முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 2.

செவ்வாய்: ரோகிணி- 2.

Advertisment

புதன்: பூராடம்- 1 (வ).

குரு: உத்திரட்டாதி- 2.

சுக்கிரன்: திருவோணம்- 4.

சனி: அவிட்டம்- 2.

ராகு: பரணி- 1.

கேது: சுவாதி- 3.

கிரக மாற்றம்:

தை 3 (17-1-2023) கும்ப சனி (மாலை 6.04).

rr

தை 4 (18-1-2023) புதன் வக்ரம் முடிவு (மாலை 6.43).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

15-1-2023 காலை 6.48 மணிக்கு துலாம்.

17-1-2023 பகல் 1.00 மணிக்கு விருச்சிகம்.

19-1-2023 பகல் 3.17 மணிக்கு தனுசு.

21-1-2023 பகல் 2.53 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக சிறப்பான நிலைபெற்று அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஞாயிற்றுக்கிழமைமுதல் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் வருகின்ற நாட்களில் நிகழும். கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மறைமுகப் பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டுமென்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடிவருவது மட்டுமல்லாமல் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய உன்னதநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் முழுமையான பலனை அடையமுடியும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, லாப ஸ்தானத் தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருக்கும். இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது ராசியாதிபதி சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய நெருக்கடிகள் குறைந்து நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தேவையற்ற மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு உங்களின் பொருளாதாரநிலை உயரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புகளுண்டு. தொழில், வியாபாரத்தில் நிலவிய சிக்கல்கள் விலகி நல்ல வளர்ச்சி கிட்டும். போட்ட முதலீடுகளை எளிதில் அடையக்கூடிய யோகமுண்டாகும். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். கடினமான பணி களைக்கூட நீங்கள் சுலபமாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். முருக வழிபாடு, மகாலட்சுமியை வணங்குவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் ஒவ்வொரு செய-லும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக மனநிம்மதிக் குறைவுகள், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உற்றார்- உறவினரிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி என்னவென்றால் நீண்டநாட்களாக நடைபெற்ற அஷ்டமச் சனியானது 17-ஆம் தேதியுடன் முழுமையாக முடிவடையவிருப்பது அற்புதமான அமைப்பாகும். 17-ஆம் தேதிமுதல் சனி 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் விலகுவது மட்டுமல்லாமல், ஆரோக்கிய பாதிப்புகளும் படிப்படியாகக் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பொறுமையோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையுமென்றாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டு அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாம-ருப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதிகப்படியான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, சூரிய நமஸ்காரம் செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 9-ல் குரு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளா தாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அன்யோன் யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக லாபகரமான பலன் களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் யோகமுண்டு. உத்தியோகத் தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலையில் இருந்துவந்த பணிச்சுமை குறைவ தால் உங்கள் கவலைகள் விலகும். அதிகாரியிடம் சுமூகமான சூழ்நிலை நிலவுவதால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.

rasipalan

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். எந்தவித பிரச்சினைகளையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய மனவ-மை இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் உத்தமம். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகளைக் கலந் தாலோசித்து செயல்படுவதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான சூழ்நிலை உண்டாவது மட்டுமல்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிதரும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு சகலவிதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 4-லும், சுக்கிரன் 5-லும், குரு 7-லும் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகளுண்டு. நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் சனி 17-ஆம் தேதிமுதல் 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் வாழ்வில் வரும் நாட்களில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகளெல்லாம் விலகி சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறும். தொழி-ல் உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் விலகி நிம்மதி ஏற்படும். நவீன யுக்திகளைப் பயன்படுத்தி சமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கிருந்த பணிச்சுமைகள் படிப்படியாக விலகி மகிழ்ச்சி யுண்டாகும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர் களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தி-ருந்து அழைப்புவரும் நேரமாகும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செய-ல் ஈடுபட்டாலும் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனை தரிசிப்பது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நேரமாகும். உடனிருப்பவர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். குடும்ப ஒற்றுமை பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். உங்கள் ராசிக்கு தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சனி 17-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுவந்த அர்த்தாஷ்டமச்சனி முடிகிறது. இதனால் உங்களுக்கு நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள், அலைச்சல் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் யோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் வாக்கு வாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்க லாம். வாகனங்களில் பொறுமையோடு செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் குறையும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியா கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகளுண்டு. பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் சகலவிதத்தி லும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுக்கிருந்த கடந்தகால நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து நல்ல பலன் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நன்றாக இருப்பதால் பல்வேறு காரியங்களை எளிதில் செய்துமுடித்து விடுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்டநாட்களாக நிலுவையி-ருக்கும் சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து மன நிம்மதி ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் வெற்றியடைவதுடன் அதிக படியான ஆதாயங்களை அடையும் யோக முண்டு. முருகருக்கு அர்ச்சனைசெய்வது, மகா லட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் கஷ்டங்கள் விலகி வளமான பலன்கள் ஏற்படும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களுக்குப் பல்வேறு வளமான பலன்கள் கிடைக்கும். பணப் பற்றாக் குறைகள் விலகி தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தற்போது உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி 17-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் உங்களுக்கு நடைபெற்று வந்த ஏழரைச்சனி முடிகிறது. நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து இனி உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த நீண்டநாள் தொல்லைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி லாபங்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படும். குறிப்பாக உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் குறைந்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் தகுதிக்கான கௌரவமான நிலையை அடைவீர்கள். வேலைப்பளு குறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். பெரிய நிறுவனத்தி-ருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வரும் நாட்களில் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். முத-ல் நீங்கள் எதிலும் பொறுமையாக இருக்கவேண்டும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கிய வர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். ராகு 4-ல், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலையுண்டாகும். பங்காளியிடம் பேசும்பொழுது பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனையடைய இடையூறுகள் ஏற்படும். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. சிலநேரங் களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் எடுத்த வேலைகளை முடிக்கமுடியும். சட்ட ரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் அரசு அதிகாரியிடம் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மனநிம்மதி குறையும். சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். வரும் வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்தி கரமாக இருக்கும் நிலையும், எடுத்த காரியத் தைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்கும் பலமும் உண்டாகும். புதன் லாப ஸ்தானத் தில் இருப்பதால் எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு பல்வேறு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலமுண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு சிறப் பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியத் தடைகள் விலகும். சூரியன், சுக்கிரனுடன் 12-ல் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது சிறப்பு. செவ்வாய் 4-ல் இருப்பதால் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி சிறப்பான நிலையை அடைவீர்கள். உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதியுண்டாகும். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் இலக்கை அடையமுடியும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவதும், முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். ஜென்ம ராசியில் குரு, 2-ல் ராகு சஞ்சரிப்ப தால் ஒவ்வொரு செய-லும் யோசித்து செயல்படவேண்டிய காலமாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினை களுக்குத் தற்போது நல்ல தீர்வுகிடைக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்துரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்குமென்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சில இடர்ப்பாடுகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் அதனை சமாளிக்கும் பலமுண்டாகும். தொழில் விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் செய்யுமிடத்தில் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதாலும், எந்திரங்கள் பழுதாவதாலும் வீண்செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு உடன் வேலைசெய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் எதையும் சிறப் பாகக் கையாளக்கூடிய பலமுண்டாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால மனக்கவலைகள் குறையும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பணவரவு நன்றாக இருந்து உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். விநாயகர் வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை களில் வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்பு.