இந்த வார ராசிபலன் 17-7-2022 முதல் 23-7-2022 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-17-7-2022-23-7-2022

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 4.

செவ்வாய்: பரணி- 1.

புதன்: புனர்பூசம்- 4.

குரு: உத்திரட்டாதி- 4.

rr

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4.

சனி: அவிட்டம்- 2.

ராகு: பரணி- 4.

கேது: விசாகம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

18-7-2022 காலை 6.34 மணிக்கு மீனம்.

20-7-2022 பகல் 12.50 மணிக்கு மேஷம்.

22-7-2022 இரவு 11.01 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடிவரும். நீங்கள் சும்மா இருந்தாலும் உடனிருப்பவர்களால் மன அமைதி குறையும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணவிஷயத் தில் சிக்கனத்துடன் இருப்பது, கையில் இருப் பதைக்கொண்டு செலவுசெய்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒருசிலருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலைகூட ஏற்படலாம். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளிநபர்களிடம் தொழில் விஷயங் களைப் பேசாமலிருப்பது உத்தமம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வுநேரம் குறையும் சூழல் உண்டாகும். அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரக்கூடியவையாக இருக்கும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, சரபேஸ்வரரை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் சகலவிதத்திலும் சுபிட்சங் கள் கிட்டும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் உங்களின் பொருளாதாரநிலை சிறப் பாக இருந்து அனைத்துவிதமான தேவை களும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் குடும் பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட் களை வாங்கும் யோகம் ஏற்படும். இதுநாள் வரை 2-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 3-ல் புதனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய சிறுசிறு பிரச்சினைகள் விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். மணவயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கி யம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் வீண் மருத்துவச்செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் லாபகரமான பலன் களை அடைவீர்கள். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் புதிய ஆர்டர்களைத் தக்க நேரத்தில் டெலிவரி செய்து லாபத்தை ஈட்டி மகிழ்வீர் கள். எதிர்பார்த்த வெளியுதவி கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு கௌரவ மான நிலை கிடைப்பது மட்டு மல்லாமல் அதிகாரிகளுடைய ஒத்து ழைப்பும் ஆதரவாக இருக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான லாபத்தை அடைவீர்கள். முருக வழிபாடு, ராகுகால பூஜைகளில் துர்க்கையம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 4.

செவ்வாய்: பரணி- 1.

புதன்: புனர்பூசம்- 4.

குரு: உத்திரட்டாதி- 4.

rr

சுக்கிரன்: மிருகசீரிடம்- 4.

சனி: அவிட்டம்- 2.

ராகு: பரணி- 4.

கேது: விசாகம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

18-7-2022 காலை 6.34 மணிக்கு மீனம்.

20-7-2022 பகல் 12.50 மணிக்கு மேஷம்.

22-7-2022 இரவு 11.01 மணிக்கு ரிஷபம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடிவரும். நீங்கள் சும்மா இருந்தாலும் உடனிருப்பவர்களால் மன அமைதி குறையும். சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணவிஷயத் தில் சிக்கனத்துடன் இருப்பது, கையில் இருப் பதைக்கொண்டு செலவுசெய்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஒருசிலருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலைகூட ஏற்படலாம். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளிநபர்களிடம் தொழில் விஷயங் களைப் பேசாமலிருப்பது உத்தமம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வுநேரம் குறையும் சூழல் உண்டாகும். அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரக்கூடியவையாக இருக்கும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, சரபேஸ்வரரை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் சகலவிதத்திலும் சுபிட்சங் கள் கிட்டும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் உங்களின் பொருளாதாரநிலை சிறப் பாக இருந்து அனைத்துவிதமான தேவை களும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் குடும் பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட் களை வாங்கும் யோகம் ஏற்படும். இதுநாள் வரை 2-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 3-ல் புதனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய சிறுசிறு பிரச்சினைகள் விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். மணவயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கி யம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் வீண் மருத்துவச்செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் லாபகரமான பலன் களை அடைவீர்கள். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் புதிய ஆர்டர்களைத் தக்க நேரத்தில் டெலிவரி செய்து லாபத்தை ஈட்டி மகிழ்வீர் கள். எதிர்பார்த்த வெளியுதவி கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு கௌரவ மான நிலை கிடைப்பது மட்டு மல்லாமல் அதிகாரிகளுடைய ஒத்து ழைப்பும் ஆதரவாக இருக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான லாபத்தை அடைவீர்கள். முருக வழிபாடு, ராகுகால பூஜைகளில் துர்க்கையம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் பேச்சுத் திறமையால் கடந்தகாலப் பிரச்சினைகளை சமாளித்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து பொருளா தாரரீதியாக அனுகூலங்களைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நல்ல நட்புகள் கிடைத்து அதன்மூலம் ஆதாயம் அடைய முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல் களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்க லாம். அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடை வது மட்டுமல்லாமல் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர் கள். மறைமுகப் போட்டிகள் நிலவினாலும் அதனை உங்களது தனித் திறமையால் சமாளித்து ஏற்றம் பெறுவீர் கள். வேலைக்குச் செல்பவர் களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அதிகாரியிடம் வாக்கு வாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை நெய்தீபமேற்றுவது நன்று.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நீண்டநாட்களாக எண்ணிய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். இதுநாள்வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த சூரியன், புதன் தற்போது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த சிக்கல்கள் எல்லாம் குறையும். வயது மூத்தவர்களுடைய ஆசிர்வாதம் கிடைப்ப தால் தீராத பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் எதிர் பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியா பாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சி யடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழும் நிம்மதியான நிலை ஏற்படும். வரும் ஞாயிறன்று வீண் குழப்பங்கள் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் முன்னேற்றத் தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது உத்தமம்.

