முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மூலம்- 1.
செவ்வாய்: கேட்டை- 2.
புதன்: மூலம்- 4.
குரு: அஸ்வினி- 4 (வ).
சுக்கிரன்: விசாகம்- 1.
சனி: சதயம்- 1.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
17-12-2023 மாலை 3.45 மணிக்கு கும்பம்.
19-12-2023 மாலை 6.20 மணிக்கு மீனம்.
21-12-2023 இரவு 10.08 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 7-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 9-ல் சஞ்சரிப்பதும், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் அனைத்து வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்பாக பழகுவார்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள்மூலமாக ஆதாயமான பலன்களை வரும் நாட்களில் அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். போட்டி, பொறாமைகள் விலகும். மனநிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகவும் சாதகமாக இருக்கும். இடைத்தரகர்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் விலகி தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு அனுகூலமாக இருப்பது மட்டுமில்லாமல் கடினமான பணியைகூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்க முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய நல்ல நிலை ஏற்படும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்லும்போது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அசையா சொத்துகள்வகையில் அனுகூலங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். சூழ்நிலைக்குத் தக்கவாறு சிந்தித்து பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. 12-ல் உள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் ஒருசில உதவிகள் கிடைத்து உங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படவேண்டிய காலமாகும். வேலையாட்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது மிகவும் கவனமாக செயல்படவும். அரசு அதிகாரிகள் ஏற்படுத்தும் இடையூறுகளால் மன அமைதி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் பிறர் பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நிலை இருக்கும். பிறர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமல் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குருபகவானுக்கு வியாழக்கிழமை மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதாலும், 6-ல் செவ்வாய் ஆட்ச
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மூலம்- 1.
செவ்வாய்: கேட்டை- 2.
புதன்: மூலம்- 4.
குரு: அஸ்வினி- 4 (வ).
சுக்கிரன்: விசாகம்- 1.
சனி: சதயம்- 1.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
17-12-2023 மாலை 3.45 மணிக்கு கும்பம்.
19-12-2023 மாலை 6.20 மணிக்கு மீனம்.
21-12-2023 இரவு 10.08 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 7-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 9-ல் சஞ்சரிப்பதும், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் அனைத்து வகையிலும் ஏற்றங்களை பெறுவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்பாக பழகுவார்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள்மூலமாக ஆதாயமான பலன்களை வரும் நாட்களில் அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். போட்டி, பொறாமைகள் விலகும். மனநிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகவும் சாதகமாக இருக்கும். இடைத்தரகர்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் விலகி தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு அனுகூலமாக இருப்பது மட்டுமில்லாமல் கடினமான பணியைகூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்க முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய நல்ல நிலை ஏற்படும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்லும்போது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அசையா சொத்துகள்வகையில் அனுகூலங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். சூழ்நிலைக்குத் தக்கவாறு சிந்தித்து பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. 12-ல் உள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் ஒருசில உதவிகள் கிடைத்து உங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளமுடியும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படவேண்டிய காலமாகும். வேலையாட்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது மிகவும் கவனமாக செயல்படவும். அரசு அதிகாரிகள் ஏற்படுத்தும் இடையூறுகளால் மன அமைதி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் பிறர் பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நிலை இருக்கும். பிறர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமல் அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குருபகவானுக்கு வியாழக்கிழமை மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதாலும், 6-ல் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமில்லாமல் பொருளாதாரரீதியாக ஆதாயங்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சற்று சிக்கனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 7-ல் சூரியன் இருப்பதால் எந்த செயலிலும் அவசரப்படாமல் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஆதாயங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சில மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் சனி 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் தனித்திறமையால் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்த செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது உத்தமம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, பணஉதவி செய்வது போன்றவற்றை சிறிது காலத்திற்கு தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்பாடுகளை ஏற்படுத்துவார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தவர்களுக்கு தற்போது நல்லமுன்னேற்றம் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஞாயிற்றுக்கிழமை வீண் பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரனும், ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையும் வாய்ப்புகள் ஏற்படும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உற்றார்- உறவினரிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பதும், கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு செயல்படுவதும் நன்று. பெண்கள் வகையில் ஒருசில உதவிகள் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் பொறுமையுடனும் கவனமாகவும் செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து ஆதாயங்களை பெறமுடியும். வேலையாட்கள்மூலமாக நீங்கள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு கிடைக்காது. எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத செலவு களை எதிர்கொள்ள நேரிடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறமுடியும். 3-ல் கேது உள்ளதால் பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக் கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. ஞாயிறு பிற்பகல், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வீண் அலைச்சல், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்படும். ஆஞ்சனேயர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களை பெறுவீர்கள்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 4-ல் செவ்வாய், 7-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொதுவாக உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள், மன அமைதி குறைவு ஏற்படும். எந்த செயலிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. ராகு 8-ல் உள்ளதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பதும் நல்லது. பொதுவாக நீங்கள் கவனமாக செயல்பட்டால் தான் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக மன உளைச்சல், ஓய்வு நேரம் குறையும் சூழல் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் தேவையில் லாத பழிச்சொற்களை உங்கள்மீது கூறுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது சற்று பொறுமையோடு இருந்தால் ஜனவரி மாதம்முதல் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து நல்ல முன்னேற் றங்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இவ்வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுக்கு தேவையற்ற குழப்பமும், வீண் அலைச்சலும் உண்டாகும் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. வெங்கடாசலபதி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4லிஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2லிஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று, 3-ல் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் கடந்தகால கடன் பிரச்சினைகளும் முழுமையாக விலகி நிம்மதி அடைவீர்கள். 