முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: விசாகம்- 4.
சந்திரன்: ரோகிணி- 2.
செவ்வாய்: பூசம்- 2.
புதன்: கேட்டை- 3.
குரு: மிருகசீரிடம்- 1 (வ).
சுக்கிரன்: மூலம்- 4.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
18-11-2024 அதிகாலை 4.31 மணிக்கு மிதுனம்.
20-11-2024 காலை 8.46 மணிக்கு கடகம்.
22-11-2024 மாலை 5.09 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் சனி, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் உங்கள் தனித்திறமை யால் எதையும் சமாளிப்பீர்கள். தூரப் பயணங் களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் ஒருசில இடையூறுகளை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். அதிகாரியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது உத்தமம். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் குடும்பத் தில் தடைப்பட்ட சுபகாரியங் கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ராகு 11-ஆம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். சில விஷயங்களில் சாமர்த்தியமான முடிவுகளை எடுத்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு இந்த வாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, மாற்றித்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 20, 21, 22.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சூரியன்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: விசாகம்- 4.
சந்திரன்: ரோகிணி- 2.
செவ்வாய்: பூசம்- 2.
புதன்: கேட்டை- 3.
குரு: மிருகசீரிடம்- 1 (வ).
சுக்கிரன்: மூலம்- 4.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
18-11-2024 அதிகாலை 4.31 மணிக்கு மிதுனம்.
20-11-2024 காலை 8.46 மணிக்கு கடகம்.
22-11-2024 மாலை 5.09 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத் தில் சனி, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் உங்கள் தனித்திறமை யால் எதையும் சமாளிப்பீர்கள். தூரப் பயணங் களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் ஒருசில இடையூறுகளை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். அதிகாரியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்ப்பது உத்தமம். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் குடும்பத் தில் தடைப்பட்ட சுபகாரியங் கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ராகு 11-ஆம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். சில விஷயங்களில் சாமர்த்தியமான முடிவுகளை எடுத்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு இந்த வாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, மாற்றித்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 20, 21, 22.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். சக ஊழியர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 23.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் எதிர்பார்க்கின்ற பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் உங்களது கையிருப்பு குறையக்கூடிய நேரமாகும். சனிபகவான் தற்போது 8-ல் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இக்கட்டான நேரமென்பதால் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி உங்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்கள் உங்களை மாற்று பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மாற்றித் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 20, 21, 22.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து மனமகிழ்ச்சி உண்டாகும். மற்றவர் களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் தற்போது நடந்து மன அமைதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் சிறப்பான முறையில் கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நீங்கள் விரும்பியதை எட்டக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 23.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் குறையக் கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை அடையக்கூடிய யோகமுண்டு. தொழிலில் புதிய வேலையாட்கள் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்றுக் குறையும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகள் தற்போது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் கவலைகள் எல்லாம் விலகக்கூடிய நேரமாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21, 22.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். எந்த ஒரு காரியத்திலும் உங்களின் பேச்சுத் திறமை காரணமாக சிறப்பாக செயல்பட்டு பொருளாதார அனுகூலங்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மதிப்புமிகுந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் ஈட்டக்கூடிய நேரமாகும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தற்போது குறைத்துக்கொள்ள முடியும். உறவினர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று பொறுமையோடு சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினா லும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்துகொள்ளக் கூடிய நேரமென்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனகவலைகள் ஏற்படக்கூடிய நேரமாகும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் உங்களின் தனித்திறமை காரணமாக எதையும் சிறப் பாக கையாண்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நேரமென்பதால் உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவர்களை நம்பாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் மாற்றித்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 23.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். திருமணம் சார்ந்த சுபநிகழ்ச்சி கள் தற்போது எளிதில் கைக்கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல நிலையினை அடைவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமென்பதால் மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக் கூடிய வாய்ப்புண்டு. இந்த வாரத்தில் வளமான பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் அனைத்துவித சிக்கலுக்கும் சுமூகமான தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நேரமென்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. சில விஷயங்களில் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல் படுவதன்மூலம் தீர்க்கமுடியாமல் இருக்கக்கூடிய சிக்கலுக்கு கூட சுலபமான தீர்வு கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு செயல்படுவது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரி யுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முக்கிய விஷயங்களை பொதுவெளி யில் பேசாமல் இருப்பது தற்போதைக்கு சிறப்பு. மாணவ- மாணவியர்கள் பெரியவர்களிடம் வீண்வாக்குவாதம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக் கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். எதிர்பாராத பண சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்லவாய்ப்புகள் தற்போது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சிக்கல்களை தற்போது குறைத்துக் கொள்ளமுடியும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல சன்மானம் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மாற்றித்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி குருபகவான் 3-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு நல்லமுடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் உற்சாகத்தோடு செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய ஒரு நேரமாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு மதிப்புமிகுந்த இடத்திலிருந்து அழைப்பு வரும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் உங்கள்மீது பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உக்கிர தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 23.