முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 2.
செவ்வாய்: ரோகிணி- 4.
புதன்: அஸ்தம்- 1 (வ).
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: பூரம்- 3.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
புரட்டாசி 7 (24-9-2022) கன்னி சுக்கிரன் (பகல் 9.03).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
20-9-2022 பகல் 2.23 மணிக்கு கடகம்.
23-9-2022 அதிகாலை 2.03 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக வரும் நாட்கள் இருக்கும். 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலையை அடைந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். கடந்தகால நெருக்கடிகள் தற்போது குறைந்து நிம்மதி ஏற்படும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் ஆதாயங்கள் கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருப்ப தால் எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் பிரச்சினைகள் விலகி போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிட முடியும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்தும் செயல்களைத் தற்போது மேற் கொண்டால் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகரீதியாக அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கப்பெற்று பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து அனுகூலங்களை அடையமுடியும். ராசியாதிபதி சுக்கிரன் 4-லும், சூரியன், புதன் 5-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொண்டு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் அனுகூலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவானது சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைக் கெல்லாம் தற்போது நல்ல விடிவுகாலம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவுண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். வரும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு, சனிக்கு எள்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ரா
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 2.
செவ்வாய்: ரோகிணி- 4.
புதன்: அஸ்தம்- 1 (வ).
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: பூரம்- 3.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
புரட்டாசி 7 (24-9-2022) கன்னி சுக்கிரன் (பகல் 9.03).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
20-9-2022 பகல் 2.23 மணிக்கு கடகம்.
23-9-2022 அதிகாலை 2.03 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக வரும் நாட்கள் இருக்கும். 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலையை அடைந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். கடந்தகால நெருக்கடிகள் தற்போது குறைந்து நிம்மதி ஏற்படும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் ஆதாயங்கள் கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருப்ப தால் எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் பிரச்சினைகள் விலகி போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிட முடியும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்தும் செயல்களைத் தற்போது மேற் கொண்டால் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகரீதியாக அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கப்பெற்று பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து அனுகூலங்களை அடையமுடியும். ராசியாதிபதி சுக்கிரன் 4-லும், சூரியன், புதன் 5-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொண்டு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் அனுகூலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவானது சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைக் கெல்லாம் தற்போது நல்ல விடிவுகாலம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவுண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு விரும்பிய இட மாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். வரும் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு, சனிக்கு எள்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்று.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் ஆட்சி, உச்சம்பெற்று 4-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலர் வாகனங்கள்மூலமாக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற பயணங் களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். ஒருசில செயல்களில் நீங்கள் முன்நின்று செயல் படுவதன்மூலமாக நல்ல லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் வகையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படலாம். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்க ளைப் பெறுவீர்கள். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்துச்செல்வது, குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது, சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள்தீபம் ஏற்றுவது கெடுதியைக் குறைக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்ப தால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சி கள் அரங்கேறும் யோகமுண்டு. ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். பணவரவுகள் சாதகமாக இருந்து, அனைத்துவிதமான தேவைகளையும் எளிதில் பூர்த்திசெய்ய முடியும். கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால், தொழில் முன்னேற்றத்திற் காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிதரும். கடந்தகால சட்ட சிக்கல்கள் எல்லாம் முழுமையாக பைசலாகி தொழிலில் நிம்மதி யுடன் பணிபுரியமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் முடித்து விடுவீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதன்மூலம் ஆதாயங்களும் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் எடுக்கும் முயற்சியில் மிகவும் அனுகூல மான பலன்களை அடையலாம். சனிபகவானுக்குப் பரிகாரமாக ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, ஏழைகளுக்கு முடிந்த பொருளுதவி செய்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1லிஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2லில் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடையமுடியும். ராசிக்கு 10லில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 8-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை தேவைக்கேற்றவாறு இருந்து எதையும் எதிர்கொள்ளமுடியும். சூரியன் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவிக்கிடையே ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென் பதால் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் பிரச்சினை கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத் தில் நல்ல லாபம் கிடைத்து கடந்தகால நெருக்கடிகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் எடுத்த வேலைகளை சிறப் பாக செய்துமுடிக்கலாம். தொழில்ரீதியான பயணங் களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்ப விஷயங் களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட்களாக வேலை யில்லாமல் இருப்பவர்கள் தற்போது