4-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுகொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையைக் கடைபிடிப்பது உத்தமம். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் புதிய ஆர்டர்களை துணிச்சலோடு எடுத்து நல்ல நிலையினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கின்ற பணிகளை திறம்படச் செய்வது மட்டுமில்லாமல் இருக்கும் இடத்தில் நல்லபெயர் எடுக்க முடியும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் புதியமுயற்சியில் ஈடுபட்டால் அதில் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறமுடியும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எடுத்த காரியம் பாதியில் தடைப்படும் நிலை, திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உக்ர தெய்வங்களை வழிபடுவது, ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவதுடன் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு பல்வேறு முன்னேற்றங்களை அடைவீர்கள். முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நற்பண்பை புரிந்துகொண்டு பகைமை மறந்து தற்போது நட்புடன் பழகுவார்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. செவ்வாய் 2-ல் உள்ளதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வதன்மூலம் ஏற்படும் சிறுசிறு அஜீரண கோளாறுகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டிற்கு பங்கமில்லாமல் லாபத்தை ஈட்டமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை கூறக்கூடிய நேரம் என்பதால் எந்தச் செயலிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் கஷ்டங்கள் குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். கேது 11-ல் உள்ளதால் பொருளாதாரரீதியாக ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தால் வீண் சிக்கலை எதிர்க்கொள்வீர்கள். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, எதைப் பேசினாலும் சற்று யோசித்துப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். அலைச்சல் காரணமாக மன நிம்மதி குறைவு, உடல் அசதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடைஞ்சல்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று நிதானத் தோடு செயல்பட்டால் ஒருசில ஆதாயங்களைப் பெற முடியும். இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தடைப்படும் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளுடைய நெருக்கடி சற்று அதிகப்படியாக இருக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சற்று கவனத்தோடு கையாண்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகளும், எதிர்பாராதவகையில் பொருளாதார உதவிகளும் உங்களுக்கு கிடைத்து அதன்மூலம் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, பிரதோஷத்தன்று சிவ ஸ்தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதரின் ஆதரவானது கிடைப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல படிப்படியாக குறையும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது, முன்கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 10-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியானது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொருட் தேக்கங்களின்றி போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் நீங்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளிநபர்களால் இருந்த தொந்தரவுகள் எல்லாம் முழுமையாக மறைந்து தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான பணியைக்கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். அதிகாரிகள் ஆதரவு மிகவும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியுடன் பணிபுரியலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் ஜனவரி தொடக்கத்தில் ஒரு நல்ல வளர்ச்சியை அடையமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடந்து அதன்மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும், எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும் உண்டாகும். பொருளாதாரரீதியாக லாபகரமான பலன்களைப்பெற்று அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களின் நீண்டநாளைய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தடைபட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மனநிம்மதி உண்டாகும். இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான பதவி ஆனது உங்களை தேடிவரும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான செயல்களில் தற்போது முயற்சித்தால் சாதகமான செய்தி கிடைக்கும். சனி 2-ல் இருப்பதால் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவுக்கு சிறப்பான முன்னேற்றங்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக்கும். உங்களின் கடந்தகால உழைப்புக்கான பலனை தற்போது பெற்று அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உங்கள்மீது இருந்த வீண் பழிச்சொற்கள் எல்லாம் முழுமையாக மறைந்து மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வரும் புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு வளமான பலன்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபமேற்றுவது, மகா விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடைபெறுவதால் பல்வேறு இன்னல் களை எதிர்கொண்டு வந்த உங்களுக்கு தற்போது 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் முழுமையாக மறைந்து ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் அமைப்பு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு அற்புத நிலையானது வரும் நாட்களில் உண்டு. குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்கக்கூடிய யோகமானது தற்போது உள்ளதால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகம் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் எளிதில் சமாளிக்கக் கூடிய பலம் உங்களிடம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை, வேலைப்பளு குறையும் அமைப்பு ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூக நிலை ஏற்படும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையும் வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் இழுபறி நிலையில் இருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற் கான அறிகுறிகள் தென்படும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் சகலவிதத் திலும் சுபிட்சங்களைப் பெறுவீர்கள். எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சமுதாயத்தில் உயர்வான நிலையினை அடையமுடியும். செவ்வாய 9-ல் இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் சேமிக்கும் அளவிற்கு உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த கவலைகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது பிரச்சினைகளை குறைக்க உதவும். குறிப்பாக கணவன்- மனைவியிடையே பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நன்று. தொழில்ரீதியாக மிகவும் லாபகரமான பலன்களை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்களை பெரும் யோகமுண்டு. உங்களுக்கு இருந்த வேலைப்பளு குறைவது மட்டுமில்லாமல் சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வரும் ஞாயிறு, புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண அனுகூலங்கள் கிடைக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.