முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.

தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: மூலம்- 1.

செவ்வாய்: ரோகிணி- 3 (வ).

Advertisment

புதன்: பூராடம்- 3.

குரு: உத்திரட்டாதி- 1.

சுக்கிரன்: பூராடம்- 1.

சனி: அவிட்டம்- 2.

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

18-12-2022 இரவு 10.30 மணிக்கு துலாம்.

21-12-2022 அதிகாலை 2.57 மணிக்கு விருச்சிகம்.

23-12-2022 அதிகாலை 4.02 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான சுக்கிரன், சூரியன் இணைந்து பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படவும். நெருங்கிய வர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. குரு 12-ல் இருப்ப தால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு செயல்படவும். தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. எனவே சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுடைய பணியையும் இணைத்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருப்பதால் உங்களது ஓய்வுநேரம் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். துர்க்கைக்கு ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், சூரியனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதா லும், குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தாலும் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து, கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்க முடியும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற் கொண்டால் நல்லசெய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்தி களைப் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வேலை யாட்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த ஆர்டர் களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுக்கு முழுமையான அனுகூலங்கள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 7-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டமச்சனி நடப்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருந்தால் விரயங்களைத் தவிர்க்கலாம். பூர்வீக சொத்துரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் பங்காளியிடம் பக்குவமாக நடந்துகொள்ள வும். வீண் பேச்சைத் தவிர்ப் பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் கவனத்தோடு செயல் பட்டால்தான் இலக்கை அடையமுடியும். கூட்டாளி களை அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச் சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக நிம்மதிக் குறைவு ஏற்படும். உங்கள்பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்று மகிழ்ச்சியுண்டாகும். உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைப் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரும் இனிய நிகழ்வு கள் நடக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூல மான பலன்கள் ஏற்படும். எதிர்ப்பு தெரிவித்த வர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். வாங்கிய கடன்களைத் தற்போது குறைத் துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தற்போது சற்று குறைவதால் தொழிலில் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த மன அழுத் தங்கள் குறைந்து நிம்மதி யுடன் பணிபுரியமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் எண்ணங் களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத பணவரவுகள் ஏற்பட்டு அனைத்துப் பிரச்சினைகளும் குறையும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். அஷ்டலட்சுமி வழிபாடு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் தீபமேற்று வது நன்று.

dd

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப் பதால் எதையும் எதிர்கொண்டு அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து அனைத்து சிக்கல்களையும் சமாளிக்கமுடியும். போட்டி, பொறாமைகள் விலகி மன அமைதி ஏற்படும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் துணிந்து செயல்பட்டு நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். பொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைப்பதால் அனைத்து விதமான கடந்தகால சோதனைகளும் விலகி நல்ல வளர்ச்சியடைவீர்கள். உடனிருப்பவர்கள் உதவியாக இருப்பதால் கடினமான காரியத்தைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். உத்தியோகரீதியாக பணியில் நிம்மதியுடன் செயல்படும் நிலையும், விரும்பிய மாற்றங் களை அடையும் யோகமும் உண்டு. நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகும். திங்கள், செவ்வாய் ஆகியவை அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். பொன், பொருள் வாங்குவது, புதிய முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றை இந்த நாட்களில் மேற்கொண் டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நன்று.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதியும் 9, 10-க்கு அதிபதியுமான புதன், சுக்கிரன் இணைந்து 4-ல் சஞ்சரிப்பது அற்புதமான தர்மகர்மாதிபதி யோகம். எனவே பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. நீங்கள் நினைத்தது நடக்கும். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பணவரவு மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால நெருக்கடிகள் குறைவதுடன் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குறித்த நேரத்தில் சாப்பிடுவது நன்று. அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு நன்றாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சக ஊழியர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். சிவன் வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, துர்க்கையம்மன் வழிபாடு நன்று.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் கள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை உண்டாகும். நம்பியவர் களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்து வார்கள். குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால்தான் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். சிக்கனத்துடன் இருப்பது, வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனையடைய இடைஞ்சல் கள் உண்டாகும். சில இடைத்தரகர்களின் செயல்களால் வீண் இழப்புகளை எதிர் கொள்வீர்கள். வேலையாட்கள் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் ஓய்வுநேரம் குறையும். உயரதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் நடந்துகொண்டால் அனுகூல மான பலன்களை அடையலாம். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகியவை அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். நீண்டநாள் இழுப்பறி நிலையில் இருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். முருக வழிபாடு, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது நன்று.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிக்கு தன ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். சனி 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதால் பொருளா தாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கடந்தகால கஷ்டங்கள் எல்லாம் விலகும். மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். நீங்கள் நீண்டநாட்களாக எண்ணிய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய சூழல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல், சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சாதகமான சூழ்நிலை உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் அமைவார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்துவாழும் சூழல் உண்டாகும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரனின் அனுகூலமான சஞ்சாரத்தால் எதில் ஈடுபட்டா லும் அதிகப்படியான ஆதாயங்களை அடைய லாம். முருக வழிபாடு, சிவன் வழிபாடு நன்று.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து ஜென்ம ராசியில் உள்ளதால் பலமான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகியுள்ளது. இதன்காரணமாக உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து குடும்பத்தில் சுபிட்சத்தைப் பெறுவீர் கள். பொருளாதாரரீதியாக தக்கநேரத்தில் கிடைக்கவேண்டியது கிடைத்து நிம்மதி உண்டாகும். ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடி யையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதும், இயற்கை உணவுகளை உட்கொள்வதும் உத்தமம். பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் உதவியை நம்பாமல் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால், போட்டிகளை சமாளித்து நல்ல லாபத்தை அடையமுடியும். சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்தாலும், ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் நிலைமையை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உடல் அசதி உண்டானாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதி உண்டாகும். இந்த வாரத்தில் சில கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் பொருளாதாரரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, நெய் தீபமேற்றுவது நன்று.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு கள், மன நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இடையூறுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக் கடிகள் ஏற்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்பது மட்டுமல்லாமல் சிலருக்கு எதிர் பாராத மருத்துவச் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். சில இடைத்தரகர்களின் செயல்களால் நியாயப்படி உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப் படும். வேலையாட்கள் உங்களிடம் புதிய கோரிக்கைகளை வைப்பார்கள். அதிக முதலீடு கள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதும், இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் கையாள்வதும் நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்குமென்பதால் எதிலும் நிதானமாக செயல்படவும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு, சிவன் வழிபாடு நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களது வாழ்க்கைத் தரம் உயரும். குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். கடந்தகால கடன்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட் களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமல்லா மல் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற் கொண்டவர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கி யம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப் பாக செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக் காட்ட நல்ல சந்தர்ப்பமும், உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி மனநிம்மதி ஏற்படும் சூழலும் உண்டாகும். ஒருசிலருக்கு அலைச்சல் கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். உடன்பிறந்தவ ரிடம் பேசும்போது பொறுமையோடு இருப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய மாற்றங் களும், அதன்மூலம் மிகவும் அனுகூலமான பலன் களை அடையும் வாய்ப்பும் உண்டு. முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் மறைமுகப் பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். ராகு 2-ல் உள்ளதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரும் இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீகச் சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் தொழில் அபிவிருத் திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், பொருளாதார உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படும். மேலும் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைத் தரும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவை யற்ற அலைச்சல், மனநிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.