயங்களைப்பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனு கூலங்களை அடையமுடியும். நிலுவையில் இருந்த பணவரவுகள் கைக்கு வந்துசேரும். உங்களின் நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, அஷ்ட லட்சுமிக்கு நெய்தீபமேற்றுவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, புதன் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளும் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறமுடியும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றத்திற் காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. ராகு 6-ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளை எளிதில் எதிர்கொள்வீர் கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். புதிய வேலையை எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்புவரும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சிறப் பாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலை பேசிவழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சனி பகவானுக்கு சனிக் கிழமையன்று எள் தீபம் ஏற்றுவது, வேங்கடே சப் பெருமாளை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு, சூரியனுடன் 4-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துக் செல்வது உத்தமம். குறிப்பாக உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நன்று. சனி உங்கள் ராசிக்கு 3-லும், சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்ப இருந்து எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஒருபுறம் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் எந்த செயலி லும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலங் களை அடைவீர்கள். நீண்டநாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக் கும். தொழில்ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக் கக்கூடிய யோகமும், தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்கள்கூட தற்போது உங்களிடம் சுமூகமாகப் பழகுவார் கள். வேலைக்குச் செல்பவர்கள் நீங்கள் எடுத்த பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தால் தான் அனுகூலங்களை அடையமுடியும். வேலைப்பளு சற்று அதிகமாகவே இருக்கும் என்றாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்துவிடுவீர் கள். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் சந்திரன் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரக்கூடிய உங்களுக்கு தற்போது 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலமும், சிறப்பான பணவரவும் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலங்களை அடைவீர் கள். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது பைசல் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். நெருங்கியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். மனைவி, பிள்ளைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியும். கொடுத்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை சாமர்த்தியமாக சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சட்ட ரீதியாக இருந்த சிக்கல்கள் தற்போது சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டத் துக்கு எல்லாம் தற்போது அனுகூலங்களைப் பெறுவீர்கள். வாகனங்கள்மூலம் சுபச் செலவுகள் ஏற்படும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிபகவானுக்கு அர்ச்சனைசெய்வது, துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்களை அடைவது மட்டுமல்லாமல் உங்களின் தனித்திறமையால் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல நிலையினை அடைவீர்கள். சுபகாரியங்கள் எளிதில் கை கூடும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைவதற் கான யோகமுண்டு. ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடப்பதால் உடல் சோர்வு, சுறுசுறுப்பு இல்லாத நிலை இருக்கும் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்மை தரும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு தொழிலில் லாபமும் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் புதிய ஆர்டர்களை எடுத்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்தகால கஷ்டங்கள் விலகி நல்ல வாய்ப்பு கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆஞ்சனே யர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக் குச் சென்றுவருவது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சூரியன், குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச் சல், எடுக்கும் காரியங்களில் தடை, தாமதங் கள் ஏற்படக்கூடிய நிலை உண்டாகும். பொருளாதாரரீதியாக ஏற்படும் நெருக்கடிகள் உங்கள் மன அமைதியைக் குறைக்கும். ஏழரைச்சனி நடப்பதாலும், ராகு 2-ல் இருப்பதாலும் எதிலும் பொறுமையோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது உத்தமம். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத் தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலை எடுப்பதற் கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் கடினமாகப் பணிபுரிந்தாலும் சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை மிகவும் கவனத்தோடு கையாள்வது நல்லது. வேலையாட்கள் புதுப்புது கோரிக்கைகளை வைப்பார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் கெடுபிடிகள் சற்று அதிகப்படியாக இருக்கு மென்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, பாம்புப் புற்றுக்குப் பால் விடுவது கெடுதியைக் குறைக்கும்.