முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: புனர்பூசம்- 3.
செவ்வாய்: மகம்- 3.
புதன்: பூசம்- 4.
குரு: பரணி- 2.
சுக்கிரன்: மகம்- 2.
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்: ஆடி 1 (17-7-2023)
கடக சூரியன்
(அதிகாலை 5.07).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்
17-7-2023 இரவு 10.30 மணிக்கு கடகம்.
20-7-2023 காலை 10.55 மணிக்கு சிம்மம்.
22-7-2023 இரவு 11.40 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். மனைவி, பிள்ளைகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வரும் திங்கட்கிழமை முதல் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஒருசில நேரங்களில் கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு தற்போது கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியர்களிடம் பேசுகின்றபொழுது கவனமாக பேசுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு உன்னதமான நாட்களாக இருக்கும். துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தான 4-ல் சஞ்சரிப்பதாலும் வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர் நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் கிடைக்கும். குரு, ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உற்றார்- உறவினர்வகையில் இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் சூழ்நிலையை சமாளித்து லாபங்களை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது உத்தமம். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் மன அமைதி ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடிக்க முடியும். ஒவ்வொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தற்போதைக்கு குறைத்துக்கொள்வது நல்லது. இவ்வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத் தரக்கூடிய காலமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்மையை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் அனைத்துவிதமான செயலிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு- ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், பிறருக்கு தந்த வாக்குறுதியை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். புதன் 2-ல் இருப்பதால் உங்கள் பேச்சுத் திறமையால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளை வரும் நாட்களில் தீர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில்ரீதியாக சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அமைப்பும், வேலை யாட்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பலமும் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த ஆதரவுகளும், பொருளாதார உதவிகளும் கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று கூறி னால் அது மிகையாகாது. ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டா லும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயக ருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது நற்பலனை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 10-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவரிடம் வீண் வாக்குவாதம், தேவையில்லாத பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் முன்கோபத்தை குறைத்துக்கொண்டு ஒவ்வொரு செயலிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல் படுவது நல்லது. நீங்கள் நிதானமாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்களால் உங்களுக்கு மன அமைதி குறையும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற இரவு பயணங்களைத் தவிர்ப்பது தற்போதைக்கு சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். போட்ட முதலை எடுக்க அரும்பாடு படவேண்டி இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்வீர் கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர் களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். வெளிநபர்களிடம் குடும்ப விஷயங்களை பேசாமல் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ளமுடியும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிக தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வரும் திங்கட்கிழமைமுதல் 12-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது, உறவினர்களிடம் பேசுகின்றபொழுது நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவிற்கு நல்ல ஒரு நிலையை அடைவீர்கள். சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் ஏற்படும். சக ஊழியர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் அதை அனைத்தையும் சமாளிப்பீர்கள். வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் மிக முக்கியமான முயற்சிகளை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். பைரவர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மையை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் வரும் திங்கட்கிழமை முதல் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குரு, ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் 12-ல் இருப்பதால் உடன்பிறப்புகளை அனுசரித்துசெல்வது நல்லது. நீங்கள் பெரிதும் நம்பியவர்களே கடைசி நேரத்தில் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காத காரணத்தி னால் உங்களது மன அமைதி குறையும். எது எப்படி இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டாலும் ஒருசில இடையூறுகளால் அடையவேண்டிய லாபத்தை அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துசெல்வது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அனைத்து பணியையும் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். திடீர் பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் நெருக்கடிகள் குறையும். சர்பேஸ்வர வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையன்று அர்ச்சனைசெய்வது நன்மையை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசி அதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகள் எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்லமுடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் எல்லாம் விலகி அனைத்து செயலிலும் மன நிம்மதியுடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைபெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதன் 9-ல் சஞ்சரிப்பதாலும் வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றா லும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும் என்றாலும் உறவினரிடம் பேசுகின்றபோது சற்று பக்குவமாக பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். சில நேரங்களில் வெளி ஆட்களை நம்பாமல் ஒவ்வொரு பணியிலும் நீங்கள் நேரடியாக செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் குறையும் என்றாலும் உங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வரும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை, தேவையற்ற மன குழப்பங்கள் உண்டாகும் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசி அதிபதி குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வகையில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துவகையில் சாதகமான பலன்கள் ஏற்படும். சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிலும் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளரின் நற்பெயரை பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். வெளியூர்மூலமாக ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் முற்பகல் காலங்களில் வீண் குழப்பங்கள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்))
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு, ராகு சஞ்சரிப்பதாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிர்பாராதவகையில் ஏற்படக்கூடிய செலவுகளால் உங்களுடைய கையிருப்பு குறையும். தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் காரணமாக நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது தற்போதைக்கு நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பது, முடிந்தவரை அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நன்மை தரும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். வரும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நற்பலனை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் வரும் திங்கட்கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. எதிலும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படுவதும் குறிப்பாக கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வதும் நல்லது. சில நேரங்களில் உடனிருப்பவர்களே உங்களுக்கு இடையூறுகளை தரக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது உத்தமம். கூட்டாளியினுடைய ஆதரவு சிறப் பாக இருக்கும் என்பதால் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் நீண்டநாட்களாக விரும்பிய மாற்றங்களை வரும் நாட்களில் பெறமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவது மட்டும் இல்லாமல் எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் பெறுவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிக்கு எள் தீபமேற்றுவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருந்து மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டும் இல்லாமல் மன மகிழ்ச்சி உண்டாகும். தற்போது 4-ல் இருக்கக்கூடிய சூரியன் வரும் திங்கட்கிழமைமுதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற அலைச்சல்கள் எல்லாம் குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் ஏற்பட்டு அதன்மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் குறைக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். சட்டரீதியாக இருந்த சிக்கல்களை உங்கள் தனித் திறமை யால் எளிதில் சமாளித்து தொழில், வியாபாரத்தில் நல்லதோர் நிலையினை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங் கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியருடைய உதவியானது உங்களுக்கு தக்க நேரத்தில் கிடைப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு செய்வது நன்று.