முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2.
புதன்: அஸ்தம்- 1.
குரு: உத்திரட்டாதி- 2 (வ).
சுக்கிரன்: சித்திரை- 2.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
புரட்டாசி 29 (16-10-2022) மிதுனச் செவ்வாய் (காலை 6.35).
புரட்டாசி 30 (17-10-2022) துலா சூரியன் (இரவு 7.22).
ஐப்பசி 1 (18-10-2022) துலா சுக்கிரன் (இரவு 9.39).v சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-10-2022 இரவு 10.28 மணிக்கு கடகம்.
20-10-2022 காலை 10.30 மணிக்கு சிம்மம்.
22-10-2022 இரவு 8.05 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசிக்கு 12-ல் சஞ்சரிக் கும் குரு வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். இதுவரை ராசிக்கு 2-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 3-ல் சஞ்சரிக்க இருப்ப தால் எடுக்கும் முயற்சி யில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர் கள். கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு உங்களது பலம் அதிகரிக்கும். உடனிருப் பவர்களிடம் இருந்துவந்த வீண் வாக்கு வாதங்கள் குறைந்து சுமூகமான சூழ் நிலை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்களால் சிறுசிறு இடையூறுகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் சகலவிதத்திலும் அணுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நிம்மதி யுடன் செயல்படமுடியும். குடும்பத் தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கு மென்பதால் புதிய முயற்சிகளை இந்த நாட்களில் செய்தால் அனுகூல மான பலன்களை அடையமுடியும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அர்ச்சனைசெய்வது, மகா விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதன் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால், சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு பல்வேறு காரியங்களை சாதித்துவிடுவீர்கள். ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதும், செவ்வாய்க்கிழமை முதல் 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பென்பதால் கடந்தகால சோதனைகள் விலகி பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் ராகு சஞ்சரிப்பதால், பேச்சில் பொறுமையோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து லாபங்களைப் பெறுவீர் கள். எதிர்பாராத உதவிகள் கிடைப் பதால் தொழிலை விரிவுபடுத்த முடியும். திறமைவாய்ந்த வேலை யாட்கள் உங்களுக்கு கிடைப்பார் கள். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப் பவர்கள் கடினமான பணிகளைக் கூட சிறப்பாகக் கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான ஊதியத்தை வரும் நாட்களில் பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எந்த ச
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 2.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2.
புதன்: அஸ்தம்- 1.
குரு: உத்திரட்டாதி- 2 (வ).
சுக்கிரன்: சித்திரை- 2.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
புரட்டாசி 29 (16-10-2022) மிதுனச் செவ்வாய் (காலை 6.35).
புரட்டாசி 30 (17-10-2022) துலா சூரியன் (இரவு 7.22).
ஐப்பசி 1 (18-10-2022) துலா சுக்கிரன் (இரவு 9.39).v சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
17-10-2022 இரவு 10.28 மணிக்கு கடகம்.
20-10-2022 காலை 10.30 மணிக்கு சிம்மம்.