rr

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நல்ல ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர் களிடம் கடந்தகாலங்களில் நிலவிய கருத்து வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமையான நிலை ஏற்படும். ராசியாதிபதி சூரியன், புதனுடன் 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்பதால் பணவிஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது, பிறர் விஷயத் தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குருவும் 8-ல் இருப்பதால் உங்கள் சக்திக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருந்தாலும் சந்தை சூழ்நிலை சற்று நெருக்கடி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு முடிவையும் யோசித்து எடுத்தால் வீண் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். இயந்திரங் கள் பழுதாவதால் எதிர்பாராத வகையில் வீண் செலவு களை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுத லாக இருப்பது மட்டுமல்லாமல் பிறருடைய பணியும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை நிலவும். உடல் அசதி, தேவையற்ற அலைச்சல் காரணமாக மன அமைதி குறையும். எதிலும் பொறுமையோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்களின் செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மகாவிஷ்ணு வழிபாடு, குரு பகவானுக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சூரியனுடன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும் வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சுக்கிரன் 10-ல் இருப்பதால் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உங்கள் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்யும் வாய்ப்பு, நவீன கருவிகளை வாங்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப் பாக செய்து முடிப்பீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். புதன் மதியத்திற்குபிறகு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். துர்க்கையம்மனை வழிபடுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் சங்கடங்கள் குறைந்து நன்மை ஏற்படும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன், புதனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்குமிடத்தில் கௌரவமான நிலை ஏற்படும். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். ராசிக்கு 6-ல் குரு, 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, பண விஷயத்தில் ஆடம்பரத்தைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. உடன்பிறந்த வர்களிடம் தேவையில்லாத வகையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சில இடைத்தரகர்களின் செயல்களால் தேவையில்லாத இடையூறுகளை எதிர்கொள்வீர்கள் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நன்று. இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, விநாயகரையும், ஆஞ்சனேயரையும் வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று ராகுவுடன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் வாழ்வில் ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சூரியன், புதன் தற்போது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகியிருப்பதால் உங்களுக்கிருந்த சிறுசிறு உடல் பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். நெருங்கியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எண்ணிய காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நிம்மதி யடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கான யோகம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்கள் உற்பத்திக்கு நல்ல விலை கிடைத்து ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பதால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, வேங்கடாசலபதியை தரிசிப்பது உத்தமம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும், 5-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பங்காளிகள் வகையில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். சனிபகவான் வக்ரகதியில் 2-ல் சஞ்சரிப்பதாலும், குரு 4-ல் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது உத்தமம். நீங்கள் நல்லதாக ஏதாவதொரு செயல் செய்தாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். சூழ்நிலைக்குத் தக்கவாறு தற்போது பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நேரத்தில் உடனிருப்பவர்களே துரோகம் செய்வார்கள். ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருந்தால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் வேலைப்பளுவை பற்றிக் கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. பிறர் சொல்வதைக்கேட்டு இப்பொழுது இருக்கும் வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் ஞாயிறு, சனி ஆகியவை உங்களுக்கு அனுகூலமான நாட்களாக இருக்கும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு தற்போது சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, வீட்டில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் நிலவும். வாகனங் களைப் பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். கூட்டாளிகளை அனுசரித்துச்சென்றால் அவர்களின் ஆதரவால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமாக இருப்பது, வேலைப்பளுவை சற்று குறைத் துக்கொள்வது நல்லது. சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் சென்றால் நிலைமையை சமாளித்துவிடமுடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதன்மூலமாக சங்கடங்கள் சற்று குறையும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக்கொடுப்பது, சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயங்கள் அதிகப்படியாகக் கிடைக்கும். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகுவது மட்டுமல்லாமல் உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். குரு தன ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் பூர்த்தியாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்களுக்குக்கூட தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீங்கள் இருக்குமிடத்தில் நல்லநிலையை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாமல், புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெறுவீர்கள். போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான வருவாய் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் கடந்த காலங்களில் நீங்கள் பட்டபாட்டிற்கான பலனைத் தற்போது அடையும் யோகமுண்டு. சம்பள பாக்கிகள் எல்லாம் தற்சமயம் கிடைத்து பொருளாதாரக் கஷ்டங்கள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அதிகப்படியான அனுகூலங் களைப் பெறுவீர்கள். சனிபகவான் வழிபாடு, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடந்தகால நெருக்கடிகள் குறையும். கையில் இருப்பதைக்கொண்டு செலவுசெய்வது, செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உதவியால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். செவ்வாய், ராகு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நிலை, வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் அமைப்பு ஏற்படும். மறைமுக போட்டிகள் குறைந்து அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவுப் பயணங்களைத் தள்ளி வைப்பது சிறப்பு. திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினைப் பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, சர்ப்ப கிரகங்களுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

bala220722
இதையும் படியுங்கள்
Subscribe