இந்த வார ராசிபலன் 18-2-2024 முதல் 24-2-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-18-2-2024-24-2-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 4.

செவ்வாய்: உத்திராடம்- 4.

புதன்: அவிட்டம்- 1.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: உத்திராடம்- 4.

சனி: சதயம்- 3.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

ss

கிரக மாற்றம்:

மாசி 8 (20-2-2024) கும்ப புதன் (காலை 6.01).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- ரிஷபம்.

18-2-2024 இரவு 9.54 மணிக்கு மிதுனம்.

21-2-2024 காலை 7.44 மணிக்கு கடகம்.

23-2-2024 இரவு 7.25 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சுக காரகன் சுக்கிரனுடன் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர் பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதக்கோள் என வர்ணிக் கப்படக்கூடிய சூரியன் லாப ஸ்தானத் தில் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புபை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆகிய கிழமைகள் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டு. பெண்கள்மூலம் அனுகூலங்கள் அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சர்பகிரகமான ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல நட்புகள் கிடைத்து அதன்மூலம் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத இந்த சிக்கல்களை தீர்க்கமுடியும். குருபகவான் 12-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் நிலைமையை சமாளித்து போட்ட முதலீடுகளை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங் களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் முடிந்தவரை வீண் பேச்சை குறைத்துவிட்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டும். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்க ளால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மையைத் தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குருபகவான் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளா தாரநிலை

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 4.

செவ்வாய்: உத்திராடம்- 4.

புதன்: அவிட்டம்- 1.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: உத்திராடம்- 4.

சனி: சதயம்- 3.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

ss

கிரக மாற்றம்:

மாசி 8 (20-2-2024) கும்ப புதன் (காலை 6.01).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- ரிஷபம்.

18-2-2024 இரவு 9.54 மணிக்கு மிதுனம்.

21-2-2024 காலை 7.44 மணிக்கு கடகம்.

23-2-2024 இரவு 7.25 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சுக காரகன் சுக்கிரனுடன் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர் பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதக்கோள் என வர்ணிக் கப்படக்கூடிய சூரியன் லாப ஸ்தானத் தில் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புபை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆகிய கிழமைகள் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டு. பெண்கள்மூலம் அனுகூலங்கள் அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சர்பகிரகமான ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல நட்புகள் கிடைத்து அதன்மூலம் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத இந்த சிக்கல்களை தீர்க்கமுடியும். குருபகவான் 12-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் நிலைமையை சமாளித்து போட்ட முதலீடுகளை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங் களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் முடிந்தவரை வீண் பேச்சை குறைத்துவிட்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டும். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்க ளால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மையைத் தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குருபகவான் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளா தாரநிலை மிகமிக சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்ப தால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அமைப்பு, வெளியூர் தொடர்புகள்மூலமாக அணுகூலங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் ஒருசிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் வளமானப் பலன்களை வரும் நாட்களில் பெறமுடியும்.

wee

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டும். சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்ப தால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் உடனடியாக அதற்கான மருத்துவச் சிகிச்சை களை மேற்கொள்வது நல்லது. வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும் என்பதால் பேச்சை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஏற்றத்தை அடையமுடியும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் கையாள வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் சொல்வார்கள் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கவனமாக செயல்படவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், நெருக்கடியான நேரத்தில் தக்க உதவிகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் நற்பலன் கிடைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்வை செய்வதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது மிகமிக நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகமானது வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்கு பெற்று நல்லபெயர் எடுக்கமுடியும். உயர் கல்விக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். காலபைரவரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மையைத் தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பது மிகச் சிறப்பான அமைப்பு என்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித்தரக்கூடிய யோகமானது இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச் சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் மனக்கவலைகள் விலகி நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த வேலைப்பளு எல்லாம் குறையும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு செயல்பட்டால் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, குரு பகவானுக்கு நெய் தீபமேற்றுவதன் மூலம் வளமானப் பலன்களை பெறமுடியும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் அமையப்பெற்று, குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் பொருளாதார தேவைகள் அனைத்தும் உரிய நேரத்தில் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயம் தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட உங்கள் தனித்திறமையால் எளிதில் செய்துமுடிப்பீர்கள். கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்க இருக்கிறது. உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற நட்புகளால் ஒருசில நேரங்களில் அவப்பெயர்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நட்புகளிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற அலைச்சல், வீண் குழப்பம் ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 6-ல் குரு சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது முடிந்தவரை அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் சூழ்நிலையை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலையும், ஓய்வுநேரம் குறையக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை, வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக நீங்கள் தொழில் தொடர்பாக எண்ணிய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மனமகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். புதியவாய்ப்பு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களுக்கு வரும் நாட்களில் திறமைக்கு ஏற்ற சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத் தோடு செயல்படுவது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினை அடையமுடியும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு தேவையற்ற மனக் கவலைகளை ஏற்படக்கூடிய நாட்களாக இருக்கும் என்பதால் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது மிகவும் நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் முடிந்தவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமாகும். போட்டிகள் அதிகமாக இருக்கக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதால் உங்கள் பணியில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதும், முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சனிக்கிழமையன்று தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் புதியமுயற்சிகளைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேச பெருமாளைத் தரிசிப்பது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் உள்ளது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்றாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படக்கூடிய நேரமாகும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போதைக்கு சற்று பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் சில நல்லமாற்றங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உடல் வேலை செய்வர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களைச் சொல்வார்கள் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நிலைமையை புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் சற்றுக் குறையும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தனவரவு ஏற்படும். உறவினர்கள் மூலமாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை ஏற்படும். தடைப்பட்ட மங்களகரமான சுக காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய ஆர்டர்கள் கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் மனநிம்மதி உண்டாகும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் விலகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்துவந்த பழிச் சொற்கள் எல்லாம் விலகி ஒரு சுமூகமான நிலை உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக வயது மூத்தவரிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சர்பேஸ்வரரை ராகுகால நேரத்தில் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

bala230224
இதையும் படியுங்கள்
Subscribe