முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 3.
செவ்வாய்: ஆயில்யம்- 2.
புதன்: ரோகிணி- 3.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: ஆயில்யம்- 1.
சனி: சதயம்- 2(வ).
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்
ஆனி 9 (24-6-2023)
மிதுன புதன் (பகல் 12.43).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்
20-6-2023 மாலை 3.58 மணிக்கு கடகம்
23-6-2023 அதிகாலை 4.18 மணிக்கு சிம்மம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணிகளை சிறப் பாக செய்து முடிப்பீர்கள். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளைத் தந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எளிதில் கையாளுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் செயல்களுக்கு நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 12-ல் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்றா லும் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் சற்று குறைந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைப்பதற்கான ஒரு சாத்தியக் கூறுகள் உண்டு. ஒவ்வொரு காரியத்திலும் கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சினை களை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சக ஊழியருடைய பணி யையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடி யான நிலையானது தற்போது நிலவும். வெளிநபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நிலை, எதிர்பாராத தனச் சேர்க்கையால் உங்கள் கஷ்டங்கள் குறைய கூடிய யோகம் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக சிறப் பாக இருந்து மன
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 3.
செவ்வாய்: ஆயில்யம்- 2.
புதன்: ரோகிணி- 3.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: ஆயில்யம்- 1.
சனி: சதயம்- 2(வ).
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்
ஆனி 9 (24-6-2023)
மிதுன புதன் (பகல் 12.43).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்
20-6-2023 மாலை 3.58 மணிக்கு கடகம்
23-6-2023 அதிகாலை 4.18 மணிக்கு சிம்மம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணிகளை சிறப் பாக செய்து முடிப்பீர்கள். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளைத் தந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எளிதில் கையாளுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் செயல்களுக்கு நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 12-ல் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்றா லும் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் சற்று குறைந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைப்பதற்கான ஒரு சாத்தியக் கூறுகள் உண்டு. ஒவ்வொரு காரியத்திலும் கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சினை களை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சக ஊழியருடைய பணி யையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடி யான நிலையானது தற்போது நிலவும். வெளிநபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நிலை, எதிர்பாராத தனச் சேர்க்கையால் உங்கள் கஷ்டங்கள் குறைய கூடிய யோகம் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக சிறப் பாக இருந்து மன மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. நண்பர்கள்மூலமாக ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நவீனகரமான கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் தொழில் போட்டிகளை எளிதில் சமாளித்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு பணியில் திறம் பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கமுடியும். பணி நிமித்தமாக பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து உங்களது மன கவலைகள் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் தலை யிடாமல் உங்களுடைய விஷயங்களில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது தற்போதைக்கு நல்லது. ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு வளமான பலன்களை தரக்கூடிய நாட்களாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால்தான் வீண் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் அன்றாட செயல்களில் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடியான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக வரவுக்கு மீறிய வீண் செலவுகளை எதிர் கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களே உங்களது அமைதியை குறைப் பார்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பிறர் செய்யக்கூடிய தவறுகளுக்கு பொறுப்பு ஏற்கவேண்டிய ஒரு சூழ்நிலை உண்டாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். எது எப்படி இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து எடுத்த பணிகளை சிறப்பாக முடித்துவிடுவீர்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் வரும் நாட்களில் நடக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் 9-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள், மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பதால் கடந்தகால பிரச்சினைகள் விலகுவது மட்டுமில்லாமல் அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். புதன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் எளிதில் பெறமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி களுக்கு தற்போது ஆதரவு கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய அமைப்பு, ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக் கூடிய யோகங்கள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவு காலம் கிடைத்து மனநிம்மதியுடன் அனைத்து செயலிலும் ஈடுபடமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சகல சௌபாக்கியங்களும் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சூரியன் 10-ல் சஞ்சரிப் பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் இருக்கும் இடத்தில் அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி தாராள தன சேர்க்கை உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நவீன பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக சாதகமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ற நல்லவாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். படித்து முடித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். கணவன்- மனைவி யிடையே கடந்த காலங்களில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் மிக திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நீங்கள் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் பலம் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் உங்களுக்கு நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் தற்போது விலகி மனநிம்மதி உண்டாகும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கிருந்த சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளை சற்று அனுசரித்துச்சென்றால் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். நீண்டநாள் பிரச்சினைகள்கூட சுமூகமாக முடிவதற்கான அறிகுறிகள் தென்படும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருக்கவும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உங்களுக்கு இருந்தாலும் தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய மறைமுக எதிர்ப்பு களால் நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகலாம். ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். நீங்கள் எவ்வளவுதான் சரியாக பணிபுரிந்தாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சிந்தித்துப் பேசவும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களுக்கு சந்திராஷ்டம் இருப்பதால் எதிலும் சற்று கவனம்தேவை. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் நிலை, சமுதாயத்தில் ஒரு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் ஓரளவுக்கு விலகுவதால் மன நிம்மதி உண்டாகும். தற்போது 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வும். குறிப்பாக நெருங்கியவர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு பேசுவது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தள்ளிவைப்பது மிகவும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய யோகமும் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது தற்போதைக்கு உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்களுக்கு பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். செவ்வாய் பிற்பகல், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் குழப்பங்கள் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய நெருக்கடிகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். தற்போது ராசியாதிபதி சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த கடந்தகால தேக்கங்கள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் அடைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தற்போது கிடைப்பதால் மன நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். உடன்வேலை செய்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைவீர்கள். வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்பட்டு நிம்மதி குறையும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர்கள். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பண பரிமாற்ற விஷயங் களில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. புதன் 4-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கடினமான பணிகளைகூட சிறப்பாக கையாண்டு லாபகரமான பலன்களை அடைவீர்கள். போட்டிகள் நிலவினாலும் அனைத்தையும் சமாளித்து போட்ட முதலை எடுப்பீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. தூரப் பயணங்கள்மூலமாக அனுகூல மான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பணியில் சிறப் பாக செயல்படமுடியும். சகஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதி உண்டாகும். ஒருசிலருக்கு விரும்பிய மாற்றங் கள் உண்டாகி மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். ராகு 2-லும், சூரியன் 4-லும் சஞ்சரிப் பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, சில நேரங்களில் உணர்ச்சிவசப் படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவை யற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, புதிய திட்டங்களை போட்டு தொழிலை அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்தின் மூலமாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் செய்யமுடியாத பணிகளைகூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழும். எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும்.