முயற்சித்தால் கௌரவமான பதவிகளை அடையமுடியும். வெளியூர், வெளிநாடுகள்மூலம் மகிழ்ச்சிதரும் செய்தியொன்று இவ்வாரத்தில் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எண்ணிய காரியங்களை செயல்படுத்தினால் பரிபூரண வெற்றி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்ப தால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். பொதுவாக அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தள்ளிவைக்கவும். பிறருக்கு முன்ஜாமின் தருவது போன்றவற்றில் தற்போது கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் சில இடைத்தரகர்களின் செயல் களால் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பாமல், முக்கிய முடிவு கள் மேற்கொள்ளும்பொழுது நீங்கள் நேரடி யாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரண மாக ஓய்வுநேரம் குறையும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாது. பூர்வீக சொத்து வகையில் தேவையற்ற பிரச்சினைகள், உறவினர் களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால், மற்றவரிடம் பேசும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்ப தாலும், குருபகவான் 6-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதாலும் பொருளாதார நிலையானது சாதகமாக இருந்து உங்களின் அனைத்துதேவைகளும் பூர்த்தியாகும். கடந்தகால பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு விலகி அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடு ஏற்படும் நேரமாகும். உங்கள் சக்திக்கு மீறிய எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு நன்றாக இல்லாத காரணத்தினால் உங்களுக்கு அலச்சல்கள் ஏற்படும். என்றாலும் அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருக்கவும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையுமென்றாலும் கிடைக்கவேண்டிய சன்மானங்கள் குறித்த நேரத்தில் கிடைக்கும். சக ஊழியர்களிடம் வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும். சூரிய நமஸ்காரம், அஷ்ட லட்சுமி வழிபாடு கெடுதியைக் குறைக்கும். ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி செய்வதும் நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் ஜென்ம ராசியைப் பார்ப்பதால் சகலவிதத்திலும் ஏற்றங் களைப் பெறுவீர்கள். சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன வரவுகள் அதிகப்படியாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுக்கிரன் 10-ல் இருப்பதால் குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அனுகூலங்கள் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுக்கும் வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த கால சட்ட சிக்கல்கள் விலகி நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உங்களின் நீண்டநாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்து மளவுக்கு உங்கள் பொருளாதாரநிலை உயரும். வேலையாட்கள் வைத்த கோரிக்கை களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர் கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமல்லா மல் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைய முடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நற்பலனைத் தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும் காலமாக வருகின்ற நாட்கள் இருக்கும். ராசியாதிபதி குரு வக்ரகதியில் இருப்பதாலும், சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். வம்பு, வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சனி 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கௌரவமான நிலை ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் சில நேரங்களில் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித் திறமை யால் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிதரும். வாரத்தொடக்க நாளான ஞாயிறு, திங்கள் ஆகியவை உங்களுக்கு சாதகமான நாட்களாக இருக்கும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, துர்க்கைக்கு குங்கும அபிஷேகம் செய்வது நன்று.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 4-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, பண விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும் நேரமாகும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், தற்போது குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாத காலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது பாக்கிய ஸ்தானமான 9-ல் புதனுடன் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த சிறுசிறு நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களைக் கையாளும்பொழுது ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல் படுவது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் நிலைமையை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மன நிம்மதி குறையும். பணியில் நீங்கள் சரியாக செயல்பட உங்களது ஆரோக்கியமே இடையூறாக இருக்கும். முடிந்தவரை மற்றவர்களிடம் பேச்சைக் குறைத்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமான ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். அசையா சொத்துவகையில் வீண் செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடனிருப்பவர்களே உங்களின் அமைதி யைக் குறைப்பார்கள். சக்திக்கு மீறி செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாமல் போகும். பயணங்கள் மேற்கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட சிலரது செயல்களால் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். வேலையாட்கள் தரும் தொந்தரவுகளால் தொழில், வியாபாரத்தில் நிம்மதி குறையும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தற்போதைக்கு அலட்சியப்படுத்தாமல் கவனமாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்கள் வேலையையும் நீங்கள் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டிய நிலை உண்டாகும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக மற்றவரிடம் அதிகம் பேசாமல் தற்போதைக்குப் பொறுமை காப்பது உத்தமம். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை எதிர்பாராத அனுகூலத்தை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாவிஷ்ணுவை வழிபடுவது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி இருந்தாலும் கிடைக்கவேண்டிய நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்லதாகப் பேசினாலும் உடனிருப்பவர் கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம், தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடையும் யோகம் உண்டாகும். ஒருசில நெருக்கடிகள் இருந்தாலும், உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வேலைக்குச் செல்பவர் களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், கடந்தகாலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்குத் தற்போது சன்மானம் கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலம் உண்டாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உயர்வான இடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சூரிய நமஸ்காரம், விநாயகர் வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது நல்லது.