இந்த வார ராசிபலன் 15-9-2024 முதல் 21-9-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-15-9-2024-21-9-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரம்- 1.

செவ்வாய்: திருவாதிரை- 2.

புதன்: பூரம்- 1.

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: சித்திரை- 1.

சனி: பூரட்டாதி- 1 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

ff

கிரக மாற்றம்:

16-9-2024 கன்னி சூரியன் இரவு 7.43 மணிக்கு

18-9-2024 துலாம் சுக்கிரன் பகல் 1.57 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மகரம்

16-9-2024 அதிகாலை 5.44 மணிக்கு கும்பம்.

18-9-2024 அதிகாலை 5.44 மணிக்கு மீனம்.

20-9-2024 அதிகாலை 5.15 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமை, முதல் மாதக்கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்களை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவி களைப் பெறக்கூடிய நேரமாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 20, 21.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் குரு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய அலைச்சல், டென்ஷன் எல்லாம் சற்று குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதும் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவதும் மிகவும் நல்லது. ஒருசிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் காரணமாக தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய பணியில் மட்டும் சற்று கவனத்தை செலுத்தவேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்குத் தேவையற்ற இடஞ்சல்களை ஏற்படுத்துவார்கள். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்து மிகவும் நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது வளமான பலனை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம்

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரம்- 1.

செவ்வாய்: திருவாதிரை- 2.

புதன்: பூரம்- 1.

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: சித்திரை- 1.

சனி: பூரட்டாதி- 1 (வ).

ராகு: உத்திரட்டாதி- 3.

கேது: அஸ்தம்- 1.

ff

கிரக மாற்றம்:

16-9-2024 கன்னி சூரியன் இரவு 7.43 மணிக்கு

18-9-2024 துலாம் சுக்கிரன் பகல் 1.57 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மகரம்

16-9-2024 அதிகாலை 5.44 மணிக்கு கும்பம்.

18-9-2024 அதிகாலை 5.44 மணிக்கு மீனம்.

20-9-2024 அதிகாலை 5.15 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமை, முதல் மாதக்கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்களை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவி களைப் பெறக்கூடிய நேரமாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுப்பீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 20, 21.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் குரு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய அலைச்சல், டென்ஷன் எல்லாம் சற்று குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதும் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவதும் மிகவும் நல்லது. ஒருசிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் காரணமாக தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய பணியில் மட்டும் சற்று கவனத்தை செலுத்தவேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்குத் தேவையற்ற இடஞ்சல்களை ஏற்படுத்துவார்கள். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்து மிகவும் நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது வளமான பலனை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 4-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தைக் கடைப்பிடித்தால்தான் ஒரு சில அனுகூலங்களை அடையமுடியும். தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். குருபகவான் 12-ல் இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டால்தான் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங் களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு தேவை யற்ற அலைச்சலும், உடல் அசதியும் உண்டாகும். குறிப்பாக மற்றவர் களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடி யான நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வீண் பழிச்சொற்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, காலபைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருந்து எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தற்போது உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் சற்று உற்சாகத்தோடு செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களது வளர்ச்சியானது இருக்கும். தொழில் முன்னேற்றத்திற் காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார உதவி கள் கிடைக்கும். கூட்டாளிகள் மூலமாக ஆதாயங்களை அடையக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறந்து பணியில் ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியர் உடைய உதவியானது சிறப்பாக இருப்பதால் கடினமான காரியத்தைக்கூட எளிதில் முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 20, 21.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இக்கட்டான நேரத்தில் எதிர் பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகக் கூடிய நேரமாகும். சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது தற்போதைக்கு சிறப்பு. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்துகொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத் திக் கொள்ளவேண்டிய நேரமாகும். ஒருசில நேரங்களில் வேலையாட் களை நம்பாமல் எந்த ஒரு காரியத்திலும் நேரடியாக நீங்கள் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். உத்தியோகரீதியாக வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடைய முடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17.

ss

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நல்லவாய்ப்புகள் உங்களை தேடிவரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத் தில் மகிழ்ச்சி, நெருங்கியவர் களால் அனுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகள் விரும்பிய நவீனகரமான பொருட்களை வாங்கித் தரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது நல்ல ஒரு தீர்வு கிடைத்து மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்ப தால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பு, ஒருசிலருக்கு கௌரவமான இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய அமைப்பும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, 11-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் 8-ல் இருப்பதாலும், செவ்வாய் 9-ல் இருப்பதாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். மாதக்கோளான சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான பணவரவுகள் சற்று தாமதமாகி மன அமைதியை குறைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய நிலை அதன்காரணமாக உடல் அசதி ஏற்படும். மனைவி, பிள்ளைகளிடம் எதிர்பாராதவகையில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் முன்கோபத்தை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நேரமாகும். இருக்க கூடிய இடத்தில் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக் கும். பூர்வீகச் சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைப்பதுடன் பொருளாதார உதவிகளும் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகரீதியாக மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைகூட நீங்கள் சிறப்பாக கையாண்டு குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்படக்கூடிய வாய்ப்பும், ஒருசிலருக்கு பரிசும் பாராட்டுதல்களும் கிடைக்கக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 20, 21.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், அசையும்- அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை சுய கௌரவம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக கடுமையான பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்கமுடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நேரமென்பதால் பேச்சிலும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்களிடம் சற்று பார்த்து பழகுவது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்

வெற்றி தரும் நாட்கள்: 16, 17.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு தற்போது உள்ள மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி வளமான பலன்கள் ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன உடல் உபாதைகள்கூட முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி, உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்ககூடிய அமைப்பு ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகரீதியாக நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 18, 19.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகுபகவான் 2-ல் இருப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. முடிந்தவரை உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் தான் தேவையற்ற பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக நீங்கள் உங்கள் இலக்கை அடைய தேவையற்ற இடைஞ்சல்கள் உண்டாகும். ஒருசில நேரங்களில் மற்றவர்களை நம்பாமல் எதிலும் நேரடியாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலைச் செய்பவர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச்சொற்களை சொல்வார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். ராசியாதிபதி குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். வரவுக்கு மீறியச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காரணமாக உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களை நம்பாமல் ஒருசில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல் பட்டால் தான் நிலைமையை சமாளித்துபோட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்துவிட்டு பொறுப்போடு நடந்துக்கொள்வது நன்று. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 18, 19.

bala200924
இதையும் படியுங்கள்
Subscribe