முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 2.
செவ்வாய்: சுவாதி- 1.
புதன்: சித்திரை- 1.
குரு: பரணி- 2 (வ).
சுக்கிரன்: மகம்- 4.
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்:
ஐப்பசி 1 (18-10-2023) துலா சூரியன் (அதிகாலை 1.29).
ஐப்பசி 2 (19-10-2023) துலா புதன் (அதிகாலை 1.02).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
17-10-2023 பகல் 2.20
மணிக்கு விருச்சிகம்.
19-10-2023 இரவு 9.03 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் புதன்கிழமைமுதல் 7-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆண்டுக்கோளான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள், பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஒருசில அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளி வைக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்கு செல்பவர்கள் மற்றவர்கள் பணியையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எவ்வளவு நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கமுடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்கள் செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியினைத்தரும். செவ்வாய் பிற்பகல், புதன், வியாழக்கிழமைகளில் தேவையில்லாத மன குழப்பங்கள், நிம்மதி குறைவுகள் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் ராசியாதிபதி சுக்கிரன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் எல்லம் இருந்த இடம் தெரியாமல் மறையும். சமுதாயத்தில் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு அமையும். உங்களுக்கு இருந்த உடம்பு பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகும். நீண்டநாட்களாக உள்ள மனக் குறைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். வரும் புதன்கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு அடையவேண்டிய லாபங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து மனநிம்மதியுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழகைகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் வெற்றி அடையும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கி மன அமைதி குறையும் என்பதால் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சித்திரை- 2.
செவ்வாய்: சுவாதி- 1.
புதன்: சித்திரை- 1.
குரு: பரணி- 2 (வ).
சுக்கிரன்: மகம்- 4.
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்:
ஐப்பசி 1 (18-10-2023) துலா சூரியன் (அதிகாலை 1.29).
ஐப்பசி 2 (19-10-2023) துலா புதன் (அதிகாலை 1.02).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
17-10-2023 பகல் 2.20
மணிக்கு விருச்சிகம்.
19-10-2023 இரவு 9.03 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் புதன்கிழமைமுதல் 7-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆண்டுக்கோளான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள், பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஒருசில அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளி வைக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்கு செல்பவர்கள் மற்றவர்கள் பணியையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எவ்வளவு நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கமுடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்கள் செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியினைத்தரும். செவ்வாய் பிற்பகல், புதன், வியாழக்கிழமைகளில் தேவையில்லாத மன குழப்பங்கள், நிம்மதி குறைவுகள் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் ராசியாதிபதி சுக்கிரன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு உண்டு. குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் எல்லம் இருந்த இடம் தெரியாமல் மறையும். சமுதாயத்தில் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு அமையும். உங்களுக்கு இருந்த உடம்பு பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகும். நீண்டநாட்களாக உள்ள மனக் குறைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். வரும் புதன்கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு அடையவேண்டிய லாபங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து மனநிம்மதியுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழகைகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் வெற்றி அடையும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கி மன அமைதி குறையும் என்பதால் நீங்கள் எதிலும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் அனுகூலங்களை வரும் நாட்களில் அடையமுடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது உணவு விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. பங்காளிகளிடம் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியுடன் இருக்க முடியும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் ஆடம்பர செலவுகளை குறைத் துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் தீர்வு ஏற்பட்டு மன நிம்மதியுடன் தொழிலை நடத்த முடியும். வேலையாட்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறையும். தொழிலை விருத்தி செய்யவேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். பழைய கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலையில் உங்களுக்கு இருந்த தேவையற்ற வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணியாற்றமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திகொண்டால் ஒரிரு மாதங்களில் உயர்வான நிலையை அடைய முடியும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலங்கள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி, பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும். நவீனகரமான பொருட்களை குடும்பத்திற்காக வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வார தொடக்கத்தில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகளில் எல்லாம் வருகின்ற நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி லாபகரமான பலன்களை எட்ட முடியும். தொழில் வளர்ச்சிக்காக அரசுவழியில் எதிர் பார்த்த உத்தரவுகளை நீங்கள் தற்போது அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவது மட்டுமில்லாமல் எதிலும் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் பதவி உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடையமுடியும். நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். செவ்வாய், கேது 4-ல் இருப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நடப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கமுடியும். வரும் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களின் முயற்சிகள் பரிபூரணமாக வெற்றிதந்து மகிழ்ச்சி உண்டாகும். முருகனுக்கு அர்ச்சனைசெய்வது, சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ள சிறுசிறு பிரச்சினைகள் எல்லம் விலகி மனநிம்மதியும் பொருளாதார அனுகூலங்களையும் அடைவீர்கள். உங்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக அதிகரிக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத் துக்கொள்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து மன நிம்மதி அடையமுடியும். தொழிலை மேன்மைப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனைத் தரும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகுவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறையும். கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும். சக ஊழியர்களின் ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது சிறப்பு.