22-10-2022 இரவு 8.05 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசிக்கு 12-ல் சஞ்சரிக் கும் குரு வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். இதுவரை ராசிக்கு 2-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 3-ல் சஞ்சரிக்க இருப்ப தால் எடுக்கும் முயற்சி யில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர் கள். கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு உங்களது பலம் அதிகரிக்கும். உடனிருப் பவர்களிடம் இருந்துவந்த வீண் வாக்கு வாதங்கள் குறைந்து சுமூகமான சூழ் நிலை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்களால் சிறுசிறு இடையூறுகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் சகலவிதத்திலும் அணுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நிம்மதி யுடன் செயல்படமுடியும். குடும்பத் தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கு மென்பதால் புதிய முயற்சிகளை இந்த நாட்களில் செய்தால் அனுகூல மான பலன்களை அடையமுடியும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அர்ச்சனைசெய்வது, மகா விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதன் 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால், சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு பல்வேறு காரியங்களை சாதித்துவிடுவீர்கள். ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதும், செவ்வாய்க்கிழமை முதல் 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பென்பதால் கடந்தகால சோதனைகள் விலகி பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் ராகு சஞ்சரிப்பதால், பேச்சில் பொறுமையோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து லாபங்களைப் பெறுவீர் கள். எதிர்பாராத உதவிகள் கிடைப் பதால் தொழிலை விரிவுபடுத்த முடியும். திறமைவாய்ந்த வேலை யாட்கள் உங்களுக்கு கிடைப்பார் கள். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப் பவர்கள் கடினமான பணிகளைக் கூட சிறப்பாகக் கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான ஊதியத்தை வரும் நாட்களில் பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களைப் பெறுவீர்கள். முருக வழிபாடு, கந்தசஷ்டி கவசம் படிப்பது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் வலுவாக சஞ்சரிப்ப தாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்ப தாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். சுக்கிரன் இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத்தரம் மேம்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப் புண்டாகும். செவ்வாய் ஜென்ம ராசியில், சனி 8-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமை முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்ப தால் உங்களுக்குள்ள அலைச்சல்கள் குறைந்து நிம்மதியுடன் செயல்படமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் உறவினர்களின் ஆதரவு சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடி கள் குறைந்து சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறமுடியும். வேலையாட் களை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் அதற்கான பொருளா தார ஆதாயங்களைப் பெறுவீர்கள். பங்காளி யிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அதிகப்படியான பொருளாதார ஆதாயங்கள் கிடைத்து கடந்தகால சோதனைகள் மறையும். சனிபகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமேற்றுவது, விநாயகரை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு 12-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், செவ்வாய்க் கிழமைமுதல் சூரியன் 4-ல் சஞ்சரிக்க இருப்ப தாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார்- உறவினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. பொதுவாக குரு 9-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்றா லும், தற்போது வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்படவேண்டிய நேரமாகும். நம்பியவர்களே கடைசி நேரத்தில் நெருக்கடிகளைத் தருவார்கள். தொழில், வியாபாரத்தில் எளிதில் முடியவேண்டிய காரியங் கள் தாமதமாகும். வேலை யாட்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிப்போகும். வேலைக் குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை யிருக்கும். வாகனங்கள் மூலமாக செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளி வைக்கவும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகா விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, மாணவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகள்செய்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 2-ல் புதன் வலுவாக சஞ்சரிப்பதும், 11-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள சின்னச் சின்ன பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத் தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளையும், உத்தரவுகளையும் பெற முடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்ப தால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளை வரும் நாட்களில் எளிதில் தீர்க்கமுடியும். சட்ட சிக்கல்கள் விலகும். உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் வேலைப் பளு குறையும் சூழ்நிலை யும் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக சிறப் பான நிலை உண்டாகும். வேலை தேடிக்கொண்டி ருப்பவர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை அமையும். உங்கள் பேச்சுத் திறமை யால் பல்வேறு காரியங் களை எளிதில் சாதிப்பீர் கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மேலும் சிறப்பான பலன்களை எளிதில் அடையமுடியும். லட்சுமி வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன் வலுவாக சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய பெயர், புகழ் மேலோங்கும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் 2-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் ராகு சஞ்சரிப்ப தாலும் பேச்சில் நிதானத்தோடு இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வர வேண்டிய பணவரவுகள் தாமதப்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தேவையற்றவகையில் தடைப்படும். பிள்ளைகள்வழியில் மனக் கவலைகள் உண்டாகலாம். பூர்வீக சொத்துவழியில் பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமும், கிடைக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் நிலைமையை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கவும். வேலைக்குச் செல்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், உடன் வேலைசெய்பவர்களால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உங்களுக் குக் கிடைக்கவேண்டிய ஊதியங்கள் சற்று தாமதப்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையும் யோகமுண்டு. