முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 4.
செவ்வாய்: விசாகம்- 4.
புதன்: கேட்டை- 1.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: அஸ்தம்- 3.
சனி: அவிட்டம்- 4.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
20-11-2023 காலை 10.07 மணிக்கு கும்பம்.
22-11-2023 பகல் 12.57 மணிக்கு மீனம்.
24-11-2023 மாலை 4.00 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து சென்றால் நிலைமையை சமாளிக்கமுடியும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது சட்ட விதிக்குட்பட்டு நடப்பது நல்லது. தொழிலில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வேலையாட் களால் உங்கள் மனஅமைதி குறையும். சில இடைத் தரகர் களால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்கூட தட்டி போகலாம். எந்த செயலிலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையலாம். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டு மில்லாமல் மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்படும். நேரம், காலம் பார்க்காமல் தற்போது உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்லது நடக்கும். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள், உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சிவ ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். ஆண்டுக்கோளான குருபகவான் 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் சிறுசிறு வாய்ப்பையும் தவறவிடாமல் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களால் சிறிது நெருக்கடி ஏற்படலாம் என்பதால் சில நேரங்களில் நீங்களே நேரடியாக பணிபுரிய வேண்டியநிலை இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப் பதில் இடையூறு உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் தவறு செய்வீர்களா என உடனிருப்பவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரமென்பதால் செய்யும் வேலைகளில் சற்று கவனத் துடன் செயல்பட்டால் இருப்பதை காப்பாற்றிக்கொள்ளமுடியும். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந்தவித நெருக்கடியும் சமாளித்து உங்களுடைய அன்றாட தேவைகளை எளிதில் பூர்த்திச்செய்து கொள்ளமுடியும். சூரிய நமஸ்காரம் செய்வது, முருகனை பிரார்த்திப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வம், செல்வாக்கு மேலோங்கக்கூடிய நேரமாக இருக்கும். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாகப் பேசி பல்வேறு விஷயங்களில் காரியத்தை எளிதில் சாதித்து விடுவீர்கள். பாக்கிய
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 4.
செவ்வாய்: விசாகம்- 4.
புதன்: கேட்டை- 1.
குரு: பரணி- 1 (வ).
சுக்கிரன்: அஸ்தம்- 3.
சனி: அவிட்டம்- 4.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
20-11-2023 காலை 10.07 மணிக்கு கும்பம்.
22-11-2023 பகல் 12.57 மணிக்கு மீனம்.
24-11-2023 மாலை 4.00 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து சென்றால் நிலைமையை சமாளிக்கமுடியும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது சட்ட விதிக்குட்பட்டு நடப்பது நல்லது. தொழிலில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வேலையாட் களால் உங்கள் மனஅமைதி குறையும். சில இடைத் தரகர் களால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்கூட தட்டி போகலாம். எந்த செயலிலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையலாம். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டு மில்லாமல் மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்படும். நேரம், காலம் பார்க்காமல் தற்போது உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்லது நடக்கும். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாரத்தில் வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள், உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சிவ ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். ஆண்டுக்கோளான குருபகவான் 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சனி 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் சிறுசிறு வாய்ப்பையும் தவறவிடாமல் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களால் சிறிது நெருக்கடி ஏற்படலாம் என்பதால் சில நேரங்களில் நீங்களே நேரடியாக பணிபுரிய வேண்டியநிலை இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப் பதில் இடையூறு உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் தவறு செய்வீர்களா என உடனிருப்பவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரமென்பதால் செய்யும் வேலைகளில் சற்று கவனத் துடன் செயல்பட்டால் இருப்பதை காப்பாற்றிக்கொள்ளமுடியும். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எந்தவித நெருக்கடியும் சமாளித்து உங்களுடைய அன்றாட தேவைகளை எளிதில் பூர்த்திச்செய்து கொள்ளமுடியும். சூரிய நமஸ்காரம் செய்வது, முருகனை பிரார்த்திப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வம், செல்வாக்கு மேலோங்கக்கூடிய நேரமாக இருக்கும். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாகப் பேசி பல்வேறு விஷயங்களில் காரியத்தை எளிதில் சாதித்து விடுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமில்லாமல் சுபிட்சமான நிலை இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்திச்செய்வது மட்டுமில்லாமல் அசையா சொத்து களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். வெளியூர் பயணங்கள்மூலம் ஒரு சுப செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய செயல்களுக்கு அரசுவழியில் எதிர்பார்த்த ஆதரவையும், அரசு உத்தரவு களையும் வரும் வாரத்தில் பெற முடியும். திறமைவாய்ந்த வேலை யாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் தொழிலில் அபிவிருத்தி செய்யமுடியும். உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்கள்கூட உங்கள் குணத்தை சரியாக புரிந்துகொண்டு தற்போது சுமூகமாக பழகுவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். மற்றவர்களால் ஏற்பட்ட மனஉளைச்சல் நீங்கி நீங்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து அனைத்துவிதமான கடன்களும் குறையும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் கிடைக்கப்பெற்று நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஞாயிறு, திங்கள் முற்பகல் நேரங்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதம் ஆகும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள் வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குரு 10-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக கடந்தகால நெருக்கடிகள் விலகி அனுகூலமான பலனை பெறமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பதாலும் 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது அஜீரன கோளாறு ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக் குத் தக்கவாறு சற்று பொறுமையோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் தேவை யற்ற இடையூறுகளை ஏற்படுத்து வார்கள் என்பதால் எந்த செயலிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறர் சொல்வதைக்கேட்டு இருப்பதை இழந்துவிட வேண்டாம். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது உத்தமம். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன் முற்பகல் நேரங்களில் தேவையற்ற அலைச்சல், நிம்மதிக்குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. சனிபகவான் ஸ்தலங்களுக்கு சென்று எள் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்ப தால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை தைரியத் தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளா தாரரீதியாக ஒரு நெருக்கடியான காலம் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வதும் நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நன்றாக இருப்பதாலும் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்ளமுடியும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத் தில் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படுவதும், வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதும் நல்லது. சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் தொழில்ரீதியாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய புதிய வாய்ப்புகள்கூட தடைப்படும். வெளிநபர்களிடம் தொழில் விஷயங் களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லா மல் உடல் அசதி காரணமாக பணியில் கவனம் செலுத்தமுடியாது. சனி 7-ல், ராகு 8-ல் சஞ்சரிப்ப தால் உடல்நலத்தில் கவனம் செலுத்து வது, தூரப் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மிகச்சிறப்பான பலன்களை அடையும் வாய்ப்பும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. புதன் பிற்பகல், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மனக் குழப்பம், நிம்மதி இல்லாத நிலை ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களில் நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஜென்ம ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடித்து தர முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களால் சில இடர் பாடுகள் ஏற்பட்டாலும் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது, உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம். வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றி கிடைப்பது மட்டு மில்லாமல் குடும்பத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்வு கள் நடக்கும். வெள்ளி பிற்பகல், சனிக்கிழமை ஆகிய நாட்களில் தேவையற்ற நிம்மதிக் குறைவு ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் இந்த வாரத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபமேற்று வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் நேரம் என்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும், வண்டி, வாகனங்கள் செல்கின்ற பொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். குரு 7-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடிகள் நிலவும். அன்றாட செலவுகளை கையாள்வதற்கு போராட வேண்டியிருக்கும். சிக்கனமாக இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத் தோடு செயல்படுவது நல்லது. 12-ல் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் சில ஆதாயம் ஏற்பட்டு ஏற்றங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் கடினமான பணியைக்கூட சிறப்பாக கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகளும், எதிர்பாராத வகையில் பொருளாதார உதவிகளும் உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். முருகனைப் பிரார்த்திப்பது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் செலுத்தி மனதார வழிபடுவது உத்தமம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன்- கேது சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். ஜென்ம ராசியில் புதன், 6-ல் உள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து சமுதாயத்தில் கௌரவ நிலையினை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில் விருத்திக்காக நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் காலநேரம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதன்மூலம் எடுத்த ஆர்டர்களை சிறப்பாக செய்து முடிக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானம் தற்போது கிடைத்து உங்கள் கடன்களை பைசல் செய்வீர்கள். சிலருக்கு தேவையற்ற பயணங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்க கூடிய நாட்களாக இருக்கும். ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைசெய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்ப தால் கடந்தகால கஷ்டங்களை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிக்கும் பலம் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 3-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அசையாச் சொத்துவகையில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். வெளிநபர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் எளிதில் அடையமுடியும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர் களுக்கு அனுகூலமான இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் முயற்சி ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் கடந்தகால சோதனைகள் எல்லாம் மளமளவென குறைந்து மனநிம்மதி ஏற்படும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றி இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் தேவையற்ற அலைச்சல், அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எந்த செயலிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். பிள்ளைகள்வழியில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி வரும் நாட்களில் அரங்கேறும். உடல்ரீதியாக சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அவை உடனே சரியாகிவிடும். கடந்தகால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகம் உண்டு. புதிய முயற்சியில் ஈடுபட்டு அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்தமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு, மரியாதைகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். மற்றவர்களால் செய்யமுடியாத செயல்களைகூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடிப்பீர்கள். வரும் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மிக முக்கியமான பணிகளை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் நல்ல ஆதாயங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக குரு 3-ல் சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றாலும் தற்போது குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டு. ராகு 2-ல் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பாதிக்கும். சில பிரச்சினைகள் குடும்பத்தில் நிலவினாலும் உங்கள் தனித்திறமையால் இருக்கும் இடத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வேலையாட் கள் உறுதுணையாக செயல்படுவதால் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டாளிகளின் ஆதரவான செயல்பாடுகள் மூலம் எந்தவித நெருக்கடியையும் எளிதில் கையாண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். சுக்கிரன், கேது 8-ல் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கான வேலை கிடைப்பது மட்டுமில்லாமல் இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். பேச்சில் நிதானத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையமுடியும். வரும் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடந்து அதன் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உக்ர தெய்வங்களை தரிசிப்பது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சூரியன், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் யோகம், உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு உண்டாகும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசியில் ராகு, 12-ல் சனி சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் வளமான பலன்களை பெறலாம். தொழில், வியாபாரரீதியாக நீங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை அடையமுடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களைப் புரிந்துகொண்டு நட்பாக பழகுவார்கள். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளைத் தற்போது நிறைவேற்ற முடியும். வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகள் பாராட்டப்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடையும் வாய்ப்பு உண்டு. உங்கள்மீதிருந்த பழிச்சொற்களெல்லாம் விலகி நிம்மதியுடன் செயல்படமுடியும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அமையும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைச் செய்வது, நெய் தீபமேற்றுவது, முருகனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.