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதாலும் 6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 2-ல் சஞ்சரிப்பதாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களிடம் விட்டுகொடுத்து செல்வது நல்லது. நீங்கள் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் அதனை உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்ப உறுப்பினர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்காது. நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட போட்டிகள் காரணமாக தட்டிப்போகும். இருக்கும் வாய்ப்புகளை முடிந்தவரை தற்காத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வு நேரம் குறையும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடிய நிலையும், அதன்மூலம் வீண் விரயங்களும் ஏற்படும். இவ்வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் குறைவதுடன் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளமுடியும். துர்க்கையம்மனை வழிபடுவது, முருகப்பெருமானை தரிசிப்பதன் மூலம் நல்லது நடக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 12 மற்றும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் பொறுமையைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்பட்டால் இருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால அலைச்சல்கள் குறையும் என்றாலும் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை அதன்காரணமாக வீண்செலவுகள் உண்டாகும். சனி 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் உத்தமம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் பகலவனை கண்ட பனி போல படிப்படியாக விலகி சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், கடந்த காலங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் இவ்வாரத்தில் உண்டு. வார தொடக்கத்தில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை போட்டு அதில் வெற்றி காண்பீர்கள். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை விரைவில் அடையக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். ஒரு பெரிய மனிதனுடைய நட்பானது உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எவ்வளவு கடினமான வேலையைக்கூட சிறப்பாக கையாளமுடியும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கும். புதன், வியாழக்கிழமைகளில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் சிறப்பான அனுகூலங்களை அடைவீர்கள். செவ்வாய்க்கிழமையன்று முருகனுக்கு அர்ச்சனைசெய்வது, ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இருக்கிற இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி கடந்தகால கடன்களை பைசல் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி மனநிம்மதி ஏற்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவது மட்டுமில்லாமல் சிலருக்கு ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். நீண்டநாட்களாக உள்ள சிக்கல்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்தவேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் எளிதில் நிறைவேறும். நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்களைப் பெறமுடியும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் கடினமான செயலைக் கூட எளிதில் முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இவ்வாரத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, பிரத்தியங்கரா தேவியை தரிசிப்பதன்மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக சிறப்பான பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். கடந்தகால தேவையற்ற இடையூறுகள் எல்லாம் விலகி உயர்வான நிலையினை எட்டமுடியும். மாதக் கோளான சூரியன், புதன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் பூர்த்தி யாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகி லாபங்களை எட்டமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துரீதியாக நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். உடன்பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பெரிய பணியைகூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. குறிப்பாக உறவினர்கள்வழியில் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருக்கவும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நீங்கள் நினைத்ததெல் லாம் நடைபெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதாரரீதியாக அனுகூலங்களும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். நீண்டநாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் எல்லாம் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களைபோட்டு அதன்மூலம் லாபங்களை அடைவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வருகின்ற நாட்களில் வருவதால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் காப்பாற்றி உங்களுக்கிருந்த கடன்களை குறைப் பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைகூட சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக வேலை தேடிகொண்டிருப்பவர்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்பு அமையும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சட்ட விதிக்கு உட்பட்டு நிதானத்தோடு செல்வது நல்லது. வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிக முக்கியமான பயணங்களை இந்த நாட்களில் மேற்கொண்டால் அதன்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் கஷ்டங்கள் குறையும். மேலும் வளமான பலன்களைபெற சிவ வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். 12-ல் சஞ்சரிக்கும் சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை சமாளிக்கும் பலம் உண்டாகும். பிள்ளைகள்வழியில் ஒருசில அனுகூலங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுக போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால் தக்க நேரத்தில் தொழிலில் அவர்கள் செய்யும் முதலீடுகள்மூலம் தொழி-ல் உள்ள பொருளாதரா நெருக்கடிகளை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வேலையில் சிறப்பாக செயல்படமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முற்பகல் காலங்களில் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயங்களை பெறுவீர்கள். துர்கையம்மனை தரிசிப்பது, வெங்கடாஜலபதி வழிபாடு மேற்கொள்வது நல்லது.