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்ப தாலும், இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தற்போது 12-ல் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் வீண் செலவுகள் குறையும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவும். எந்த செயலிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் இலக்கை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் ஒருசில அனுகூலங் களை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான பலன்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக் கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. இதுவரை 7-ல் சஞ்சரித்த செவ்வாய் தற்போது 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 12-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நெருங் கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். வயதில் மூத்தவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். அசையா சொத்துவகையில் செலவுகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு கள் கிடைக்குமென்றாலும் நெருங்கியவர்களால் சிறுசிறு இடையூறுகள் ஏற்படலாம். போட்ட முதலீட்டை எடுக்க காலநேரம் பார்க்காமல் கடினமாக உழைக்கவேண்டியிருக்கும். வேலை யாட்கள் சில நேரங்களில் பிரச்சினைகளை உண்டாக்கினாலும் அனைத்தையும் நீங்கள் சமாளித்துவிடுவீர்கள். அரசு அதிகாரியிடம் சற்று கவனத்தோடு பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு சிக்கலான சூழ்நிலை ஏற்படும். சக ஊழியர்களை அனுசரித் துச்செல்வது, உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் ஆதாய மான பலன்களை அடையமுடியும். பெருமாள் வழிபாடு, கந்தசஷ்டி கவசம் படிப்பது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10, 11-ஆகிய ஸ்தானங்களில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் வளமான பலன்களைப் பெறமுடியும். பொருளாதாரநிலை சிறப் பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தி யாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எடுத்த பணியை பிறர் பார்த்து வியக்குமளவுக்கு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி கடந்தகால நெருக்கடியிலிருந்து வெளியேவருவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வு கள் நடக்கும். ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பொறுமை யுடன் செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். கடந்த காலங்களில் செய்த செயல்களுக்குத் தற்போது பொருளாதார ஆதாயத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். பிறரால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். அதிகாரி யிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான நிலை ஏற்படும். உடல்நிலை சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சிறப்பான பலன்களை அடைவீர் கள். துர்க்கையம்மன் வழிபாடு, சனிபகவானுக்கு நீலநிற சங்கு மலர்களால் அர்ச்சனைசெய்வது கெடுதியைக் குறைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் அமைப்பாகும். உங்களுக்குள்ள தேவையற்ற நெருக்கடிகள் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு கள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், தடைப் பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக் கியத்திலும், மனைவி, பிள்ளைகளின் ஆரோக் கியத்திற்கும் சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. வெளியூர் தொடர்புகள்மூலம் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் குறையும். வேலையாட் களால் இருந்துவந்த இடையூறுகள் விலகும். உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக செயல்படுவதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்துமுடிப்பீர் கள். நீங்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழும் உன்னத நிலையை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். எதிர் பாராத தனவரவுகள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும். துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது வளமான பலன் களைத் தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் தைரியத் தோடு செயல்பட்டு எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலமுண்டாகும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் செவ்வாய்க் கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல், டென்ஷன் எல்லாம் விலகி நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். பணவரவு சாதகமாக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். உற்றார்- உறவினர் கள் தக்கநேரத்தில் உதவுவதால் நெருக்கடி நிலையானது விலகி நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள்மூலம் அனுகூல மான செய்தி கிடைக்கும். பிள்ளைகள்வழியில் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொருட் தேக்கங்கள் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் கடந்தகால நெருக்கடி கள், பொருளாதாரப் பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான வேலைகளைக்கூட எளிதில் செய்யமுடியும். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு குறைந்து நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். உங்கள் பேச்சுத் திறமையால் இலக்கை அடை வீர்கள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பொருளா தார மேன்மைகளால் உங்களுக்குள்ள பிரச் சினைகள் குறையும். மகாவிஷ்ணு வழிபாடு, ஆஞ்சனேயரை தரிசிப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச்செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தோடு இருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள், வீண் பிரச்சினைகள் மேலோங்கும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். கடினமான வேலைப்பளு காரணமாக மன உளைச்சல் ஏற்படும். 7-ல் சஞ்சரிக்கும் சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் 8-ல் கேதுவுடன் சஞ்சரிக்க இருப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல், ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க கடினமாகப் போராடவேண்டியிருக்கும். வேலையாட்களால் மன அமைதி குறையும். சில இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். குறிப்பாக எந்தவொரு விஷயத்திலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பழிச்சொற்களை சுமக்க நேரிடும். உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, உயரதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். விநாயகர் வழிபாடு, கந்தசஷ்டி கவசம் படிப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது கெடுதியைக் குறைக்கும்.