முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: மகம்- 1.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1.

Advertisment

புதன்: மகம்- 1 (வ)

ss

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: பூரம்- 3.

சனி: பூரட்டாதி- 2 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆவணி 6 (22-8-2024) கடக புதன் (வ) காலை 6.37 மணிக்கு

ஆவணி 9 (25-8-2024) கன்னி சுக்கிரன் அதிகாலை 1.16 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மகரம்

19-8-2024 மாலை 6.59 மணிக்கு கும்பம்.

21-8-2024 இரவு 7.11 மணிக்கு மீனம்.

23-8-2024 இரவு 7.55 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், சுக்கிரன், 2-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து மன நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட் களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களின் தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர்கள் அதிகாரியாக வருவதால் எதிலும் மன நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை பெறுவீர்கள்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21, 24.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு செயலிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்னசின்ன வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே ஒரு நல்ல நிலையினையும் போட்ட முதலையும் எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது வளமான பலன்களைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.

aa

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கக்கூடிய சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண் செலவுகளும் ஏற்படலாம். எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பது என்றாலும் சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் திறம் பட செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். சூழலுக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகப்படியான லாபங்களை ஈட்டுவது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற் காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப் பார்கள். ஒருசிலருக்கு கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியாக மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிடுவதன்மூலமாக சிறப்பாக செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பலருக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 24.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது மிகமிக நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுக்கிரன் ஜென்ம ராசியில் இருப்பதால் பெண்கள்வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு செல்வது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்வது நல்லது. எந்த ஒரு முக்கிய விஷயங்களிலும் நீங்கள் மற்றவர்களை நம்பாமல் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால்தான் பிரச்சினைகளை சமாளித்து போட்ட முதலை எடுக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமை காப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் தேவையில்லாத அவப்பெயர்கள் வரும். மாணவ- மாணவியர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் மிக திருப்திகரமாக இருக்கும் என்றாலும் தேவையில்லாத அலைச்சல், வீண்செலவுகள் காரணமாக மன நிம்மதி குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத் துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் ஒருசில சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு, பூர்வீகச் சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும் என்றா லும் அலைச்சல் காரணமாக மனநிம்மதி குறைவு இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படக்கூடிய நேரம் என்றாலும் மற்றவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்றபோது கவனத்தோடு இருப்பது, படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, பாம்பு புற்றுக்கு பால் விடுவதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொதுவாக முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது தற்போதைக்கு சிறப்பு. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் நிமித்தமாக இருந்து வந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது உங்களுக்கு ஆதரவாக முடிவதால் மனநிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறனை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறையும். இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது சன்மானத்தை அடையமுடியும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய யோகமும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் மேற்படிப்புக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனுகூல பலனை தந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் வழியில் ஆதாயம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 24.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். செவ்வாய் 6-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படமுடியும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தனவரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலைவிட அதிகபடியான லாபத்தை எடுக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்டநாளைய பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்லமுடிவு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த வீண் மருத்துவச்செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைந்து ஒரு சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் படிப்புரீதியாக மேற்கொள்ளக்கூடிய பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும் நேரமாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக தேவையற்ற அலைச்சல்களை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. தொழில் தொடர்பான விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மாணவ- மாணவியர்கள் உடனிருக்கக்கூடிய நண்பர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 22, 23.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ஆம் வீட்டில் செவ்வாய், குரு, 7-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிக்கனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது. குறிப்பாக உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஏற்படக்கூடிய சின்னசின்ன பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ளமுடியும். பல்வேறு நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்க்கொள்ளக்கூடிய பலம் இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் எதிர்பாராத உதவிகளை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள்பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் அனா வசிய விஷயங்களை தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். ஒரு பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 22, 23.